திருவனந்தபுரம், ஆக.13- கேரளத்தில் 2023-24 கல்வியாண்டில் அரசு - உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் 34.05 லட்சம் மாணாக்கர் உள்ளதாக அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்தார். அரசு - உதவி பெறும் மற்றும் உதவிபெறாத பள்ளிகளில் மொத்த மாணாக்கர் எண்ணிக்கை 37.46 லட்சம். மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் 10,164 குழந்தைகளும், இரண்டு முதல் பத்தாம் வகுப்பு வரை புதிதாக 42,059 குழந்தைகளும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்தார். புதிதாக எட்டாம் வகுப்பில் அதிக எண்ணிக்கையில் மாணாக்கர் சேர்க்கை 17,011-ஆக உள்ளது. 5ஆம் வகுப்பில் 15,529 புதிதாக மாணாக்கர் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அரசு - உதவி பெறும் மற்றும் உதவி பெறாத பள்ளிகளில் மாணாக்கர் எண்ணிக்கை 38.33 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் 2.68 லட்சம் குழந்தைகளும், 10ஆம் வகுப்பில் 3.95 லட்சம் குழந்தைகளும் சேர்ந்துள்ளனர். அதாவது இந்த ஆண்டு மேலும் 1,27,539 குழந்தைகள் வந்தால்தான் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு 2 முதல் 10ஆம் வகுப்பு வரை 42,059 குழந்தைகள் நுழைந்துள்ளதைக் காணலாம். 2022-23 ஆம் ஆண்டில் மொத்தம் 38,33,399 குழந்தைகள் அரசு - உதவி பெறும் - உதவி பெறாத துறைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகளின் ஆதார் உள்ளிட்ட தகவல்களை சரிபார்த்து இந்த ஆண்டுக்கான பணியிடங்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்கான குழந்தைகளின் விவரங்கள் (பள்ளி வாரியான புள்ளிவிவரங்கள் உட்பட sametham.kite.kerala.gov.in என்கிற போர்ட்டலில்கிடைக்கின்றன. மாவட்ட அளவில் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால், மலப்புரம் மாவட்டத்தில் அதிக குழந்தைகள் (20.73%), பத்தனம்திட்டா மாவட்டம் (2.21%) குழந்தைகள் உள்ளனர். மாவட்ட அளவில் முந்தைய ஆண்டை விட அரசு துறையில் கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் இந்த கல்வியாண்டிற்கான மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில், பாலக்காடு தவிர அனைத்து மாவட்டங்களிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தக் கல்வியாண்டில் மொத்தக் குழந்தைகளில் 56 சதவிகிதம் (20,96,846) பேர் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளனர். 44சதவிகிதம் (16,49,801) பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர்.