2010ஆம் ஆண்டில் ஐந்து உரத்திலும் ஒரு மூட்டை வீதம் வாங்கினால் மொத்தம் ரூ.1540 மட்டுமே. 2023 பிப்ரவரி 28இல் இந்த ஐந்து உரத்திலும் ஒரு மூட்டை வீதம் வாங்கினால் ரூ.5281.50 கொடுத்து வாங்க வேண்டும். ரூ.3741.50 கூடுதலாக கொடுத்து தற்போது வாங்க வேண்டும். அதாவது 3.5 மடங்கு பணம் கூடுதலாக கொடுத்து வாங்க வேண்டும்.
எண் உரங்களின் பெயர் 2010 விலை நிலவரம் (ரூபாய்) 2023 பிப் 28ல் விலை நிலவரம் (ரூபாய்) விலை வித்தியாசம் (ரூ)
1. யூரியா 220 (50 கிலோ) 266.50 (45 கிலோ) 46.50
2. பொட்டாஷ் 280 1700.00 1420.00
3. சூப்பர் பாஸ்பேட் 140 495.00 355.00
4. டி.ஏ.பி
(டை அமோனியம்
பாஸ்பேட்) 450 1350.00 900.00
5. காம்ப்ளக்ஸ்
(17-17-17) 450 1470.00 1020.00
மொத்தம் 1540 5281.50 3741.50
இந்திய விவசாயிகள் இனிமேல் இரட்டிப்பு வரு வாய் கிடைத்து சுபிட்சமாக வாழ்வார்கள்; அது வெகுதூரத்தில் இல்லை. 2022ஆம் ஆண்டில் அது நடக்கும் என்று 2016ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஆனால் தற்போது நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பார்ஷி பகுதியில் ராஜேந்திர துக்காராம் சவான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செல்வ தற்காக வேளாண் விளை பொருள் விற்பனை கூடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் கடு மையான விலை வீழ்ச்சியின் காரணமாக ஒரு குவிண்டால் வெங்காயம் ரூ.100க்கு விலை போயுள்ளது. அதாவது ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் 512 கிலோ வெங்காயம் விற்பனை செய்த இவருக்கு ரூ.512 மட்டுமே கிடைத்துள்ளது. அதில் லாரி வாடகை, சுமை கூலி என ரூபாய் 510 செலவு செய்துள்ளார். அதன்படி மீதமுள்ள இரண்டு ரூபாய் மட்டுமே விவசாயி துக்காராமுக்கு கிடைத்துள் ளது. வெங்காயத்தை வாங்கிய கடைக்காரர் விவசாயி டம் இரண்டு ரூபாய்க்கான காசோலையை வழங்கி யுள்ளார். விவசாயி இந்த இரண்டு ரூபாயையும் வங்கியில் தான் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள் ளது. இதனால் விவசாயி துக்காராம் கடும் வேதனை அடைந்துள்ளார்.
கொந்தளித்த விவசாயிகள்
ஆசியாவின் மிகப் பெரிய வெங்காயச் சந்தை நாசிக் லசல்காவ் ஏபிஎம்சி (Agricultural Produce Market Committee) மார்க்கெட். இந்த சந்தையில் வெங்காயம் ஏலம் விடப்பட்டுள்ளது. கிலோவுக்கு ரூ.1, ரூ.2, ரூ.3 ஆகிய விலைகளில் ஏலம் போனதால் விவசாயிகள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.1500 வரை இழப்பீடு வழங்கிடவும், அவர்களின் விளை பொருட்களை கிலோ ரூ.15 முதல் 20 வரை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ள னர். இதைச் செய்யாவிட்டால் லசல்காவ் வேளாண் விளை பொருள் சந்தைக் குழுவில் ஏலத்தை தொடர அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த விலை வீழ்ச்சி வெங்காயத்திற்கு மட்டுமல்ல. எல்லா பயிர்களுக்கும் விலைவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகள் விலை வீழ்ச்சியால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள னர். இதனால் மனமுடைந்து விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு போய்விட்டனர். இக்காலத்தில் விவசாயிகளின் தற்கொலையும் அதிகரித்துள்ளது. மறுபுறத்தில் விவசாயிகள் பயன்படுத்தும் இடுபொ ருட்களின் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள் ளது. விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் உரத்தின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 2010-11ஆம் ஆண்டில் உரத்தின் விலை விபரம் மற்றும் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 28இல் உரத் தின் விலை விபரம் அட்டவணையில் உள்ளது.
