பெண்களின் கல்வியைப் போற்றிடுவோம்-தடுக்கும் பிற்போக்கு சக்தியைத் தூற்றிடுவோம்! கண்களாய்ப் பெண்களைக் காத்திடுவோம்-மறுக்கும் கயவர்கள் செயலைத் தூற்றிடுவோம்! ஆண்களுக் கிளைத்தவர் பெண்களில்லை-அவர் ஆற்றலுக் கிணையிங்கு யாருமில்லை! மண்ணிலே பெண்தானே உயர்வாவாள் -உலக மன்றிலே உயிர்களின் வேராவாள்! அடுப்பூதப் பெண்கள் பிறக்கவில்லை-அவர் ஆற்றல் பிள்ளைகள் பெறயில்லை! கெடுத்திடும் உரிமையில் நேர்மையில்லை-அவர் கெட்டால் உலகமே அழிவினெல்லை! வின்னிலேறி விந்தைகள் செய்திடுவாள்-கள வீரத்தில் நின்று சமர்புரிவாள்! எண்ணில் கலைகளில் தேர்ந்திடுவாள் -அவள் எதிலும் தோல்வியைத் தழுவமாட்டாள்!
பழமை வாதத்தை உடைத்தெறிவாள்-அடிமைப் பாதகப் போக்கைத் துடைத்தெறிவாள்! அழகாம் உலகிற்கு பெண்ணினமே!-அவள் அனைத்திலும் அதிகாரம் பண்ணட்டுமே! பெண்களில் புலவர்கள் பலரிருந்தார்-அவர் பெருமையால் உலகில் தலைசிறந்தார்! மண்ணை ஆண்டு மாண்புற்றாள்-அவள் மாண்பினால் அனைத்தையும் பெற்றிட்டாள்! பழமை வாதத்தைத் துடைத்தெறிவோம்-பெண்கள் பாரினில் வலம்வரப் படைத்திடுவோம்! அழகிய பெண்ணியம் சமைத்திடுவோம்-நாட்டில் ஆற்றலே பெண்களாய் அமைத்திடுவோம்!