சந்திப்பு: வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன் தமிழில்: அ.குமரேசன்
இந்தச் சூழலில், இந்தியாவின் ஜனநாயகத்தையும், கடுமையாகப் போராடி பெற்ற சுதந்திரத்தையும், நமது அரசமைப்பு சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ள மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க, பாஜக தனிமைப்படுத்தப்படுவதும் முறியடிக்கப் படுவதும் முற்றிலும் முக்கியத் தேவையாகிறது. ஆனால், முதலிலேயே நான் சொன்னது போல, இந்தப் போராட்டத்திற்குக் குறுக்குவழிகள் கிடையாது. பாஜக-ஆர்எஸ்எஸ் வஞ்சக ஆட்டங்களைக் கண்டு வந்திருக்கிற, அவர்களது சதிகளால் சலிப்படைந்துள்ள மக்கள், பஞ்சாப், தமிழ்நாடு, கேரளம் போன்ற சில மாநிலங்களில், தற்போதைய சூழலில் சாத்தியமான வகையில் சங் பரிவாரத்திற்கு மாற்றைத் தேடுகிறார்கள்.
கேள்வி: கண்ணூர் மாநாட்டில் நீங்கள் உங்கள் தொடக்க உரையிலும் நிறைவுரையிலும் நான்கு விஷயங்களுக்கு அழுத்தம் கொடுத்தீர்கள். மக்களுக்கு அதிகரித்து வரும் பொருளாதாரச் சிரமங்கள், குறிப்பாக விவசாயிகளின் துயரங்க ளும் குமுறவைக்கும் வேலையின்மை; அரசிய லில் தொடரும் வலதுசாரித் திருப்பம் மதவாத அணித் திரட்சி; சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற ஓராண்டுகால விவசாயிகள் போராட்டம் உள்பட மோடி அரசின் கொள்கை களுக்கு எதிரான வெகுமக்கள் இயக்கங்கள்; இடது சாரிக் கட்சிகள், திமுக உள்ளிட்ட மாநில மதச்சார் பற்ற கட்சிகளின் எதிர்ப்பு ஆகியவையே அந்த நான்கு விஷயங்கள். இவற்றைக் கையாள்வதில் கட்சியின் பொதுச்செயலாளராக மூன்றாவது முறை யாகப் பொறுப்பேற்றிருக்கிற உங்களின் திட்டம் என்ன?
பதில்: இந்த எல்லா அம்சங்களும் இவற்றோடு சம் பந்தப்பட்ட பிரச்சனைகளும் தனித்தனியாகவும் ஒரே நேரத்திலும் கையாளப்பட வேண்டியவை.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக இதைச் செய்து வருகிறது. உங்களுக்கே தெரி யும், சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்க ளை எதிர்த்து நடைபெற்ற ஓராண்டு காலப் போராட் டம், விவசாயக் களத்தில் ஒரு பத்தாண்டு காலமாக நடந்திருக்கிற பல்வேறு போராட்டங்களின் உச்சம் தான். விவசாயிகளின் கடுமையான பொருளாதாரத் துயரத்தை முன்வைத்து அந்தப் போராட்டங்கள் நடந்தன. ஹைதராபாத்தில் நடைபெற்ற முந்தைய மாநாடு, விவசாயக் களத்தின் இந்தப் போராட்டங்க ளைக் குறிப்பாக எடுத்துக்கொண்டது. 2018இல் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமை யில் நில உரிமை இயக்கத்தில் (பூமி அதிகார் அந்தோ லன்) 165க்கு மேற்பட்ட அமைப்புகள் எப்படிப் பங் கேற்றன என்பது பற்றி அந்த மாநாடு சுட்டிக்காட்டி யது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தப் போராட் டங்கள் மேலும் வலுப்பெற்றுள்ளன, தீவிரமடைந் துள்ளன என்பது தெளிவு. விவசாயிகளின் சங்கங்கள், இதர வேர்மட்ட இயக்கங்கள், இடதுசாரி கள் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் பெருந்திர ளான கூட்டுச் செயல்பாட்டிற்கு இந்தப் போராட்டங் கள் இட்டுச் சென்றுள்ளன. சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற ஓராண்டு கால விவசாயிகள் போராட்டத்தில் இதுதான் பிரதிபலித்தது.