மூன்றரை மடங்கு விலையேற்றம்
2010ஆம் ஆண்டில் 50 கிலோ யூரியா மூட்டை ரூ.220. 2023 பிப்ரவரி 28இல் 45 கிலோ யூரியா மூட்டை ரூ.266.50. யூரியாவின் விலை ரூ.46.50 உயர்ந்துள்ளது. 5 கிலோ எடையும் குறைக்கப்பட்டுள்ளது. அது போல் டை அமோனியம் பாஸ்பேட் (டி.ஏ.பி) விலை ரூ.450 ரூபாயிலிருந்து 1350 ரூபாயாக உயர்ந்துள்ளது. தற்போது 900 ரூபாய் கூடுதலாக கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. பொட்டாஷ் ரூ.280லிருந்து ரூ.1700 ஆக உயர்ந்துள்ளது. ரூ.1420 கூடுதலாகியுள்ளது. காம்ப்ளக்ஸ் 17-17-17 ரூ.450லிருந்து ரூ.1470 ஆக உயர்ந்துள்ளது. ரூ.1020 கூடுதலாக கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. 2010ஆம் ஆண்டில் ஐந்து உரத்திலும் ஒரு மூட்டை வீதம் வாங்கினால் மொத்தம் ரூ.1540 மட்டுமே. 2023 பிப்ரவரி 28இல் இந்த ஐந்து உரத்திலும் ஒரு மூட்டை வீதம் வாங்கினால் ரூ.5281.50 கொடுத்து வாங்க வேண்டும். ரூ.3741.50 கூடுதலாக கொடுத்து தற்போது வாங்க வேண்டும். அதாவது 3.5 மடங்கு பணம் கூடுதலாக கொடுத்து வாங்க வேண்டும். இந்த விலை அரசு நிர்ணயித்தது. ஆனால் உரம் பதுக்கல், தட்டுப்பாடு போன்ற காரணங்களால் தனியார் உரக்கடைகளில் 5 முதல் 6 மடங்கு அள விற்கு விலை கூடுதலாக கொடுத்து உரம் வாங்க வேண்டியுள்ளது. இதனை தடுப்பதற்கு பதிலாக ஒரே பெயரில் நாடு முழுவதும் உரம் கிடைக்கும் என்று புதுமை(!) திட்டத்தை பிரதமர் அறிவித்துள்ளார். அதன் பிறகும் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. விலையும் அதிகரித்துள்ளது.
வேதனையை வேடிக்கை பார்க்கும் மோடி
விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம் என்று தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பேசி வருகிறார். மூன்று வேளாண் சட்டம் கொண்டு வந்த போதும் அவ்வாறே பேசினார். “ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்” என்று கிராமத்தில் பழமொழி உண்டு. பாஜகவின் ஒன்பது ஆண்டு ஆட்சியில் விவசாயிகள் எவ்வளவு பணம் விவசாயத்திற்கு கூடுதலாக செலவு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள உர விலை ஒரு உதாரணம். இன்னும் விதை, மருந்து, உழவடைப் பணிகள், களை பறித்தல், கடன் அதற்கான வட்டி, உழைப்பு, இயற்கை இடர்பாடுகள் உள்ளிட்ட பலவகைகளில் கூடுதலாக செலவு செய்து பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.
விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைப்பதில்லை. ஒன்றிய அரசு அறிவிக்கின்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படுவதில்லை. அரிசி, கோதுமை மட்டும் சிறிய அளவில் அரசு அறிவித்த விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. அரிசி, கோதுமை உள்ளிட்ட 23 வகையான பொருட்களை யும் தனியார் அவர்கள் விருப்பம் போல் விலை தீர்மானித்து கொள்முதல் செய்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றனர். இதனை ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. 2010ஆம் ஆண்டு ஒரு கிலோ வெங்காயம் ரூ.60க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ரூ.1க்கும் ரூ.2க்கும் கொள்முதல் நடைபெறுவதை அனைவரும் அறி வோம். ஆனால் ஒன்றிய அரசு இப்போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கு உதாரணமாக ஏற்கெனவே நரேந்திர மோடி அரசுக்கு விவசாயிகள் பாடம் புகட்டியுள்ளனர் என்பதை நாம் அறிவோம். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்க ளுக்கு சரியான விலை கிடைக்க மத்திய சட்டம் வேண்டும் என்பதும், விவசாயிகள் பயன்படுத்தும் இடுபொருட்களின் விலைகளை கட்டுப்படுத்திடவும் வலியுறுத்தி இந்தியாவில் மீண்டும் விவசாயிகளின் எழுச்சி நடைபெறும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அதற்கான முன்னோட்டமாக 2023 ஏப்ரல் 5இல் தில்லியில் 10 லட்சம் விவசாயிகள் - தொழிலாளர் கள் ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத கொள்கை களை எதிர்த்து முழக்கமிட உள்ளனர். இந்த சங்க மத்தில் அனைத்து பகுதி விவசாயிகளும் ஒன்றிணை வோம்.
கட்டுரையாளர் : மாநிலப் பொருளாளர்,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.