articles

img

மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம் பீளமேடு பிரச்சாரத்தில் என். குணசேகரன்

மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம்

பீளமேடு பிரச்சாரத்தில் என். குணசேகரன்

“நம் நாட்டின் எல்லைக்குள் பயங்கரவாதிகள் புகுந்து  தாக்குதல் நடத்திவிட்டு, எந்தவித அச்சமுமின்றித் திரும்பிச் சென்றுள்ளனர். மோடி இந்த நாட்டு மக்களை எப்படிப் பாதுகாப்பார் என்ற  கேள்வியை மார்க்சிஸ்ட் கட்சி எழுப்பு கிறது. ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டது என்று கூறிய நிலை யில், தற்போது நடக்கும் பயங்கர வாதப் படுகொலைகளுக்கான காரணத்தை நாடாளுமன்றத்தைக் கூட்டி விளக்க மோடி தயாராக இல்லை.” பொருளாதார வீழ்ச்சி “நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு 25% முதல் 27% வரை அதிக வரி விதிப்பதால் ஏற்றுமதி முடங்கியுள்ளது. இதன் காரணமாக பொருள் உற்பத்தி குறைந்து வேலையின்மை அதிகரித்துள்ளது. படித்த இளைஞர்களுக்கு உத்தரவாதமான வேலைவாய்ப்பு கிடைக்காமல் அவதிப்படும் நிலை உள்ளது.” முதலாளிகளின் ஆதரவாளர் “அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்தாதபோது, அதை வாராக் கடனில் வைத்து அவர்களைப் பாதுகாக்கும் வேலையை மோடி செய்கிறார். ஆக்ஸ்பாம் அறிக்கை இந்தியா பட்டினியால் வாடும் மக்களைக் கொண்ட நாடு என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் மோடிக்கு வறுமை, வேலை யில்லாத் திண்டாட்டம் பற்றி கவலை இல்லை. அதானி உள்ளிட்ட பெரும் முதலாளி  களின் லாபத்தைப் பாதுகாப்பது மட்டுமே அவரது நோக்கம்.” ஆர்எஸ்எஸ் வழிநடத்தல் “மோடி அரசு ஆர்எஸ்எஸ் அமைப்பால் வழிநடத்தப்படு கிறது. மோடியின் அமைச்சரவை முழுவதும் ஆர்எஸ்எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியாவில் இந்து வெறியர்களின் அரசா ங்கத்தை அமைப்பதே ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம். அதற்காக முஸ்லிம் மற்றும் சிறு பான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டி தாக்குதல்கள் நடத்துகின்றனர். பயங் கரவாதிகளைப் பிடிக்க முடியாத மோடி அரசு, இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டுகிறது.” மக்கள் விழிப்புணர்வின் தேவை “அனைத்து நிலைகளிலும் தோல்வி யடைந்த மோடி அரசு, மக்களின் கவனத்தை திசைதிருப்ப மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் வேலையைச் செய்கிறது. இந்நிலையில்தான் மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்ப மார்க்சிஸ்ட் கட்சி இந்த பிரச்சார இயக்கத்தை முன்னெடுக்கிறது.” கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்  என்.குணசேகரன் ஆற்றிய உரையில் இருந்து...