articles

img

எதேச்சதிகாரத்தின் ஆபத்தான நகர்வுகள்! - அ.அன்வர் உசேன்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை அறிவிக்கப் பட்டு மின்னல் வேகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது நாடாளு மன்ற இல்லத்தையும் 30 நாட்களில் காலி செய்யுமாறு அறிவிக்கை தரப்பட்டுள்ளது. பா.ஜ.க. அரசின் எதேச்சதிகார பயணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும் பா.ஜ.க. அரசின் செயல்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழி காட்டுதல்களை அறிந்த எவரும் இத்தகைய சூழல்  வரும் என்பதை அறிந்திருந்தனர். 2024 தேர்தல்கள் நெருங்கிவரும் சூழலில் இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கைகள் பா.ஜ.க.வுக்கு தேவைப்படுகின்றன. இந்திய பொருளாதாரம் சந்திக்கும் எந்த ஒரு  சவாலையும் தீர்க்க இயலாமல் அதன் தாக்கம்  மக்களின் கோபமாக மாறும் சூழலில் அரசுக்கு திசை திருப்பல் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக ராகுல் காந்தியின் சிறை தண்டனை மற்றும் தகுதி நீக்கம் அரங்கேற்றப்படுகின்றன. 

வழக்குத் தொடுத்தவரே விசாரணைக்கு தடையாணை கோரிய வினோதம்

13.04. 2019ல் கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் ஒரு தேர்தல் பேரணியில் பேசும் பொழுது ராகுல் காந்தி கீழ்கண்டவாறு பேசினார்: “எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஏன் இந்த திரு டர்கள் அனைவரும் மோடி-மோடி-மோடி என பெயர் பெற்றுள்ளனர்? நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி. இன்னும் சிறிது தேடினால் இன்னும் கூடுதலாக பல மோடிக்கள் வெளி வருவர்.”

பல்லாயிரம்  கோடிக்கணக்கான ரூபாய்களை வங்கி களிடம் ஏமாற்றிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி  ஓடிய சிலரை ராகுல் காந்தி இங்கு குறிப்பிட்டார். அவர்கள் பா.ஜ.க.வுக்கும் பிரதமருக்கும் நெருக்க மாக இருந்தனர் என்பதால் பிரதமரின் பெயரையும் அவர் குறிப்பிட்டார். ராகுல் காந்தியின் உரை மோடி சமூகத்துக்கே இழுக்கு உருவாக்கிவிட்டதாக பூர்ணேஷ்மோடி எனும் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் சூரத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 16.04.2019 அன்று வழக்கு தொடுத்தார். தனது தரப்பு விளக்கத்தை அளிக்க ராகுல் காந்தி 24.06.2021 அன்று நேரில் ஆஜரானார். அப்பொழுது நீதிபதி ஏ.என். தவே  என்பவர் இருந்தார். 2022 மார்ச் மாதத்தில் பூர்ணேஷ்  மோடி ராகுல் காந்தியை மீண்டும் நேரில் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் கோரினார். இதனை  நிராகரித்த நீதிபதி தவே உடனடியாக விசாரணைக்கு ஆணையிட்டார். இதன் காரணமாக குஜராத் உயர்  நீதிமன்றத்தை அணுகிய பூர்ணேஷ் மோடி இந்த  வழக்கின் விசாரணையை நிறுத்துமாறு தடையாணை க்கு மனுதாக்கல் செய்தார். நீதிமன்றமும் 07.03.2022 அன்று வழக்கை நிறுத்த தடைஆணை அளித்தது. இதில் வினோதமான நிகழ்வு என்னவென்றால் குற்றம் சாட்டப்பட்டவர்தான் வழக்கை நிறுத்த நீதிமன்றத்தை நாடுவர். ஆனால் இங்கு புகார்தாரரே வழக்கு விசார ணையை நிறுத்துமாறு வேண்டுகிறார். ஏன்? நீதிபதி  சாதகமாக தீர்ப்பு சொல்லமாட்டார் எனும் ஐயம் இருந்ததா?

