சென்னை சிறப்பு மாநாட்டில் அ.சவுந்தரராசன் கேள்வி
சென்னை, ஆக.2- சமூக பாதுகாப்பற்ற வேலை, உழைப் புச் சுரண்டல், ஆட்சியாளர்களின் கொள் கைகளால் பெருநிறுவன முதலாளி களுக்கு குன்றுபோல் லாபம் குவிகிறது என்று சிஐடியு மாநிலத்தலைவர் அ. சவுந்தரராசன் கூறினார். சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை யை உறுதிப்படுத்தக் கோரி செவ்வாயன்று (ஆக.1) சென்னையில் மாநில சிறப்பு மாநாடு நடைபெற்றது. சமூக பாதுகாப்பு டன் கூடிய வேலைக்கான இயக்கம் (மெஸ்) இந்த மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் அ.சவுந்தரராசன் பேசியதன் சுருக்கம் வருமாறு: சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலை என்பது போர் முழக்கம். இந்த போரை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். தற் போதுள்ள வேலைகள் மிக வேகமாக பறி போய்க் கொண்டு இருக்கிறது. எதிர் காலத்தில் வேலைவாய்ப்பு சுருங்கி, இல் லாமல் போகும் நிலை உள்ளது. நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றை லாபத்தை குவிப்ப தற்காக முதலாளிகள் பயன்படுத்து கிறார்கள். ஆட்சியாளர்கள் இதனை முறைப்படுத்த வேண்டும். சமூக பாதுகாப்பு இல்லாத காண்ட் ராக்ட் தொழிலாளியை, தொழிலாளியாக வகைப்படுத்த முடியாது. அந்த பணி இடங்களை காலிப்பணியிடங்கள் பட்டிய லில்தான் வைக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் காண்ட்ராக்ட், கேசுவல், அப்ரண்டீஸ் போன்ற பெயர்களில் தீவிர கொள்ளை நடக்கிறது. நீம், நாப்ஸ் என்ற பெயரிலும் சுரண்டுகிறார்கள்.
வேலைவாய்ப்புத்துறை என்று இருந்ததை, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத்துறை என்று மாற்றி னார்கள். பயிற்சியாளர்கள் என்று சட்டம் போட்டு, திட்டம் வகுத்து, நிறைவான உற் பத்திக்கு, குறைவான கூலிக்கு ஆள் அனுப்புகிறார்கள். இந்த உழைப்புச் சுரண்டலால் பெரும் தொழில் நிறுவனங்க ளின் லாபம் குன்றுபோல் குவிகிறது. உழைப் புச் சுரண்டல் செய்தால் அங்குள்ள ஆட்சி பாதுகாக்கும் என்று வெளிநாட்டு முதலாளி கள் இந்தியாவில், தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பி வருகிறார்கள். வேலை கிடைக்காதவர்கள் பெரும் படையாக இருப்பதால், வேலைக்கு செல்பவர்களி டம் உழைப்பை சுரண்டுகிறார்கள். பணி நியமனம், நிரந்தர வேலை, நியாயமான கூலி, தொழிற்சங்கம், சட்டப் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கி யதுதான் சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை. இன்றைக்கு 80 விழுக்காடு தொழிற்சாலைகளில் சமூக பாதுகாப்பு டன் கூடிய வேலை இல்லை. முறைசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட 70 கோடிப் பேருக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. அங்கன்வாடி, சத்துணவு, ஆஷா, மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்ட ஊழியர்களுக்கு குறைந்த கூலி கொடுத்து அரசே உழைப்புச்சுரண்டல் செய்தால், முதலாளியிடம் எப்படி கேள்வி கேட்க முடியும்? முறைசாரா தொழிலாளர் களுக்கு குறைந்தபட்ச கூலியை நிர்ண யித்து அரசு செயல்படுத்த வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகமாக கேரளா செல்வதற்கு காரணம், அங்குள்ள இடதுசாரி அரசு 600 ரூபாய் குறைந்தபட்ச கூலி என்று சட்டம் வைத்துள்ளது. வலு வான தொழிற்சங்கமும், இடதுசாரி இயக்க மும் உள்ளதால் கூலி பாதுகாப்பு உள் ளது. வறுமையில் இருப்பவர்களுக்காக வருத்தப்படுவதல்ல; அதற்கான காரணத் தையும், அதை மாற்றுவதற்காகவும் சிந்திப்போம். அதை மாற்றுவோம். வேலையில்லாதவர்களுக்கு வேலை, வேலையில் இருப்பவர்கள் மற்றும் புதி தாக வேலைக்கு வருவோருக்கு சமூக பாதுகாப்பு, குறைந்தபட்ச கூலி, சட்டப் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி உருவான இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம். இவ்வாறு அவர் பேசினார்.