குமுற வைக்கும் வேலையின்மைத் துயரம் நேரடியாக இளைஞர்களைத் தாக்குகிறது. இந்தி யாவின் மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் அவர்கள்தான். மக்கள்தொகை அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த இளைய சமுதாயம் நரேந்திர மோடி அரசாலும் பாஜக-வாலும் வஞ்சிக் கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு அளிக்கப் பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் பொய்யாக்கப் பட்டுவிட்டன. இந்தத் துரோகத்தால் இளைஞர்க ளுக்கு ஏற்பட்டுள்ள கோபம் நாடு முழுக்கத் திரும்பத் திரும்ப வெளிப்படுகிறது. தன்னெழுச்சியான தீவிர மான வெளிப்பாடுகளைக் காணமுடிகிறது. ஆனால் அந்த வெளிப்பாடுகள் பெரும்பாலும் அமைப்பு சார்ந்த திட்டமிடலோ, கட்டமைப்போ இல்லாமல் நடைபெறுகின்றன. 23ஆவது மாநாடு இந்த நிகழ்ச்சிப் போக்குகளைக் கவனத்தில் கொண்டது. வேலையின்மைப் பிரச்சனையையும் ஒட்டு மொத்தத்தில் இந்திய மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு அது ஏற்படுத்தியுள்ள துயரத்தை யும் கையில் எடுத்துக்கொள்வதற்கான ஒரு தெளிவான அமைப்புசார்ந்த திட்டத்தை உருவாக்க முடிவு செய்திருக்கிறது. நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று – கோவிட் பெருந்தொற்று வேலை இழப்புகளை யும் வாய்ப்புகள் மறுக்கப்படுவதையும் தீவிரப் படுத்தியிருக்கிறது. வாடுகிற மக்கள் அனைவ ருக்கும் நிவாரணம் அளிப்பதிலிருந்துவெகு தொலைவு விலகி, பாஜக அரசு பெட்ரோலியப் பொருள்களின் விலைகளைத் தினமும் உயர்த்திப் பொருளாதாரச் சுமைகளைத் தொடர்ந்து சுமத்தி வருகிறது. இது பல மடங்கு பணவீக்கத்துக்கு இட்டுச்செல்கிறது.அதிகரித்துவரும் வேலை யின்மை, வறுமை, பட்டினிக்கு மேலாக இது மக்க ளின் வாழ்க்கையைச் சூறையாடுகிறது.ஆனால் மோடி அரசுக்கு இது பற்றியெல்லாம் சிறிதும் கவலை யில்லை.
ஒத்த கருத்துள்ள அமைப்புகளோடும் கட்சிக ளோடும் ஒரு விரிந்த மேடையில் இந்தப் பிரச்சனை களை எடுத்துக்கொள்வதற்கான அமைப்பு சார்ந்த முயற்சிகளையும், பரப்புரை இயக்கம் சார்ந்த முயற்சிகளையும் கட்சியின் அகில இந்திய மாநாடு முடுக்கிவிட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தின் முடிவு பெறாத பணிகளோடு இந்த இயக்கம் மேற்கொள்ளப்படும்.வேளாண் சட்டங்க ளை விலக்கிக் கொண்டபோது அளித்த வாக்குறுதி களை நிறைவேற்றுவதில் மோடி அரசின் அப்பட்ட மான துரோகத்தையும் முன்வைத்து இயக்கம் தீவிரப்படுத்தப்படும்.