சுமார் 11 மாதங்கள் கும்பகர்ண உறக்கத்தில் இருந்த பூர்ணேஷ் மோடி 16.02.2023 அன்று உயர் நீதிமன்றத்தை அணுகி தடையாணையை விலக்க கோரினார். நீதி மன்றம் புகார்தாரரே மீண்டும் தடை யாணையை விலக்க கோரியதால் அதனை ஏற்று  கொண்டது. இதற்கிடையே நீதிபதி தவே மாற்றலாகி சென்றுவிட எச்.எச். வர்மா என்பவர் புதிய நீதிபதி யாக பொறுப்பேற்றார். 27.02.2023 அன்று மீண்டும் விசாரணை தொடங்கியது. ஒரு மாதத்துக்கும் குறை வான நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டு தண்டனை  வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டு தண்டனை என்ப தால் ஜெட் வேகத்தில் செயல்பட்ட நாடாளுமன்ற நிர்வாகம் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது. தீர்ப்பு அளித்த நீதிபதியே ராகுல் காந்தி உயர்  நீதிமன்றங்களை அணுகிட ஏதுவாக 30 நாட்களுக்கு அந்த தண்டனையை நிறுத்தி வைத்துள்ளார் என்பதை கூட கணக்கில் கொள்ளாமல் தகுதி நீக்கம் அதிவேக அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வழக்கு : சில கேள்விகள்

இந்த வழக்கில் நீதிமன்றம் பல முக்கியமான நடைமுறைகளை கை கொள்ளவில்லை என சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர். ராகுல் காந்தி பேசியது கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த கூட்டத்தில்! ஆனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதோ குஜராத்  மாநிலம் சூரத் நகரில்! சூரத் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிப்பதற்கு முன்பு உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் உருவாக்கிய சில சட்ட வழி காட்டு தல்களை பின்பற்றியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. மேலும் ராகுல் காந்தி  தனது உரையில் பூர்ணேஷ் மோடியின் பெயரை குறிப்பிடவில்லை. எனவே அவருக்கு வழக்கு தொடுக்க உரிமை உள்ளதா எனும் கேள்வியும் எழுகிறது. நாடாளுமன்ற உறுப்பினரை தகுதி நீக்கம் செய்யும் உரிமை ஜனாதிபதிக்குதான் உள்ளது. ஜனாதிபதி யின் ஒப்புதல் பெறப்பட்டதா என்பது வெளியிடப்பட வில்லை. 2017ஆம் ஆண்டில் ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஒன்றிய அர சாங்கம் கிரிமினல் குற்றத்தில் தண்டனை பெற்றால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தானாகவே தகுதி இழக்க மாட்டார் என கூறியுள்ளது. ஆனால் இன்று அதற்கு நேர்மாறாக செயல்பட்டுள்ளது. சொல்லும் செயலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என பா.ஜ.க. அரசிடம் எதிர்பார்த்தால் தவறு நம்முடையது தானே! மோடி என்ற சாதியை ராகுல் காந்தி இழிவுபடுத்தி விட்டதாக பூர்ணேஷ் மோடி குற்றம் சாட்டுகிறார். ராகுல் காந்தியின் உரை அவ்வாறு இல்லை என்பது வெள்ளிடை மலை! மேலும் பிரதமர் நரேந்திர மோடி யும் பூர்ணேஷ் மோடியும் ஒரே சமூகத்தை சேர்ந்த வர்கள் அல்ல. பூர்ணேஷ் மோடி பனியா சமூகத்தை  சேர்ந்த உயர்சாதி பிரிவினர். ஆனால் நரேந்திர மோடி  மோத்-கான்ச்சி என்ற சமூகத்தை சேர்ந்தவர் எனவும் இந்த சமூகம் 1994ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட பிரிவில் இணைக்கப்பட்டது எனவும் டி.என்.ஏ. எனும் பத்திரிகை 09.05.2014ஆம் ஆண்டு செய்தி வெளியிட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கின் நோக்கம் என்ன எனும் கேள்வியும் எழுகிறது.

