articles

பெண்மையைப் போற்றிடு - கோவி.பால.முருகு

பெண்களின் கல்வியைப் போற்றிடுவோம்-தடுக்கும்     பிற்போக்கு சக்தியைத் தூற்றிடுவோம்! கண்களாய்ப் பெண்களைக் காத்திடுவோம்-மறுக்கும்     கயவர்கள் செயலைத் தூற்றிடுவோம்!  ஆண்களுக்   கிளைத்தவர் பெண்களில்லை-அவர்   ஆற்றலுக் கிணையிங்கு யாருமில்லை! மண்ணிலே பெண்தானே உயர்வாவாள்  -உலக    மன்றிலே உயிர்களின் வேராவாள்!  அடுப்பூதப் பெண்கள் பிறக்கவில்லை-அவர்     ஆற்றல்  பிள்ளைகள் பெறயில்லை! கெடுத்திடும் உரிமையில் நேர்மையில்லை-அவர்      கெட்டால் உலகமே அழிவினெல்லை!  வின்னிலேறி   விந்தைகள்  செய்திடுவாள்-கள    வீரத்தில்   நின்று சமர்புரிவாள்! எண்ணில் கலைகளில் தேர்ந்திடுவாள் -அவள்    எதிலும் தோல்வியைத் தழுவமாட்டாள்!

பழமை வாதத்தை உடைத்தெறிவாள்-அடிமைப்         பாதகப் போக்கைத் துடைத்தெறிவாள்! அழகாம் உலகிற்கு பெண்ணினமே!-அவள்        அனைத்திலும்  அதிகாரம்  பண்ணட்டுமே!   பெண்களில் புலவர்கள் பலரிருந்தார்-அவர்      பெருமையால் உலகில் தலைசிறந்தார்! மண்ணை ஆண்டு மாண்புற்றாள்-அவள்       மாண்பினால் அனைத்தையும் பெற்றிட்டாள்!  பழமை வாதத்தைத்  துடைத்தெறிவோம்-பெண்கள்    பாரினில் வலம்வரப் படைத்திடுவோம்! அழகிய பெண்ணியம் சமைத்திடுவோம்-நாட்டில்    ஆற்றலே பெண்களாய் அமைத்திடுவோம்!