கேள்வி: குறிப்பான பிரச்சனைகளையும் கொள்கை களையும் சட்டங்களையும் இந்த இயக்கங்கள் எவ்வளவுதான் வெற்றிகரமாக எடுத்துக்கொண்டா லும், அரசியல் மட்டத்திலும் தேர்தலிலும் பிரதி பலிக்காத வரையில் இந்த இயக்கங்களால் ஒரு நிலையான தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? பல ஆண்டுகளாகவே மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் செங்கொடி யின் கீழ் பெருந்திரள் மக்கள் போராட்டங்கள் நடைபெறுவதாகக் கூறி வருவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் தேர்தல் வாக்குப் பதிவு என்று வருகிறபோது அந்தப் போராட்டங்க ளில் பங்கேற்ற அதே மக்கள் பச்சைக்கொடியையோ காவி கொடியையோ தூக்குவதைப் பார்க்கிறோம்.இப்போதும் அதே நிலைமைதான் இருக்கிறது என்பது உண்மைதானே? விவசாயிகள் போராட் டத்தில் விவசாயிகள் சங்கம் பெருந்திரளாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பங்கேற்றது என்ற போதிலும், கடந்த சில ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தல்களில் இடதுசாரிகளால் திட்டவட்டமான அரசியல் பலனை அடைய முடியவில்லையே…
பதில்: தான் மேற்கொண்டுள்ள பணிகளை நிறை வேற்றுவதற்குக் குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்கு அறியும். மக்களிடையே பரவலாக ஒரு இந்துத்துவ அடையாளம் பற்றிய கருத்தாக் கத்தை உருவாக்குவதில் ஆர்எஸ்எஸ், பாஜக இரண்டும் வெற்றி பெற்றுள்ளன.வெறுப்பும் வன்முறையும் பரவுவதன் மூலம் மதவாத அடிப்படை யில் அணிபிரிப்பது கூர்மையாவது இந்திய சமு தாயத்தை இரு துருவங்களாகப் பிரிக்கிறது. ஆர்எஸ்எஸ்-பாஜக அரசியலாகவும் தேர்தலுக்கா கவும் மக்களைத் திரட்டுவதற்கான மையத் தளமே இவ்வாறு அணிபிரிவது கூர்மையடை கிற போக்குதான்.. உண்மையில் மதவாத அடிப்படையிலும் குறுகிய கண்ணோட்டங்களுட னும் பிளவுபடுத்தப்படுவதை மீறி, மக்களின் மைய மான பிரச்சனைகளுக்காகவும் பொருளாதாரத் துயரங்களை எதிர்த்தும் பெருந்திரள் இயக்கங்கள் எழவே செய்கின்றன. ஆனால் ஆர்எஸ்எஸ் தலை மையிலான சங்பரிவாரத்தின் பிரச்சார எந்திரம் திட்டமிட்ட முறையில் நாட்டின் பல்வேறு பகுதி களில் திசைதிருப்புகிற பிளவுபடுத்துகிற பிரச்சனை களை முன்னுக்குக் கொண்டுவருகிறது. வெறும் மூன்று மாத காலத்தில் கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சனையைக் கிளப்பிவிட்டது. அதை நாடு முழுவதும் பரப்ப முயல்கிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்றதொரு முன்னணிக் கல்வி நிறுவனத்தின் அறிவார்ந்த, சுதந்திரமான பண்பாடு, சங் பரிவார அடியாட்களின் வன்முறை உள்ளிட்ட வழிமுறைகளில் தாக்கப்படுகிறது. அந்த வரிசையில் கடைசியாக வந்ததுதான் ராம நவமி விழாவில் அசைவ உணவுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதல்கள்.
எளிமையாகச் சொல்வதென்றால், எங்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது தாக்கு தல்கள் தொடுக்கப்படுகின்றன. பாஜக எதிர்ப்பா ளர்கள் மீது மத்திய விசாரணை முகமைகள் ஏவப்படு கின்றன.அரசாங்கத்துடன் மாறுபடுவது தேச விரோதச் செயலாகச் சித்தரிக்கப்படுகிறது.மோடி ஆட்சிக்கு எதிராகக் கருத்துக்கூறுபவர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் போடப்படுகின்றன. இந்தச் சூழலில், இந்தியாவின் ஜனநாயகத்தை யும், கடுமையாகப் போராடி பெற்ற சுதந்திரத்தை யும், நமது அரசமைப்பு சாசனத்தில் பொறிக்கப் பட்டுள்ள மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க, பாஜக தனிமைப்படுத்தப்படுவதும் முறியடிக்கப் படுவதும் முற்றிலும் முக்கியத் தேவையாகிறது. ஆனால், முதலிலேயே நான் சொன்னது போல, இந்தப் போராட்டத்திற்குக் குறுக்குவழிகள் கிடை யாது. பாஜக-ஆர்எஸ்எஸ் வஞ்சக ஆட்டங்களைக் கண்டு வந்திருக்கிற, அவர்களது சதிகளால் சலிப்ப டைந்துள்ள மக்கள், பஞ்சாப், தமிழ்நாடு, கேரளம் போன்ற சில மாநிலங்களில், தற்போதைய சூழலில் சாத்தியமான வகையில் சங் பரிவாரத்திற்கு மாற்றைத் தேடுகிறார்கள். கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அணியின் வெற்றியையும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியையும், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் வெற்றியையும் இந்தப் பின்னணியில்தான் காண வேண்டும். தமிழ்நாட்டில் திமுக அணியில் எங்கள் கட்சியும் அங்கம் வகிக்கிறது.