கிரிமினல் குற்றமா?

அவதூறு உரை பற்றிய வழக்குகள் கிரிமினல் குற்றமா அல்லது சிவில் குற்றமா எனும் விவாதம் பல நாட்களாக உள்ளது. இதனை கிரிமினல் குற்றமாக கருதக்கூடாது எனும் கருத்து வலுவாக உள்ளது. அமெரிக்கா/ இங்கிலாந்து/ பிரான்ஸ் உட்பட  உலகின் பல தேசங்களில் அவதூறு உரை கிரிமினல்  குற்றமாக கருதப்படுவது இல்லை. சிவில் குற்ற மாகவே பார்க்கப்படுகிறது. அவதூறு உண்மை என நிரூபிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது; ஆனால் சிறை தண்டனை இல்லை. இந்தியா உட்பட சில தேசங்களில்தான் அவதூறு கிரிமினல் குற்றமாக  தொடர்கிறது. இன்று ஆர்.எஸ்.எஸ்./ பா.ஜ.க.விற்கு தனது அரசியல் எதிரிகளை தாக்குவதற்கு இது பயன்படுகிறது.

பாஜகவின் அவதூறுகள்

ராகுல் காந்தி பேசியது அவதூறு எனில் இத்தகைய  பல அவதூறுகளை மோடி உட்பட பல பா.ஜ.க. தலைவர்கள் பேசியுள்ளனர். உதாரணத்துக்கு குஷ்பூ காங்கிரசில் இருந்த பொழுது 15.02.2018 அன்று நீரவ் மோடி மற்றும் லலித் மோடியின் ஊழல் களை குறிப்பிட்டு மோடி எனில் ஊழல் என அக ராதியில் அர்த்தத்தையே மாற்ற வேண்டும் என டுவிட்ட ரில் கருத்து தெரிவித்தார். இப்பொழுது அவர் பா.ஜ.க.வில் உள்ளார். அவர் மீது வழக்கு தொடுக்கப் படுமா? தன்னை சூர்ப்பநகை என மோடி இழிவுபடுத்தி னார் என காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்திரி குற்றம்சாட்டுகிறார். சோனியா காந்தியை “ஜெர்சி பசு”  எனவும் ராகுல் காந்தியை “கலப்பு கன்று குட்டி” எனவும்  இழிவுபடுத்தி மோடி பேசியுள்ளார்  என தீபல் திரிவேதி எனும் குஜராத் பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார். காங்கிரசின் சசி தரூர் மனைவியை “50 கோடி பெறுமான” பெண் நண்பர் என இழிவுபடுத்தி மோடி பேசினார் எனவும் அவர் குறிப்பிடுகிறார். இப்படி பிறரை அவதூறாக பேசுபவர்கள் இன்று அரசியல் எதிரிகளை இலக்காக கொண்டு செயல்படுவது அவர்கள் பயம் கொள்ளத் தொடங்கியுள்ளனர் என்பதையே வெளிப்படுத்துகிறது.

அரசியல் எதிரிகளுக்கு எதிராக! 

ராகுல் காந்திக்கு எதிரான இந்த நடவடிக்கை களுக்கு முன்பே பா.ஜ.க. அரசாங்கம் பல எதேச்சதிகார நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது. அவற்றில் பீமா கொரேகான் வழக்கு மிக முக்கியமானது. பீமாகொரேகான் எனும் இடத்தில் நடந்த ஒரு கல வரத்தை முன்வைத்து 16 முக்கிய சமூக செயற்பாட்டா ளர்கள் உபா சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்ட னர். இதில் ஆனந்த் டெல்டும்டே/ சுதா பரத்வாஜ்/ ஸ்டேன்ஸ் பாதிரியார்/ரொனோ வில்சன் உள்ளிட்டோர் அடங்குவர். 

ஒன்றிய அரசின் குற்றச்சாட்டுக்கு அடிப்படை என்ன?

