மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் “மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு”
(ஜூலை 23-மதுரை) சிறப்புக் கட்டுரை - 4
“இந்திய மக்களாகிய நாங்கள் இந்தியாவை ஒரு இறையாண்மை உள்ள சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசாக அமைக்க உளமாற உறுதியேற்றுள்ளோம்” என்ற முகவுரையோடுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இரண்டாவது உலகப் போர் (பாசிசத்தை வீழ்த்தி) முடிவுற்ற பின்னணியில் ஜனநாயகத்தையும், இந்திய பிரிவினை வலியை உணர்ந்து மதச்சார்பற்ற தன்மையையும் பல இனங் கள், பண்பாடு, மொழி உள்ளிட்ட மக்கள் வாழும் தேசம் என்பதால் கூட்டாட்சி கோட்பாட்டையும் மற்றும் சமூக நீதியையும் விழுமியங்களாக உள்ளடக்கியது தான் இந்திய அரசமைப்புச் சட்டம்.
அதிகார வரம்பு மீறும் ஆளுநர்கள்
இத்தகைய அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி ஏற்றுதான் மாநில ஆளுநர்களும், அமைச்சர்களும் பதவியேற்கிறார்கள். இதன் பொருள் ஆளுநர்களும், அமைச்சர்களும் அரசமைப்புச் சட்ட விழுமியங்களை அரசின் கொள்கைகளாக கடைப் பிடிக்க வேண்டும் என்பதுதான். ஆனால், பாஜகவால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அரசமைப்புச் சட்ட விழுமியங்களை காலில் போட்டு மிதிப்பதோடு, அது அவர்களுக்கு வழங்கியுள்ள அதிகார வரம்பையே மீறி அடாவடித்தனமாக செயல்பட்டு வருகிறார்கள். மத்தியில் அதிகாரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி, பாசிசத் தன்மை கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிகாட்டுதல்களில் செயல்பட்டு வரும் கட்சி. முதலாளித் துவ - கார்ப்பரேட் நலன்களை பாதுகாப்பதோடு இந்துத்துவா என்ற தங்களது நீண்ட கால நிகழ்ச்சி நிரலை அமலாக் கிட அரசு அதிகாரத்தையும் பயன்படுத்தி வருகிறது.
ஆறில் நால்வர் ஆர்எஸ்எஸ் பின்னணி
2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக அதிகாரத்திற்கு வந்த பிறகு அரசு நிர்வாகம், நீதித்துறை, கல்வி, கலாச்சாரம் உள்ளிட்டு எல்லாத்துறைகளிலும் தங்களு டைய இந்துத்துவா கொள்கையை முன்னெடுத்திட ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ளவர்களை நியமிக்கிறது. மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட அனைத்தையும் ஒன்றிய அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர்களுக்கு எதி ராகவும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராகவும் பயன்படுத்துகிறது. மொத்தத்தில் வகுப்புவாத - கார்ப்ப ரேட் கூட்டணி அரசு எதேச்சதிகாரமான முறையில் செயல்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 6 புதிய மாநில ஆளுநர்க ளை ஒன்றிய அரசு நியமித்தது. இதில் நால்வர் ஆர்எஸ்எஸ் பின்னணி உள்ளவர்கள். அயோத்தியா வழக்கில் ஆர்எஸ்எஸ்-க்கு சாதகமாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதி எஸ். அப்துல்நசீர், அவர் ஓய்வுபெற்ற பிறகு ஆந்திர மாநில ஆளுநராக நிய மிக்கப்பட்டார். பாஜக அல்லாத மாநில அரசுகளில் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் பாஜக - ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை போன்றுதான் செயல் பட்டு வருகிறார்கள்.
காலம் தாழ்த்துவது, ஒப்புதல் தர மறுப்பது
குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், தெலுங்கானா போன்ற மாநிலங்களின் ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றங்க ளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பது அல்லது காலம் தாழ்த்துவது என்ற ஜனநாயக விரோத நடைமுறையை கடைப்பிடிக்கி றார்கள். இதனால் அம்மாநில சமூக, பொருளாதார வளர்ச்சி கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி என்ற சூதாட்டத்தை தடை செய்வதற்கு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு தொடர்ச்சியாக ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்து வந்தார். இந்த ரம்மி சூதாட்டத்தில் கலந்து கொண்டோர் 60க்கும் மேற் பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களை அழைத்து அவர் பேசவில்லை. மாறாக, ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவன நிர்வாகி களை ராஜ்பவனுக்கு அழைத்து கலந்துரையாடினார். நீண்ட நிர்ப்பந்தத்திற்கு பிறகுதான் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
துணைவேந்தர்களை நிர்ப்பந்தித்தல்
இதைப்போன்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்க ளில் இப்போதும் பல மசோதாக்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க மறுத்து வரு கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு அதனுடைய சமூக, பொருளாதாரக் கொள்கையை உருவாக்குகிறது. குறிப்பாக, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, ஒன்றிய பாஜக அரசு உருவாக்கிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என அறிவித்து மாநிலத்தில் கல்விக் கொள்கையை உரு வாக்கிட ஒரு குழு அமைத்துள்ளது. ஆனால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில அரசு நிர்மானித்த பல்கலைக்கழகங்களுடைய துணை வேந்தர்கள் கூட்டத்தை நடத்தி அப் பல்கலைக்கழகங்களில் பாஜக அரசு உருவாக்கி உள்ள கல்விக் கொள்கையை அம லாக்க வேண்டுமென்று நிர்ப்பந்திக்கிறார்.
