articles

img

எரியும் வயிறும், எரியாத அடுப்பும் - அ.சவுந்தரராசன் பேச்சு

இன்றைய பல்வேறு நெருக்கடி யான சூழலில், தொழில்முனை வோர்கள் “புலி வாலை பிடித்த கதையாக” விழி பிதுங்கி நிற்கிறார்கள். கோவை மற்றும் திருப்பூர்  பகுதிகளில் விசைத்தறி தொழில் முனைவோர்கள் இயந்திரத்தை பிரித்து பழைய இரும்பிற்கு விற்பதாக தெரிவிக்கின்றனர். அதே போல, லாரி மற்றும் கனரக வாகனங்கள் வைத்திருப்போர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ,கட்டுபடியாகாத பாரங்களை ஏற்றினால் பொருட்களின் மீது விலை கூட்டுவது, ஆன்லைன் அபராதம் என எதனை யோசிப்பது என தெரியாமல், அவர்களும் வாகனங்களை உடைத்து பழைய இரும்பிற்கு போடுவதாக தெரி விக்கின்றனர். இதெல்லாம், அரசின் காது களுக்கு எட்டுவதே இல்லை.  முதலீட்டின் மூலமாக உற்பத்திப் பண்டங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம், அதன் மதிப்பு கூட்டப் பட்டு,  வருவாயிலிருந்து அசல் தொகையை பெறுவதன் மூலமே  தொழில் விருத்தியடை யும். தற்போது தொழிலும் பாதிக்கப்பட்டு,  தொழில் முனைவோரும் சிரமப்பட்டு,    அரசுக்கு மட்டும் பணம், மீண்டும் பணம் என்பதே நடக்கிறது. தொழில்களை வளர்ச்சி காணச்செய்ய  அரசுகள் கொள்கையை உருவாக்க வேண்டும். தொழிலாளர்களின் உரிமைக்காக போராடுகிற சிஐடியு, தொழில் முனை வோர்களின் நெருக்கடிகளையும் உணர்ந்து அவர்களுக்கு ஆதரவாக முன்னெடுப்புகளை செய்து வருகிறோம்.  

அரசிடம் விளக்குவோம்

இங்கே பேசிய தொழில் முனைவோர் கள், தென்னை நார், கம்ப்ரசர் உள்ளிட்ட தொழில்களில் உள்ள வாய்ப்புகள் குறித்து பேசினார்கள். இதனை எப்படி மேம்படுத்தலாம், இதனால் எவ்வ ளவு வேலை வாய்ப்புகள் பெருகும் என்ப தெல்லாம் விரிவாக பேசியிருக்கிறார்கள். இவ்வளவு வாய்ப்புகள் உள்ளது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இவை அனைத்தையும் குறிப்புகளை எடுத்துள் ளோம், இதனை தொகுத்து தொழிற்துறை அமைச்சருக்கும், தமிழ்நாடு முதல்வரை நேரில் சந்தித்தும் விளக்கமாக எடுத்து ரைக்கும் பணியை முன்னெடுப்போம்.  தொழிலாளர்களோ, தொழில் முனை வோர்களோ,  தங்களுடைய கோரிக்கை களுக்காக கெஞ்சக்கூடாது.  போராட்டங்க ளை திட்டமிட வேண்டும். அதன் மூலம் தான் வெற்றியடைய வேண்டும்.  அதே நேரத்தில் தொழில்துறை வளர்ச்சி அடைய மூலப் பொருட்கள் மிக இன்றியமையாததாக இருக்கிறது. இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று வரலாற்று ரீதியாக தொழிற்சாலைகள் உருவான பகுதிக்கு மூலப்பொருட்களை கொண்டு வந்து சேர்க்கிற முக்கியமான பணியை அரசு செய்ய வேண்டும்.

தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் வாய்ப்பு

தமிழ்நாட்டில், மேற்கு மாவட்டங்களில் வரலாற்று ரீதியாக ஜவுளித்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. விலை ஏற்ற இறக்கமின்றி நிலையான விலைக்கு தடங்கலின்றி மூலப்பொருட்களை கொண்டு வந்து சேர்ப்பது அரசின் முக்கிய மான கடமையாகும். அதேபோல, ஏற்கனவே இப்பகுதி பருத்தி விளைச்சல் இருந்த பகுதிகள்தான். காலப்போக்கில் பருத்தி  விவசாயம் இல்லாமல் போயுள் ளது. மீண்டும் பருத்தியை பயிரிடும் நட வடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல, மூலப்பொருட்கள் அதிகமாக உற்பத்தியாகும் பகுதிகளில், சம்பந்தப்பட்ட மூலப் பொருட்கள் சார்ந்த தொழில்களை உருவாக்குவ தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பூக்கள் அதிகம் விளைச்சல் உள்ள பகுதிகளில் சென்ட் தொழிற்சாலை களையும், மாம்பழம் உள்ளிட்ட பொ ருட்கள் அதிகம் உற்பத்தியாகும் பகுதி யில், பழரச தொழிற்சாலைகள் என இது போன்று தொழில்களை உருவாக்கு வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதே தொழில் வளர்ச்சி அதி கரிக்க வாய்ப்பு ஏற்படும். 

வெறுப்பை விதைக்கக்கூடாது

இன்று வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து பேசப்படுகிறது. எரிகிற வயிறும் எரியாத அடுப்பும் இருக்கிற நிலையை மாற்றி, எரியாத வயிறும், எரியும் அடுப்புகளும் உள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும். அதுதான் சீரான வளர்ச்சியாகும். வடமாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள், எரியாத அடுப்பின் நிலை கண்டு எரிகிற வயிறோடு வேலை தேடி வருகிறார்கள். வறுமையிலும், பட்டினியிலும் வாழ்ந்து வருகிற அவர்கள் இங்கே தொழிலாளராக வரு கிறார்கள். அவர்களுக்கு வேலை கொடுத்து, வாழ்வாதாரம் அளித்து அவன் வயிற்றுப் பசியை போக்குகிற நடவ டிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இத னால், வட மாநில தொழிலாளியின் பசித்தீ அடங்கி அடுப்பு எரிகிறது.  அதே நேரத்தில் இந்த வயிற்றுத் தீயை  அணைப்பதற்கு பதிலாக, மத, இன, மொழி அடிப்படையில் வெறுப்பை விதைக்கிற நடவடிக்கையை சிலர் மேற்கொள்கிறார் கள். இந்த மத, இன, மொழி அடிப்படை யில் வெறுப்பை விதைப்பதால் ஒருபோ தும் தொழிலாளர்களின் வயிற்றுப் பசியை போக்கிவிட முடியாது. இவ்விவகாரங்க ளில், மனிதநேயத்தோடு செயல்பட வேண்டும். நாங்கள் எப்போதும் தொழிலா ளிகள் பக்கம் தான் இருப்போம். 

(கோவையில் நடைபெற்ற சிறு, குறு, 
நடுத்தரத் தொழில் பாதுகாப்பு மாநாட்டில் 
சிஐடியு தலைவர் அ.சவுந்தரராசன் 
ஆற்றிய உரையிலிருந்து...)