articles

img

காவல்துறையின் பாரபட்சம் : பிருந்தா காரத் கண்டனம்

புதுதில்லி, ஏப்.20- ஜஹாங்கீர்புரி சம்பவங்களுக்குக் காரணமான காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தில்லி காவல்துறை ஆணையருக்கு பிருந்தாகாரத், கே.எம்.திவாரி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர். ஜஹாங்கீர்புரி பகுதியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் தொடர்பாக, தில்லி  காவல்துறை ஆணையர் அஸ்தானாவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்தும், தில்லி மாநில செய லாளர் கே.எம்.திவாரியும் இணைந்து எழுதியுள்ள கடிதத்தில்  கூறியிருப்பதாவது:

ஏப்ரல் 16 அன்று ஜஹாங்கீர்புரி பகுதியில் நடந்த வன்முறை வெறியாட்டங்களைக் காவல்துறையினரின் உதவியுடன் முற்றிலுமாகத் தவிர்த்திருக்கக்கூடிய மதவெறி வன்முறை நிகழ்வுகள் குறித்து இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக பல தொலைக்காட்சி அலைவரிசைகளில் வெளியாகியிருக்கிற காணொலி சாட்சியங்களும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காகச் சென்ற உண்மை அறியும்குழுவிடம் கண்ணால் கண்ட சாட்சிகள்  அளித்துள்ள சாட்சியங் களும், பஜ்ரங் தளத்தின் இளைஞர் அணி சென்ற  ஊர்வலத்தில் அவர்களில் பலர் கத்தி, கம்புகள் மற்றும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் கையெறி குண்டு கள் ஏந்திச் சென்றதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஆயுதங்களை உயர்த்திக்காட்டி, வெளிப்படை யாகவே பார்வையாளர்களை அச்சுறுத்தியிருக்கிறார் கள். இந்த ஊர்வலத்திற்கு அனுமதி அளித்ததாக காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். அப்படி யானால் ஆயுதங்களை இவர்கள் வெளிப்படையாக ஏந்திச் செல்வதற்கும் காவல்துறை அனுமதி அளித்ததா? உண்மையில் ஆயுதங்களை ஏந்திச் சென்ற ஊர்வலத்தினர் ஆயுதச் சட்டப்பிரிவுகளை மீறி யிருக்கிறார்கள் என்பதும், அவ்வாறு ஏந்திச்சென்ற வர்கள் கடும் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதும் வெட்டவெளிச்சமாகும்.

ஆனால், தில்லி காவல்துறை ஊடகங்களுக்கு அளித்துள்ள அறிக்கையிலிருந்து, ஆயுதம் ஏந்தி வந்த நபர்களை அடையாளம் காட்டியிருப்பதாகவோ, அவ்வாறு ஆயுதம் ஏந்தி வந்தவர்களை காவல்துறை  அடையாளம் காட்டியிருக்கும்பட்சத்தில் அவர்களைச்  சம்பந்தப்பட்ட ஆயுதச் சட்டத்தின் குற்றப்பிரிவு களின்கீழ் கைது செய்திருப்பதாகவோ எதுவும் தெரியவில்லை. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினரின் பங்கு குறித்தும் ஏதேனும் புல னாய்வு செய்யப்படுமா என்பது குறித்தும் காவல்துறை யின் அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரியவில்லை.  மசூதிக்கு முன்பு ஊர்வலம், ஆயுதம் ஏந்தி செல்ல  அனுமதிக்கப்பட்டிருப்பதற்கும் அந்த இடத்தில் தொழுகை தொடங்கவிருக்கும் சமயத்தில் ஆத்திர மூட்டும் விதத்தில் கோஷங்களை எழுப்பியதற்கும் யார் பொறுப்பு? இந்தச் சம்பவங்களைக் காவல்துறை யினர் கட்டுப்படுத்தத் தவறியதே, இங்கே மிக மோச மான சம்பவங்கள் நடைபெற்றிருப்பதற்கு நேரடியான காரணங்களாகும்.

