articles

img

தோள்சீலைப் போராட்டம் - 200ஆம் ஆண்டு அய்யா வைகுண்டர் வரலாறு

தந்தை : பொன்னுமாடன்
தாய் : வெயிலாள் அம்மையார்
ஊர் : சாஸ்தான் கோயில்விளை
பிறப்பு : கி.பி.1809 ஆம் ஆண்டு
பெயர் : முடிசூடும் பெருமாள் 
(அரசின் அச்சுறுத்தலால் பொன்னுமாடனோடு கலந்து பேசி திண்ணைப் பள்ளி ஆசிரியர் ‘முத்துக்குட்டி’ என பெயரை மாற்றி வைத்தார்) இறைநிலை கண்டபிறகு வைகுண்ட சாமியானார்.
திருமணம் : 1825 ஆம் ஆண்டு
மனைவி : பரதேவதை (திருமாலம்மை)
வாரிசுதாரர் : பால்பையன் என்ற பொதுக்குட்டி
நோய் கண்டது : 1830 ஆம் ஆண்டு
இறைநிலை கண்டது : 3-3-1832 (1008 மாசி 20)
சிறை சென்றது : 1837 ஆம் வருடம் நவம்பர் மாதம்
(112 நாட்கள்)
சீடர்கள் :
1. சிவனாண்டி -வள்ளியூர் அருகே கேளையாபுரம்  (வாழ்ந்த இடம் மயிலாடி)
2. பண்டாரம் - கைலாசபுரம்
3. அர்ச்சுனன் - பிள்ளையார் குடியிருப்பு
4. சுப்பையா - குளச்சல்
5. சகாதேவன் என்னும் அரிகோபாலர் - தாமரைக்குளம் 
இவர்களைத் தவிர அவரின் அன்புக்குப் பாத்திரமான தைக்காடு அய்யா குரு, சண்முகவடிவேல் வெள்ளைச்சுவாமி என இவர்களைப் போன்று பல சீடர்கள் இருந்ததாக வாய்மொழி வரலாறு சொல்கிறது.
அகிலத்திரட்டு நூல் : கவிஞர் அரிகோபாலன் எழுதியது
அருள் நூல் : வைகுண்ட சாமிகள் எழுதியது
வைகுண்டமான நாள் : 2-6-1851 (1026 வைகாசி 21)