எது நம்மால் அதிகம் ரசிக்கப்பட்டதோ, அதுவே சிறிது நாளில் சலிப்புத்தட்டும். எந்தக் காட்சி நம் கண்களுக்கு பிரமிப்பாக இருந்ததோ அதுவே சில நாட்களில் வெறுக்கப்படும். எது அற்புதம் என்று வர்ணித்தோமோ அதுவே கொஞ்ச நாளில் அற்பமாக தோன்றும். சில நடிகர்களோ, நபர்களோ சிறு வயதில் நமக்கு ஹீரோவாக தோன்றுவார்கள் நாம் சற்று உருமாறியவுடன் அவர்களின் உரு வங்கள் நம் எண்ணங்களிலிருந்து மறையலாம்! ஆனால், உலகில் சலிக்கப்படாத வார்த்தை எது என்று சொன்னால் அது “கம்யூனிசம்” மட்டுமே! மறக்கப்படாத மனிதரில் முதன்மையானவர் தோழர் லெனின் மட்டுமே ஆவார். 1969 ஆம் ஆண்டில் நான் மேட்டூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் எட்டாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, அழகுமன்னன் என்ற வரலாற்று ஆசிரியர் அவர்கள் பாடம் நடத்துகிற போது, போகிற போக்கில் லெனினைப்பற்றி கூறி னார்! “உலகில் கம்யூனிசமே சிறந்த தத்துவம், அந்த சமூகத்தில்தான் பசி - பஞ்சம் - பட்டினி - வேலையில்லா திண்டாட்டம் இருக்காது! அதை முதன் முதலாக ரஷ்யாவில் லெனின் அவர்கள் கம்யூனிசம் பயின்று ஒரு புரட்சியை நடத்தி அங்கு கம்யூனிச ஆட்சியை உண்டாக்கினார்! அந்நாட்டில் உள்ள மக்கள் சுபிட்சமான வாழ்க்கை யை வாழ்ந்து வருகிறார்கள் என்றார்.” பசியின் வலியை அன்றாடம் உணர்ந்த என்னை போன்ற ஏழை மாணவர்கள் நெஞ்சில் அன்றே கம்யூ னிசமும், லெனினும் குடிபுகுந்தனர். இன்று மட்டு மல்ல, என்றுமே சலிக்காத வார்த்தையாக கம்யூ னிசமும், மறக்காத நபராக லெனினும் என்றாகி விட்டது. சலிக்காதது... கோவை மாவட்டத்தில் சிவப்பு நட்சத்திரப் பேச்சாளர் தோழர் ஆர். பாலகிருஷ்ணன் தான் என்று அனைவருக்கும் தெரியும். அவர் பல பொதுக்கூட்டங்களில், “மேற்குவங்க நடிகை ஒருவர் தனது இயக்குநரிடம், எங்கள் மாநில சட்ட மன்ற தேர்தலில் நான் ஓட்டு போட வேண்டும், தேர்தல் நாளில் படப்பிடிப்பு வேண்டாம், நான் ஓட்டு போட்டு வந்தபின் சூட்டிங்கை தொடரலாம் என்றாராம்”! அதற்கு, இயக்குநர் அவர்கள், ஏம்மா தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இடது சாரிகளுக்கே ஓட்டு போட்டு வருகிறீர்களே! உங்களுக்கு சலிக்க வில்லையா? என்று வினாவினை கேட்டாராம்! அதற்கு, அந்த நடிகை, “சார் நீங்க தினந்தோறும்… இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, உப்புமா, உருளைக் கிழங்கு சாப்பிட்டுத்தானே வாழ்கிறீர்கள்? அது ஏன் உங்களுக்கு சலிக்கவில்லை? அது போல தான் இதுவும் என்று பதில் கூறினாராம்! என்று வர்ணித்து பேசுவார்” மேலும் மாஸ்கோ கிரெம்ளின் மாளிகையில் செங்கொடி பறப்பதைப்போல, தில்லி செங்கோ ட்டையிலும் செங்கொடி விரைவில் பறக்கும் என்று மக்கள் ஜனநாயகப்புரட்சியின் அழுத்தத்தை கைதட்டல்கள் மத்தியில் நினைவு கூர்வார்! லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகையே சலிக்காமல் சுத்தியல் அரிவாள் நட்சத்திர சின்னத்திற்கு வாக்களிக்க முயல்கிற போது, உண்மையான சமூக மாற்றத்திற்காக பாடுபடும் - இயங்கி வரும் போராளிகளுக்கு கம்யூனிசம் என்ற வார்த்தை சலிக்குமா? என்ன?! திருப்பூரில் மறைந்த சிபிஐ(எம்) தலைவர் கே. தங்கவேல் அவர்கள், பல ஊழியர் கூட்டங் களில் மாவோ அவர்கள், குறிப்பிட்டதாகக் கூறு வார், “பசித்தவர்களுக்கு முதலில் ரொட்டித் துண்டு கொடுப்பது கம்யூனிசம், பின்பு தத்துவத்தை கூறுங்கள் என்பாராம்”! ஆக, மக்களின் துயரம் துடைக்க மாற்று மருந்து கம்யூனிசமே என்பது தெளிவாகிறது!
