articles

img

நாடுன்னு ஏன் சொல்றோம்? - கணேஷ்

“சார்... இவன் என்ன கொண்டு வந்துருக்கான் பாத்தீங்களா...”
“என்னது..”
“புலித்தோல் சார்.” என்றவுடன் ஆசிரியரின் கண்கள் விரிந்தன. அது புலித்தோல் நிறத்திலான துணி என்பதைப் பார்த்து அவர் மட்டுமல்ல, மாணவர்களும் சிரித்தனர்.
“புலித்தோல நீங்க யாரும் பாத்துருக்கீங்களா..?”
“படத்துல பாத்துருக்கோம், சார்.”
“சார்... நித்தியானந்தா வீடியோவுல பாத்துருக்கேன் சார்.”
“அந்த வீடியோவ நீ எப்பப் பாத்த.”
“எங்க அப்பா அடிக்கடி பாத்து சிரிச்சுட்டே இருப்பாரு சார்... அப்பதான் நானும் பாத்தேன்.”
“அவரு இப்போ ஒரு நாட்டுக்கே அதிபதி ஆயிட்டாராமே சார்..?”
“அப்படில்லாம் திடீர்னு நாட்டையெல்லாம் உருவாக்க முடியாது.” 
“இதுல என்ன சார்... ஒரு தீவ வளைச்சுப் போட்டு
அதுக்கு நாந்தான் ராஜானு அறிவிச்சுக்க வேண்டியது
தானே. கே.ஜி.எப். படத்துல ராக்கிபாய் நாட்டுக்
குள்ளயே நாடு வெச்சுருப்பாரே சார்..?”
“ஒரு நாடுனா, நான்கு விஷயங்கள் இருக்கணும்... நிரந்தரமான கணக்கிடப்பட்ட மக்கள்
தொகை, வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட நிலப்பகுதி, சொந்தமாக முடிவுகளை எடுக்
கக்கூடிய அரசாங்கம், அதோட பிற நாடுகளோடு
உடன்பாட்டை எட்டக்கூடிய திறன்... இதெல்லாம் தான் அது..”
“இத யாரு சார் கொண்டு வந்தது”
“வட, தென் அமெரிக்கக் கண்டங்கள்ல இருக்குற
நாடுகள்லாம் உருகுவேல உள்ள மாண்டிவிடி
யோங்குற நகரத்துல 1933–ல கூடுனாங்க... டிசம்பர் 26 அன்னிக்குதான் அவங்கதான் நாடுன்னா
என்னன்னு வரையறுத்தாங்க... இது உலகம் முழுக்க ஏத்துக்கிட்ட ஒண்ணாதான் இருக்கு.”
“அப்போ நித்தியானந்தாவோடது நாடு இல்லையா.”
“சார்.. அவரப்பத்தி இவன் ரொம்பதான் கவலைப்படுறான்”
“ஐக்கிய நாடுகள் சபைல இருக்குறதெல்லாம் இந்த நாடுங்குறதுல வந்துருதா சார்.”
“வந்துருது... ஐ.நா.வுல 193 நாடுகள் இருக்கு.. ஜூலை 2011–ல தெற்கு சூடான் புது உறுப்பினரா சேந்துச்சு. அதுதான் கடைசியா உறுப்பினரான நாடு.”
“இன்னும் ஏதாவது சேருமா சார்..?”
“பாலஸ்தீனம் விண்ணப்பம் போட்டுருக்கு... செப்டம்பர் 2011–ல அதக் கொடுத்தாங்க...  பாதுகாப்புக் கவுன்சில் இன்னும் முடிவு பண்ணல. பொது அவைல தீர்மானம் வந்தப்ப 136 நாடுகள் ஆதரிச்சுது... 41 பேர் வாக்களிக்கல.”
“யாராவது எதுத்தாங்களா சார்.”
“அமெரிக்கா, இஸ்ரேல்னு ஆறு நாடுகள் எதுத்தாங்க”
“அமெரிக்கா எதுக்கு சார் எதுத்துது..?”
“உலகம் முழுக்க அவங்க சொல்றதக் கேட்டா,
அது ஜனநாயகம்னு சொல்வாங்க.”
“அதெப்புடி சார்... ஜனநாயகம்னாலே மக்கள் சொல்றதக் கேக்குறதுதானே.”
“அது காகிதத்துலதான்.. மக்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த அரசாங்கத்த ஜனநாயக விரோதம்னு சொல்லி கலைச்சுருவாங்க... சில நாட்டுல
இதுவரைக்கும் தேர்தலே நடந்ததில்ல... ஆனா அமெ
ரிக்கா சொல்றதக் கேக்குறதுனால அதெல்லாம் நல்ல நாடு. இத்தனைக்கும் அந்த நாடுகள்ல மக்களுக்கு,
குறிப்பா பெண்களுக்கு சுதந்திரமே இல்ல.”
“அமெரிக்கா ஜனநாயக நாடுதான சார்.”
“அப்புடித்தான் சொல்றாங்க.. ரெண்டு கட்சில ஒரு கட்சிதான் ஆட்சிக்கு வர முடியும்... இப்போ இருக்குற ஜோ பைடன், தான் ஜெயிக்குறதுக்கு நம்ம ரூபாய் மதிப்புல எட்டாயிரம் கோடி செலவு பண்ணிருக்காரு... இதுல பாதி ஊடகங்களுக்கு செலவு... இந்த நிதியத் திரட்டுறதுக்கே 280 கோடி செலவு பண்ணுனாராம்.” 
“இவ்வளவு பணம் இருந்தாதான் தேர்தல்ல நிக்க முடியுமா சார்.”
“இதுதான் அங்க இருக்குற ஜனநாயகம்...‬  அது
மட்டுமில்ல.. 80 நாடுகள்ல அமெரிக்க ராணுவத்
தளம் இருக்கு.”
“அந்த நாடுகள்லாம் அத ஏத்துகிட்டுச்சா, சார்”
“ஏத்துக்காத நாடுகள்லயும் இருக்கு... செலவும் அந்த நாடுகள்தான் பண்ணனும்.”
“அராஜகமால இருக்கு.”
“சார்... தமிழ்நாடுனு நாம சொல்லிக்குறோமே.”
“தமிழ்ல நாடுங்குறத நில ரீதியான பகுதி
யாவும் சொல்றோம்... பண்பாட்டு ரீதியான நிலப்பகுதி
யாகவும் சொல்றோம்.. தமிழர் பண்பாடு மிகப்பழமை
யானது. தனித்துவம் கொண்டது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்னு வாழ்ந்த, வாழ்ற சமூகம்.”
இயல்பாக கைகள் தட்டத் தொடங்கின.