மொத்த உள்நாட்டு உற்பத்தி: தரவரிசையும் உண்மை நிலையும்
தி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி, இந்தியா நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். சர்வதேச நிதியத்தின் (IMF) 2025-26ஆம் ஆண்டுக் கான உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இது கணிக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்ளும் அள வுக்கு, அவர், அந்த அமைப்புக்கு உண்மையுள்ள வராக இருக்கிறார். இந்தியாவின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி, 4.2 லட்சம் அமெரிக்க டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது, ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட சற்றே அதிகம். ஆனால், இந்தியாவின் தனிநபர் வருமானம், ஜப்பானின் தனிநபர் வருமானத்தில் பதின்மூன்றில் ஒரு பங்கு மட்டுமே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பித்தலாட்டம்
எனவே, மோடி அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கும் பொருளாதார வல்லுநர்களை, கோடி மீடியாக்கள், முகத்துதி செய்து உற்சாகப்படுத்து கின்றன. உண்மையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்கள் மீதான இந்த பித்தலாட்டங்கள் தற்செயலானது அல்ல. இது மக்களின் நிலை மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் பற்றி வெளிப்படுத்துவதை விட அதிகமாக மறைக்கவே உதவுகிறது. 2022ஆம் ஆண்டின் உலக சமத்துவமின்மை அறிக்கையின்படி, இந்திய மக்கள்தொகையில் உச்சத்தில் உள்ள 1 சதவீதத்தினர் நாட்டின் செல்வத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக வைத்தி ருக்கும் அதே சமயத்தில், அடிமட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினர் நாட்டின் செல்வத்தில் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு நாட்டில் வருமான சமத்துவ மின்மை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நாட்டில் உச்சத்தில் உள்ள 10 சதவீதத்தினர் தேசிய வருமானத்தில் 57 சதவீதத்திற்கும் மேல் கொண்டி ருக்கிறார்கள். இந்த சூழலில் ஒட்டுமொத்த - மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மீதான கணிப்பு தவறானது மட்டுமல்லா மல், கார்ப்பரேட்-மதவெறியர்களின் பிணைப்பு மக்கள் மீது ஏற்றியுள்ள கொடூரமான சுமையை அவர்கள் அறியாவண்ணம் திசைதிருப்புவதற்கான திட்டமிட்ட முயற்சியுமாகும்.
மூலதனத்தின் சுரண்டல் தீவிரம்
இதன் பின்னணி தெள்ளத் தெளிவான ஒன்றா கும். 2006இல் பிரேசிலிய பொருளாதார வல்லுனர் ஆல்ஃபிரடோ சாத்-ஃபில்ஹோ கணித்தபடி, நிதி மூல தனம் கட்டவிழ்த்துவிட்டுள்ள நவீன தாராளமயக் கொள்கையின்கீழ் நடைபெறும் ஆட்சியின்கீழ் “சமூ கத்தின் அனைத்து வாழ்வியல் தளங்களிலும் அரசு அதி காரத்தை திட்டமிட்ட முறையில் பிரயோகித்து, சுரண்டல் மற்றும் சமூக ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மேலாதிக்கத் திட்டத்தை திணிக்கவும்; இப்ப டிப்பட்ட தாக்குதலில் அரசு தலையிடுவதில்லை என்ற கருத்தியல் நிலைபாட்டை செயல்படுத்தவும் செய்கிறது”. நிதிச் சந்தைகளின் கட்டளைகள் மற்றும் அமெரிக்க மூலதனத்தின் உலகளாவிய நலன்களின் கீழ், பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி மூல தனத்தின் முக்கிய செயல்பாடாக இருந்தது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, ஊக நிதி நடவடிக்கைகள் மூலம் குறுகிய கால சூப்பர் லாபத்தை (அதீத லாபத்தை) ஈட்டுவதற்காக மூல தனம் இப்போது பிரதானமாகப் பயன்படுத்தப் படுகிறது. பொருளாதார மூலதனத்தின் முக்கிய ஆதா ரங்கள் மூன்று. அரசின் நிதி, உள்நாட்டு சேமிப்பு மூலம் கிடைத்திடும் நிதி மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலதனத்திற்கு இடையிலான தொடர்பு களால் கிடைத்திடும் நிதி. இவை ஒழுங்குபடுத் தப்படாமலும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டும் உள்ளன. உள்நாட்டு உற்பத்தி வேலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் டிரம்ப் நிர்வாகம், ஒரு வர்த்தகப் போரை (tariff war) மேற்கொண்டதில் இது பிரதிபலிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவின் கீழ்தான் நிதி மூலதனத்தின் உலகளாவிய ஆதிக்கம் முதலில் நிறுவப்பட்டது. