வரலாற்றை
சமூகத்தை
வாழ்க்கையை
பின் நகர்த்தி
வைக்க வேண்டுமாம் .
வேதகாலத்திற்கு
சோழர் காலத்திற்கு
ஆதி காலத்திற்கு
அவரவர் கற்பனைக்கு ஏற்ப
பின் நகர்த்தி
வைக்க வேண்டுமாம் .
நவீன உடை
நவீன வாழ்க்கை என
அறிவியலின் படைப்புகளின்
மீது நின்று கொண்டு
அறிவியல் சாதனங்களின் வழி
கதறுகிறார்கள் மாறச்சொல்லி
அறிவியல் தவிர்த்து
பழைய பஞ்சாங்கமாய் …
பின் நகர்த்தி
வைக்க வேண்டுமாம் .
சுபொஅ.