இந்தச் சம்பவம் நடந்தபோது காவல்துறையினர் சிலர் காயங்கள் அடைந்திருக்கிறார்கள் என்பது மிகவும்  துரதிர்ஷ்டவசமானதாகும். எனினும், காவல்துறை மூத்த அதிகாரிகள் இந்த ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதற்கு முன் உரிய கவனம் செலுத்தி யிருந்தால், போதுமான அளவிற்கு காவல்துறை யினர் ஏற்பாடுகள் செய்திருந்தால், ஊர்வலத்தில் சென்றவர்கள் ஆயுதங்கள் ஏந்திச் செல்லாதவாறு நடவடிக்கைகள் எடுத்திருந்தால், ஒரு மசூதிக்கு முன்பு  ஊர்வலத்தில் சென்றவர்கள் நிற்பதற்கு அனுமதி  அளிக்காதிருந்திருந்தால், இந்தச் சம்பவங்கள் நடந்திருக்காது. இந்தப் பகுதியில் இதற்குமுன் மதவெறி அடிப்படையில் இத்தகையதொரு சம்பவம் நடந்ததே இல்லை. இங்கே இரு சமூகத்தினரும்  (முஸ்லிம்களும் இந்துக்களும்) நல்லிணக்கத்துட னேயே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ‘சோபா யாத்ரா’ என்ற பெயரில் ஊர்வலத்தில் வந்த வெளியாட்களே இங்கே நடைபெற்ற வன்முறை நிகழ்வுகளுக்குக் காரணமானவர்கள் என்று சான்றுகள் மூலம் தெரியவருகின்றன.   

பெண்களை முரட்டுத்தனமாக தாக்கிய காவல்துறை

மேலும் இங்கேயுள்ள ‘சி’ பிளாக்கில் உள்ள வீடுகளில் இரவு நேரத்தின்போது சோதனை செய்யச் சென்ற ஆண் போலீஸ்காரர்கள் பெண்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். ஒரு  பெண்ணைத் தொடுவதற்கு  அனைத்து ஆண் போலீ சாருக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதை  மீறியது, நாட்டிலுள்ள அனைத்து சட்ட நெறிமுறை களுக்கும் விதிகளுக்கும் விரோதமான செயலாகும். மேலும் 17ஆம் தேதியன்று, எங்கள் உறுப்பினர்கள் மற்ற வர்களுடன் சேர்ந்து ஜஹாங்கீர்புரி காவல்நிலை யத்தில் கூடுதல் காவல் ஆணையர் (Addl DCP) கிஷன் குமாரைச் சந்திக்கச் சென்றபோது, அங்கே காவல்நிலைய வளாகத்திற்குள்ளேயே பாஜக தலை வர்கள் பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக் கிறார்கள். இது மிகவும் முறையற்ற செயலாகும். இது இந்த வழக்கில் காவல்துறையினர் ஒருதலைப்பட்ச மாக நடந்துகொண்டிருக்கிறார்கள் என்று வந்துள்ள சந்தேகங்களை வலுப்படுத்துகின்றன.

ஆத்திரமூட்டிய பஜ்ரங் தளத்தினர்

குற்றமிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும், அவர்களுக்குத் தண்டனை அளித்திட வேண்டும் என்றே நாங்கள் கூறுகிறோம். எனினும், காவல்துறையினர் கைது செய்திருப்பதில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களேயாவர். சம்ப வங்களைத் திட்டமிட்டவர்கள் மற்றும் ஆத்திர மூட்டும் செயல்களில் ஈடுபட்டவர்கள் பஜ்ரங் தள  அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஊர்வலத் தினரே என்றே நடந்துள்ள நிகழ்வுகள் காட்டுகின்றன. ஜஹாங்கீர்புரி நிகழ்வுகளுக்குக் காரணமான காவல் நிலைய அதிகாரவரம்புக்கு உட்பட்ட இடத் தில் உள்ள குற்றப்பிரிவு காவல்துறையினரிடமே புலன்  விசாரணை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இந்தக் காரணத்திற்காகவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாரபட்சமற்ற புலன் விசாரணை/நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி இருக்கிறது. அதே சமயத்தில், இந்தச் சம்பவங்களுக்குக் காரணமான போலீசாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளனர். (ந.நி.)