தென்னை நார் மூலமாக 5 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பொருட்கள் செய் யப்பட்டு 25 ஆயிரத்திற்கும் மேற் பட்ட இடங்களில் உபயோகப்படுத்த முடியும். மிக முக்கியமாக பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பல இடங்களில் தென்னை நார் உபயோகப்படுத்தப் படுகிறது. இது பல ஆராய்ச்சிகளின் மூலமாக நிரூ பிக்கப்பட்டு இப்பொழுது மக்கள் புழக்கத்தில் மேலை நாடுகளில் உள்ளது. 1953 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் கயிறு வாரியம் ஆரம்பிக்கப்பட்டு இந்த தொழிற்சாலை களுக்கு வேண்டிய உதவிகள் வழங்கப்படு கிறது. 2022ஆம் ஆண்டு தமிழக அரசினால் இந்தத் தொழிலை மேம்படுத்துவதற்கு கோயம் புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு தமிழ் நாடு கயிறு மேம்பாட்டுக் கழகம் ஆரம்பிக்கப் பட்டு தொழிற்சாலைகளுக்கு வேண்டிய உதவி கள் மாநில அரசினால் செய்யப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக பொருளாதார வீழ்ச்சி உலக பண புழக்கம் இல்லாமை போன்ற வற்றால் இந்த தொழில் மிகக் கடுமையாக பாதிக் கப்பட்டு 40 விழுக்காடுக்கு மேற்பட்ட தொழிற் சாலைகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளன. இந்த தொழிற்சாலைகள் மூலமாக தென்னை விவசாயிகளுக்கு ஒரு மட்டைக்கு போன வரு டம் இரண்டு ரூபாய் 50 பைசா கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது 50 பைசா மட்டுமே கொடுத்து வாங்க முடிகிறது. 2012 ஆம் ஆண்டிற்கு பின் இந்த தொழிற்சாலைகள் இப் பொழுது மிக கடுமையான நெருக்கடியில் உள் ளது. மத்திய, மாநில அரசாங்கங்கள் இதை உணர்ந்து இத்தொழிற்சாலைகளுக்கு வேண் டிய உதவிகளை வழங்கினால், 2030 ஆம் ஆண்டு இந்த தொழிற்சாலை அடுத்த கட்டத்தை எட் டும்.
-எஸ்.கே.கௌதமன், தலைவர், தேசிய தென்னை நார் கூட்டமைப்பு.