கேள்வி: பாஜக-வைத் தனிமைப்படுத்துவதும், முறி யடிப்பதும் முக்கியத் தேவை என்று வலியுறுத்துகிற நீங்கள், காங்கிரஸ் கட்சி இந்துத்துவா பிரச்ச னையில் தனது நிலைபாடு என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டும் என்றும், தனது அமைப்பை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறீர்களே…
பதில்: மதச்சார்பின்மையில் எங்களுக்குள்ள தீர்மான கரமான உறுதிப்பாட்டின் வலிமையிலிருந்தும், மதவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் சமரசமின்றி அதை எதிர்ப்பதன் வலிமையிலிருந்தும் அதை நாங்கள் சொல்கிறோம். குறிப்பாக மதவாதத்தின் பெரிய வகையான, சங்பரிவாரத்தால் தீவிரமாகப் பரப்பப்படுகிற இந்துத்துவா மதவெறியை எதிர்ப்ப தன் வலிமையிலிருந்து அதை நாங்கள் சொல்கி றோம். இந்துத்துவா தொடர்பான நிலைப்பாட்டில், மென்மையான இந்துத்துவா ஏற்கத்தக்க அரசியல் வழியாக இருக்குமா என்றெல்லாம் குழப்பம் இருப்பது உங்களுக்கு உகந்ததல்ல. இதில் தெளிவாக இருப்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால், மோடி தலைமையிலான பாஜக அரசு, மதவாதம்-கார்ப்பரேட் கூட்டின் மூலம் மக்கள் மீது பலமுனைத் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. தீவிரமான நவீன தாராளமயச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது, தேசத்தின் சொத்துகளைச் சூறையாடுவது, கூட்டுக் களவாணி முதலாளித்துவத்தை வளர்ப்பது, அரசியல் ஊழலைச் சட்டப்பூர்வமாக்குவது, முழுமையான அதிகாரமயமாக்கலைத் திணிப்பது உள்ளிட்ட பலமுனைத் தாக்குதல் நடத்தப்படுகிறது. பாஜக-வையும் அதன் கூட்டாளிகளையும் எதிர்த்துப் போராடுகிறவர்கள் இந்த நிலைமைகளைப் புரிந்து கொண்டாக வேண்டும்.
கேள்வி:அரசியல் பத்திரிகையாளர்கள் என்ற முறையில் நாங்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உங்களது அரசியல் கருத்துக்களை மிகவும் மதிக்கிறார் என்று கேள்விப்படுகிறோம். தனிப்பட்ட உரையாடல்களில் அவர் உங்களை “பாஸ்” என்று குறிப்பிடுவதாகவும் எங்களுக்குச் சொல்லப்படுகிறது. ஆனாலும் மத வாதப் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியின் அணுகு முறை குறித்து நீங்கள் இத்தகைய கருத்தை முன் வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்…
பதில்:எனக்கு மதச்சார்பற்ற கட்சிகளின் தலை வர்களோடு பல மட்டங்களிலும் நட்பு உண்டு. மதவெறிக்கு எதிராகத் தொடர்ச்சியான, உறுதியான போராட்டம் நடத்துவதன் தேவை குறித்து அவர்கள் எல்லோரிடத்திலும் நான் பேசி வருகிறேன். எனது வாழ்க்கையைப் பொறுத்தவரை யில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரையில், கட்சியில் எங்களது சக தோழர்களைப் பொறுத்தவரையில் தீவிர இந்துத்துவ மதவாத சக்திகளை முறியடிப்பது எங்களது முதன்மையான நோக்கமும் பணியுமாகும். இந்தப் போராட்டத்தில் உறுதிப்பாட்டுடன், திட்டவட்டமான முறையில் இணையக் கூடிய எவருடனும் சேர்ந்து செயல்பட நான் தயாராக இருக்கிறேன்.
ஆனால், காங்கிரஸ் கட்சியைப் பற்றிச் சொல்வது இதர பல மாநிலக் கட்சிகளுக்கும் பொருந்தும். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள், பிஜு ஜனதா தளம் கூட, இந்துத்துவ மதவாதம் பற்றிய பிரச்சனையில் என்ன நிலைபாடு கொண்டிருக்கிறார்கள் என்பது யாருக்கும் நிச்சயமாகத் தெரியாது. மதவெறிக்கு எதிராக உறுதிப்பாட்டுடன், திட்ட வட்டமான முறையில் போராட வேண்டியதன் தேவை குறித்து அவர்களுடனும் நான் பேசி வருகிறேன். எங்கள் தரப்பில், அனைத்து இடது சாரி, ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து, ஒரு கூட்டு முன்னணியை உருவாக்குவதற்கு இடது சாரிக் கட்சிகள் தெளிவான முறையில் பாடுபட்டு வருகிறோம்.
தொடரும்...