மலைப்பூட்டும் ஜியோவின் வளர்ச்சி மற்றும் கட்டுப்பாடற்ற இருள் உலக தகவல் தொடர்பு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வருபவர் சாட்சாத் சக்திமான் மோடிதான். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அதானியின் அசுர வளர்ச்சி கடலடிப்படுகை கேபிள்கள் ஆழத்தில் புதைந்திருப்பது போல மோடியின் செல்ல கார்ப்பரேட்டுகளுடனான கள்ளக் கூட்டணி இனவாத பயங்கர நாடான இஸ்ரேலை மேலும் ஆயுத பாணியாக மாற்றுகிறது.
சில செய்திகளை இங்கு குறிப்பிடுவது எதிர்காலத் திற்கு மிகவும் நல்லது. பிஎஸ்என்எல்-க்காக சென்னை மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளை இணைக்கும் ஆப்டிகல் கடலடி படுகை கேபிள் அமைப்பை நிறுவுவதற்கு என்இசி கார்ப்ப ரேஷனுக்கு (ஜப்பான்) அனுமதி அளிக்கப்பட்டதாக 2018 ஜூலை மத்தியில் செய்திகள் வந்தன. இது முதல் செய்தி. இப்பணியை வெற்றிகரமாக முடித்ததாகவும் இதற் கான தொழில்நுட்ப உதவியை வழங்கியதாகவும் 18.12.2020 அன்று என்இசி (ஜப்பான்) அறிவித்தது. இது இரண்டாவது செய்தி.
மூன்றாவது செய்தி
17.5.2021 அன்று ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ ஊடக செய்தி வெளியிடப்பட்டது. இந்திய செய்தி நிறுவனங்கள் அனைத்தும் அதை கொண்டாடி வெளியிட்டிருந்தன. அது வருமாறு, இந்தியாவை மையமாகக் கொண்டு மிகப்பெரிய சர்வதேச கடலடிப் படுகை (International submarine cable system) கேபிள் அமைப்பை பல முக்கிய உலகளாவிய பங்காளிகள் மற்றும் ஆப்டிக் பைபர் கேபிள் சப்ளையர் சப்காம் (SubCom) உடன் இணைந்து அம்பானியின் ஜியோ உருவாக்கி வரு கிறது. மும்பை மற்றும் சென்னையிலிருந்து தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இந்திய ஆசிய எக்ஸ்பிரஸ் (IAX) என்னும் இணைப்பு ஆசிய பசிபிக் தகவல் தொடர்பு டேட்டா சந்தைகளுடன் இந்தியாவை இணைக்கிறது. இந்திய ஐரோப்பிய எக்ஸ்பிரஸ் (IEX) என்னும் கேபிள் அமைப்பு இந்தியாவை இத்தாலி மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவிற்கும் விரிவு படுத்துகிறது. இரண்டு அமைப்புகளும் ரிலையன்ஸ் ஜியோ குளோபல் ஃபைபர் நெட்வொர்க்குடன் ஆசியா பசிபிக் மற்றும் ஐரோப்பாவிற்கு அப்பாலும் இணைக்கிறது. இந்த உயர் திறன் அமைப்புகள் 16,000 கிலோமீட்டர் தொலைவிற்கு மேல் நொடிக்கு 200 டெர்ரா பைட்ஸ் வேகத்திறனை வழங்கும் என அச்செய்தி கூறியது. இது மூன்றாவது செய்தி.
ஜியோவின் பங்காளிகளும் மோடியின் பாராட்டும்
இதில் கேள்வி என்னவென்றால், இந்த இரண்டு கேபிள் அமைப்புகளை கடலடி ஆழத்தில் பதிப்பதில் ஜியோவின் முக்கிய உலகளாவிய பங்காளி நிறுவனங்கள் எவை எவை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. கடலடி ஆப்டிக் கேபிள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனமான சப்காம்-இன் பெயர் மட்டும் அந்த செய்தி அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. இதற்குப் பின்னர்தான் 23.5.2022 அன்று நரேந்திர மோடி என்இசி கார்ப்பரேஷனின் தலைவர் டாக்டர் நோபுஹிரோ எண்டோவை டோக்கி யோவில் சந்தித்து, இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் கடலடி ஆப்டிகல் ஃபைபர் கேபிள் அமைப் பதில் என் இ சி இன் பங்கைப் பாராட்டினார். என் இ சி - யின் 2020 - பங்களிப்பு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்காக மட்டும் என்று கூறப்பட்டது. அப்படியாயின் ஜியோ-வின் வேறு சில சர்வதேச பங்காளிகள் யார்? அவர்களிடமிருந்து எப்படிப்பட்ட தொழில் நுட்ப உதவிகள் பெறப்பட்டன என்று எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்திய மக்களை உளவு பார்க்க
ஆனால் இஸ்ரேலில் அமைந்திருக்கும் காக்னிட் செப்டியர் நிறுவனங்கள் உளவுத்துறையில் சிக்இன்ட் - (Signal Intelligence) சிக்னல் நுண்ணறிவு பிரிவில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. இவ்விரு நிறுவனங்களும் சட்டப்பூர்வ இடைமறிப்பு கண் காணிப்பு அமைப்புகள் என்ற பெயரில் இந்தியாவின் 140 கோடி இந்திய மக்களை உளவு பார்க்க மோடி அரசால் அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரி வித்தன. இஸ்ரேல் செப்டியர், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு குழுக்களுக்கு அதன் இடைமறிப்பு தொழில்நுட் பத்தை அளித்துள்ளது. (பைனான்சியல் டைம்ஸ்-30.8.2023) மேற்கத்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த உளவு சாதனங்களை நிறுவுவதற்கு பெருமள வில் எதிர்ப்புத் தெரிவித்தன, தகவல் தொடர்பு இடை மறிப்பு வேலைக்கு நீதிமன்றத்தின் உத்தரவு வேண்டும் என்றன. ஆனால் மோடி அரசு எவ்வித விவாதமும் இன்றி, அனுமதியும் இன்றி இந்த உளவு நிறு வனத்தின் ஒட்டுக் கேட்கும். கருவிகளை ரிலையன்ஸ் ஜியோ தனது தொலை தொடர்பு வலைப் பின்னலில் (அதாவது கடலடி கேபிள் நிலையங்கள்) நிறுவு வதற்கு அனுமதித்து உள்ளது.