நிர்வாகத்தை சீர்குலைத்தல்
தில்லி மாநில ஆளுநர், அந்த அரசின் செயல் பாட்டையே முடக்கிடும் வகையில் அடாவடித்தனமாக செயல்பட்டு வருகிறார். தில்லி மாநகராட்சி தேர்தல் முடிந்து மன்றத்தில் பெரும்பான்மை பெற்ற ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்தவர் மேயராக தேர்ந்தெடுக் கப்படுவதையே தடுத்து சட்டத்திற்கு புறம்பாக பாஜ கவை சார்ந்தவர்களை நியமன உறுப்பினர்களாக்கி பாஜகவை சார்ந்தவரை மேயராக்கிட ஆளுநர் தனது சித்து வேலைகளை செய்தார். உச்சநீதிமன்ற தலை யீட்டிற்கு பிறகுதான் மன்றத்தில் பெரும்பான்மை பெற்ற ஆம் ஆத்மியை சேர்ந்தவர் மேயராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இதைப்போலவே, தில்லி மாநில அரசில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவற்று க்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், தில்லி மாநில ஆளுநர் தான்தோன்றித் தனமாக அதி காரிகளை நியமிப்பதிலும், இடமாற்றம் செய்வதிலும் தலையிட்டு மாநில அரசு நிர்வாகத்தையே சீர்குலைத்து வந்தார். வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்று அதி காரிகள் நியமனம், இடமாற்றம் ஆகியவற்றில் முடிவெ டுத்திடும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது, ஆளு நருக்கு இல்லை என்று தீர்ப்பளித்த பிறகு ஒன்றிய பாஜக அரசாங்கம் இத்தீர்ப்புக்கு முரணாக ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பித்திருக்கிறது. இதிலிருந்தே பாஜக அல்லாத மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம் சீர் குலைக்கும் வேலையை ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது என்பது தெளிவாகிறது.
வகிக்கும் பொறுப்புக்கு தகுதியற்ற ஆர்.என்.ரவி
மதச்சார்பற்ற தன்மை கொண்ட அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதி ஏற்று பதவியேற்ற ஆளுநர் மதச் சார்பற்ற கொள்கையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று பேசுவதோடு சனாதனத்தை முன்னிறுத்தி பேசி வருகிறார். வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு ‘பத்தாயிரம் ஆண்டு சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ள லார்’ என்று பேசியிருக்கிறார். இதன்மூலம் ஆர்எஸ் எஸ்-சின் சனாதனக் கொள்கையை தமிழகத்தில் பரப்பிட முயற்சித்து வருகிறார். சமரச சுத்த சன்மார்க்க நெறி என்பது சனாதன தர்மத்திற்கு நேர் எதிரானது என்பதை அறியாத ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ்-சின் ஊதுகுழலாகச் செயல்பட்டு வருகிறார். நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு மெட்ராஸ் ஸ்டேட் என்பதற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப் பட்டது. ஆனால் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி தமிழகம் என்று பெயர் சூட்ட வேண்டுமென்று கருத்து தெரிவிக்கிறார். ஏற்க னவே, மாநில அரசின் பரிந்துரையை ஏற்று ஒன்றிய அரசு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதை எதிர்த்து ஆளுநர் பேசியிருப்பது அவர் வகிக்கும் பொறுப்பிற்கே அவர் தகுதியற்றவர் என்பதை நிரூபிக்கிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மட்டுமல்லாமல் பாஜக அல்லாத மாநிலங்களில் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசுகளை செயல்படவிடாமல் இடையூறு செய்வதோடு ஒரு போட்டி அரசு போல செயல்பட்டு வருகிறார்கள். இப்பின்னணியில்தான் “மாநிலங்க ளுக்கு ஆளுநர்கள் தேவை இல்லை” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி வருகிறது.
சிபிஎம் எச்சரிக்கை
“மதவெறி மற்றும் பாசிசத் தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டம் வளர்ந்து ஒன்றிய ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளதால் மதச் சார்பின்மை அடித்தளத்திற்கு மிகப்பெரிய அச்சு றுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசு நிர்வாகம், கல்வி அமை ப்பு, தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை மதவெறிமயமாக்க திட்டமிட்ட வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கட்சித் திட்டம் எச்சரிக்கிறது. பாஜக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களின் அதிகார வரம்பு மீறிய செயல்முறை மாநில உரிமைக ளுக்கு எதிரானது மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ்-சின் நீண்ட கால நிகழ்ச்சி நிரலான இந்துத்துவாவை நடைமுறைப் படுத்தக் கூடிய செயல்பாடும் ஆகும். மாநில உரிமைக ளுக்காக குரல் கொடுப்பதோடு பாசிச இந்துத்துவாவுக்கு எதிராகவும் குரல் எழுப்ப வேண்டிய தருணம் இது.
\