கொள்கையில் உறுதியாக நின்ற கொரட்டாலா சத்யநாராயணா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலை மைக் குழு உறுப்பின ராக இருந்த தோழர் கொரட்டாலா சத்யநாராயணா 1923ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி பிறந்தார். 1939ஆம் ஆண்டு பள்ளிக் கல்வியின் பொழுதே மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தினார். அப்பொ ழுது ஆந்திரா மாணவர் இயக்கத்தின் தலைவராக இருந்த பசவபுன்னையா வை சந்தித்தார். அது அவரை கம்யூ னிஸ்ட் இயக்கத்துக்கு இட்டுச் சென்றது. 1942ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி யில் இணைந்தார். இவரது நடவ டிக்கையால் கோபமடைந்த அவரது தந்தை கல்விக்கு பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். தோழர் பசவபுன்னையா, ஹனுமந்தராவ் ஆகியோர் அவரது கல்வி முழுமைபெற உதவினர். 1946ஆம் ஆண்டு கட்சியின் முழுநேர ஊழியரானார். தெலுங்கானா போராட்டத்தில் முக்கி யப் பங்காற்றிய தோழர் சத்ய நாரா யணா பின்னர் மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பொழுது அதில் தன்னை இணைத்து கொண்டார். திருத்தல்வா தத்துக்கு எதிராகவும் இடது சீர்குலைவு வாதத்துக்கு எதிராகவும் போராடினார். மாநில காங்கிரஸ் அரசாங்கம் விவசாயி களின் நிலத்தை பறிக்க முயன்ற பொ ழுது 80,000 விவசாயிகளை திரட்டி போராடி நிலப் பறிப்பை தடுத்தார். 1967ஆம் ஆண்டு மாநிலக் குழுவுக் கும் 1978ஆம் ஆண்டு மாநில செயற் குழுவுக்கும் தேர்வு செய்யப்பட்டார். 1982ஆம் ஆண்டு மத்தியக் குழு வுக்கு தேர்வு செய்யப்பட்ட அவர் இறுதி வரை அந்த பொறுப்பில் நீடித்தார். 1991ஆம் ஆண்டு கட்சியின் மாநிலக் குழுச் செயலாளராக தேர்வு செய்யப் பட்டார். 2002ஆம் ஆண்டு அரசியல் தலைமைக் குழுவுக்கு தேர்வு செய்யப் பட்டார். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர் ஆந்திராவில் விவசாயத் தொழிலாளர் இயக்கத்தை வளர்த்தெடுப்பதில் மிக முக்கியப் பங்காற்றினார். 4.5 ஆண்டுகள் தலைமறைவு வாழ்வும் 3 ஆண்டுகள் சிறை வாழ்வும் எதிர் கொண்டார். தனது 83ஆவது வயதில் 2006ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி புற்றுநோய் காரணமாக காலமானார்.