மொசாத்தும் பெகாசஸ்-சும்
அமெரிக்காவின் சிஐஏ- வைபோல இஸ்ரேலின் மொசாத் உளவுப் படை பல்வேறு நாடுகளில் இரக்க மற்ற அரசியல் படுகொலைகள் மற்றும் கவிழ்ப்பு திட்டங்களை நிறைவேற்றிய படையாகும். பாலஸ்தீனத்தில் 70 ஆண்டுகளாக மொசாத் நடத்திய சதி வேலைகள், படுகொலைகளை உலகமே அறியும். இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சித் தலை வர்கள், பொது அதிகாரிகள் மற்றும் பத்திரிகையா ளர்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்ட இஸ்ரேலிய சைபர் ஆயுதம் ஸ்பைவேர் - பெகாசஸ் - உளவுத் திட்டம் யூத- இந்துத்துவா கலப்பின உறவில் உதித்ததுதான். கவனமாக ஆய்வு செய்து பார்த்தால் அச்சமூட்டும் விஷயமாக இது மாறும் என்பதில் சந்தேகமில்லை.
எதிரிகளின் சதிகளுக்கு உதவும்
சர்வதேச தொலைத் தொடர்பு துறையில் அம்பானி யின் ஜியோ, உலகம் தழுவிய கடலடி கேபிள் தரவு போக்குவரத்து கொண்ட மிகப் பெரும் பன்னாட்டு நிறுவனமாக திட்டமிட்டு மோடியால் உருவாக்கப்பட்டு வருவதும் இதன் பின்னணியில் அனைவரின் தனி யுரிமை அந்தரங்கம் பாதுகாப்பற்றதாக மாறும் எனத் தெரிகிறது. அபாயகரமான தரவு போக்குவரத்தை உரு வாக்கி, இந்தியாவின் உண்மையான மேற்கத்திய எதிரிகளின் சதி வேலைகளுக்கு வாய்ப்பை வழங்கும் என்பதிலும் சந்தேகமில்லை. மலைப்பூட்டும் ஜியோவின் வளர்ச்சி மற்றும் கட்டுப்பாடற்ற இருள் உலக தகவல் தொடர்பு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வருபவர் சாட்சாத் சக்திமான் மோடிதான். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அதானியின் அசுர வளர்ச்சி கடலடிப்படுகை கேபிள் கள் ஆழத்தில் புதைந்திருப்பது போல மோடியின் செல்ல கார்ப்பரேட்டுகளுடனான கள்ளக் கூட்டணி இனவாத பயங்கர நாடான இஸ்ரேலை மேலும் ஆயுத பாணியாக மாற்றுகிறது. பாலஸ்தீன எதிர்ப்பு இஸ்லாமிய எதிர்ப்பு மதவெறி எல்லாவற்றிற்கும் உலகில் தன்னிகரற்ற உதாரண புருஷர் நரேந்திர மோடி ஒருவர் மட்டுமே. இந்திய மக்கள் மோடியை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வரக்கூடாது என்பதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அவைகளில் மேலே கூறப்பட்டவைகளும் அடங்கும்.
புறக்கணிப்பும் ஆரத் தழுவலும்
மோடியை உலக நாடுகள் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவதாகவும் பாராட்டுவதாகவும் இந்திய சங்கிகள் சந்தோஷத்திலேயே விறைத்துப் போகிறார்கள். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2002-இல் அமெரிக்கா, பிரிட்டனால் புறக்கணிக் கப்பட்டார். ஆனால் இன்று அமெரிக்கா மற்றும் ஜி-7 நாடுகளை பொறுத்தவரையில் உலகின் மாபெரும் இந்தியச் சந்தையின் அவர்களது மாபெரும் முதலாளி மோடிதான். ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட், அமெரிக்காவில் முன்பு ஒபாமா, இன்று ஜோ பைடன், இஸ்ரேல் நெதன்யாஹு சர்வதேச ஊடக காமிராக்களுக்கு முன்பாக அவர்களை ஆரத் தழுவி அவர்களது சர்வதேச சுரண்டல் கொள்கை களை நியாயப்படுத்தும் ஒரே உலகத் தலைவர் மோடி மட்டுமே. அனைத்து கண்டங்களிலும் குறிப்பாக இந்தோ பசிபிக் பகுதியில் தங்கள் ராணுவ மேலாதிக்க நடவ டிக்கைகளிலும் தொலைநோக்கு திட்டங்களிலும் தன்னை இணைத்துக்கொண்டு ஆதரவை வழங்கும் தலைவரும் மேற்கத்திய தூதுவருமாக இருப்பது மோடி மட்டுமே. எனவே சர்வதேச ஆக்கிரமிப்பாளர்கள் மூலதன பூதங்கள் லாப வேட்டை கொள்ளைக்காரர் கள் மோடியை உச்சி முகர்ந்து தூக்கி வைத்து கொண்டாடுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?