முதல் விதையை ஊன்றிய லெனின்
மனித சமுதாயத்தின் மீது சலிக்காத பற்று - காதல் கொண்ட மாமேதைகளான காரல்மார்க்ஸ், ஏங்கல்ஸ் 1848இல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற நூல் வெளியிட்டனர். அந்தக் காதல் புத்தகத்தை உணர்ந்த லெனின் அவர்கள் 1917-இல் ரஷ்யாவில் சோசலிசத்தை அமலாக்கினார். பிற்காலத்தில் சில இடங்களில் இவரது சிலைகள் தகர்க்கப்பட்டதே தவிர, இவரது எழுத்துக்கள், நூல்கள் காற்றிலே கலந்துள்ளதால் அதை மனித சமூகத்திடமிருந்து பிரிக்க இயலவில்லை. இன்றும் லெனின், மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். ஏனென்றால், இவர்தான் உலகின் முதல் புரட்சி நாயகன். இந்த புரட்சி மனிதன் ஊன்றிய விதை சீனா, வடகொரியா, வியட்நாம், கியூபா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் ஆலமரமாக வியாபித்துள்ளது. லெனின், கம்யூனிசம் மக்கள் மனதில் இடம்பெற வேண்டி எழுதிக்கொண்டே இருந்தார். 1917 இல் புரட்சி நடந்து முடிந்த, முதல் இரவில் கூட எழுதினார். என்ன தெரியுமா? “நிலங்கள் அனைத்தும் பொதுவுடமை ஆகிறது” என்ற ஆவ ணமே அது! புரட்சிக்கு முன்னும் இவர் எழுதிக் கொண்டே இருந்ததால், “ இவர் எழுத்தால் புரட்சி வராது” என சைபிரிய உளவுப்பிரிவு அதி காரிகள் அரசுக்கு அறிக்கை அளித்தனர். ஆனால் இவரது எழுத்து ஸ்தாபனத்தையும் - தத்து வத்தையும் ஒரு சேர இணைத்து பயணித்து பரப்பியது! வலுவான ஸ்தாபனம் உருவான தற்கு இவரது எழுத்தே காரணம்!
தனிமனிதப் போராட்டமல்ல...
மார்க்ஸ் எழுதிய மூலதனம் தொகுப்பை லெனி னுக்கு முன்பே படித்தவர் இவரது அண்ணன் அலெக்சாண்டர். ஜார் ஆட்சியை கவிழ்க்க சதி செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார்! அப்போது 17 வயதான லெனின், தனிமனித போராட்டம், தியாகம் புரட்சிக்கு பயனளிக்காது, மக்களை ஒன்று திரட்ட வேண்டும் என முடிவு செய்து “தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக் கான போராட்டக் கழகம்” என்ற அமைப்பை துவக்கினார். உடனடியாக கைது செய்யப்பட்டு 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்து, ரஷ்யாவில் வறுமை - பஞ்சம் - வேலையிழப்பு - சம்பளக்குறைப்புக்கு எதிராக தொழிலாளர்களை திரட்டிய குற்றத்திற்காக 1905 இல் இருந்து 9 ஆண்டு காலம் நாடு கடத்தப்பட்டார். தன்னுடைய சிந்தனைகளை கருத்துக்களை ரஷ்யாவுக்குள் கொண்டு செல்லும் வாகனங்களாக பத்திரிகைகளை நினைத் தார், “கட்சியை எங்கிருந்து தொடங்குவது?” என்ற போது ஒரு நாளிதழை உருவாக்குவோம் என்று இஸ்கராவை (தீப்பொறி) உருவாக்கினார். அதை தொடர்ந்து புதுவாழ்வு, உண்மை, சமூக ஜனநாயக வாதி ஆகிய இதழ்களையும் தொடங்கினார், எழுதி னார்! இவ்விதழ்களும் இவரது எழுத்துக்களுமே சோவியத் புரட்சிக்கு அடித்தளம் இட்டது!
கிரியா ஊக்கி பத்திரிகை
புரட்சிக்கு ஆயுதம் மட்டுமே ஆயுதம் அல்ல! காகிதமும் ஒரு பிரதான ஆயுதம் என்று நிரூபித்தவர் லெனின். சமுதாய மாற்றத்திற்கு மாபெரும் கிரியா ஊக்கி பத்திரிகைகளே! மக்கள் ஜனநாயகப் புரட்சி, சோசலிசம், கம்யூனிச சமு தாயம் மலரும் வரை எழுத வேண்டும். அதை தக்க வைக்க லெனின் போல எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் “கட்சிப்பத்திரிகை கட்சி அமைப்பாளன்” சொன்னவர் லெனின்! தமிழகத்தில் நமது “தீக்கதிர்” அன்றாடம் ஸ்தாபனம் - தத்துவம் - தேசிய அரசியல் மற்றும் நாட்டு நடப்புகள் என செய்திகளை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய தலைமுறைக்கு தீக்கதிர் நாளிதழ் ஒரு “தினசரி ஆசிரியர்” என்றே குறிப்பிடலாம்! முழுமையான சமூக பாதுகாப்போடு, சுபிட்சமான வாழ்க்கையை இந்திய மக்களுக்கு தருவதற்காக, மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலம் மக்கள் ஜனநாயக அரசை விரைவில் அமைக்க வியூகம் வகுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் 2025 ஏப்ரல் 2-6 வரை நடக்க உள்ளது. மாநாடு வெல்லட்டும்! இந்திய அரசியலில் புதிய நம்பிக்கை வெளிச்சத்தை காண்போம்!