ரொனோ வில்சனின் மடிக்கணினியிலிருந்து ஏனைய 15 பேருக்கும் “மோடியை கொலை செய்வது” குறித்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகவும் அத னால்தான் இந்த கைது எனவும் ஒன்றிய அரசால் வாதி டப்பட்டது. ஆனால் ரொனோ வில்சன் தான் அவ்வாறு மின்னஞ்சல் அனுப்பவில்லை என ஆணித்தரமாக கூறினார். அவரது மடிக்கணினியிலிருந்துதான் மின்னஞ்சல் சென்றது என உளவுத்துறை மீண்டும் மீண்டும் கூறியது. பின்னர் இதனை ஆய்வு செய்த வெளிநாட்டு கணினி நிறுவனம் இந்த மின்னஞ்சல் வில்சனின் கணினியில் வெளியிலிருந்து விசேட விலை உயர்ந்த மென்பொருள் மூலம் ஹேக் செய்து திணிக்கப்பட்டது என கண்டுபிடித்தது. ஆனால் இன்றுவரை நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இதன் விளைவாக ஸ்டேன்ஸ் பாதிரியார் சிறையிலேயே உயிரிழக்க வேண்டிய அவ சியம் ஏற்பட்டது. சுதா பரத்வாஜ் போன்ற ஓரிருவர் பிணை பெற்றாலும் பலரும் இன்னும் சிறையில் வாடுகின்றனர்.  வன்மம் கொண்ட ஒரு அரசு அதி காரத்தை கையில் வைத்திருந்தால் என்ன செய்ய இயலும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

சீத்தாராம் யெச்சூரி  பிருந்தா காரத்துக்கு எதிராக...

பா.ஜ.க. கொண்டுவந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிய பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நடாஷா நர்வால்/கலிங்கா/குல்பிஷா பாத்திமா ஆகிய மாணவிகளும் அடங்குவர். இவர் களும் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். நடாஷா நர்வாலின் தந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினராக இருந்தவர். விஞ்ஞானியும் கூட! தனது மகள் எந்த சிறையில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள அவர் 6 மாதங்கள் நீதிமன்றங்களை நோக்கி படையெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பின்னர் கோவிட் காலத்தில் அவர் உயிரிழந்த பொழுது நடாஷாவுக்கு நேரடி யாக தகன மேடைக்கு வருவதற்குதான் காவல்துறை அனுமதி வழங்கியது. இந்த மூன்று மாணவிகளிடமும் அவர்களை பிணையில் வெளி வர வேண்டும் எனில் சீத்தாராம் யெச்சூரி/பிருந்தா காரத்/யோகேந்திர யாதவ் ஆகியோர் தூண்டுதலின் பேரில்தான் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடினோம் என வாக்கு மூலம் கேட்டனர். ஆனால் இந்த மாணவிகள் மறுத்துவிட்டனர். ஒரு வேளை அவர்கள் காவல்துறை யினரின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்திருந்தால் சீத்தாராம் யெச்சூரி/பிருந்தா காரத்/யோகேந்திர யாதவ் போன்ற தலைவர்கள் சிறையில் இருந்திருப்பர். 

இப்படி பல எதேச்சதிகார நடவடிக்கைகளை பா.ஜ.க. அரசாங்கம் எடுத்துள்ளது. அதன் நீட்சிதான்  ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கை. ஜனநாயகம் எத்தகைய ஆபத்தில் உள்ளது என்பதை இது தெளிவுபடுத்துகிறது. இத்துடன் இது நிற்கப்போவது இல்லை. மக்களிடமிருந்து தனிமைப்படுவது அதி கரித்தால் இன்னும் கூடுதலான எதேச்சதிகார நட வடிக்கைகள் தொடரும். மதப்பிளவுகள் கூர்மைப் படுத்தப்படும். எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தொடர்ந்து கூறுவது போல அனைத்து தேசபக்தர் களும் எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டிய தருணம் இது! ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கை அதற்கு வழிவகுத்தது போலவே தோன்றுகிறது. அது மேலும் வலுவாக வேண்டும்; தொடர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.