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 2000ஆம் ஆண்டில், உலகளாவிய வெளிநாட்டு நிறுவன முதலீடு (FII-Foreign Institutional Investment) 400 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. இதனை உலகளாவிய அந்நிய நேரடி முதலீடு (For eign Direct Investment)-ஆன வெறும் 65 டிரில்லி யன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது, நேரடி முதலீட்டின் ஒவ்வொரு டாலருக்கும், பங்குகள் போன்ற ஊக வர்த்தகங்கள் மூலமாக ஏழு டாலர்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப் பிறகு, நிதி மூலதனத்தின் ஆதிக்கம் இன்னும் அதிகமாக வெளிப்பட்டிருக்கிறது. சர்வதேச நிதியம் (IMF) வெளிப்படுத்தியுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளி விவரங்கள் சமகால முதலா ளித்துவத்தின் உள் செயல்பாடுகளையோ அல்லது அது தொழிலாளர் வர்க்கத்திற்கு ஏற்படுத்தியுள்ள பேர ழிவு விளைவுகளையோ சிறிதும் விளக்கிடவில்லை.
உற்பத்தியில் சமச்சீரற்ற தன்மை
இந்தியாவில், மக்கள்தொகையில் உச்சத்தில் உள்ள 1 சதவீதத்தினர், மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 40 சதவீதத்தைக் கட்டுப்படுத்துகின்றனர். இதன் பொருள், கிட்டத்தட்ட 1.4 பில்லியன் (140 கோடி) மக்க ளின் சராசரியாக தனிநபர் வருமானம் வெறும் 1,670 அமெரிக்க டாலர்கள் மட்டுமே. நாட்டின் செல்வத்தில் 62 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் முதல் 5 சத வீதத்தினரை நாம் நீக்கிவிட்டோமானால், சராசரி மேலும் தோராயமாக 1,100 அமெரிக்க டாலர்களாகக் குறைந்திடும். இது ஆண்டுக்கு ரூ.1 லட்சத்திற்கும் குறைவானது. இது பெரும்பான்மையான மக்கள் எதிர்கொள்ளும் கொடூரமான எதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. இந்த சமத்துவமின்மையை மேலும் அதிகரிப்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் துறை வாரியான சமச்சீரற்ற தன்மையாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பகுதி, மூலதனம் சார்ந்த சேவைத் துறைகள் மற்றும் பெரிய நிறுவனங்களால் உருவாக்கப்படுகிறது. இதற்கிடையில், தொழிலாளர் தொகுப்பில் கணிசமான பகுதியைக் கொண்ட முறை சாரா துறைகள் மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள வர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சிறிய பங்கை மட்டுமே செலுத்துகின்றனர். இதன் விளை வாக, வளர்ந்து வரும் வேலையின்மை, நிலை யான வருமானம் மற்றும் வாழ்வாதாரங்கள் சீர்குலை க்கப்பட்டு, அதனால் ஆழமடைந்து வரும் நெருக்க டியுடன் சேர்ந்து கொண்டு, மேலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கார்ப்பரேட் லாபங்கள் மேலும் குவிப்பு
உலகளவில், செல்வந்தர்களால் வகுக்கப் பட்டுள்ள வரிக் கொள்கைகள் பொது முதலீட்டு முடிவு களை தங்களுக்கு சாதகமாக வடிவமைத்துள்ளது. இந்தியாவில், செல்வந்தர்களுக்கு ஆதரவான கொள்கைகள் மிகவும் நன்றாகவே தெரிகிறது. கூட்டுக்களவு முதலாளித்துவம் வளர்ந்துள்ள நிலை யில் கார்ப்பரேட்டுகள் இயற்கை வளங்கள் உட்பட பொதுச் சொத்துக்களை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்வது அதிகரித்துள்ளது. இதனால் கார்ப்பரேட்டுகளின் லாபங்கள் உயர்ந்துள்ள அதே சம யத்தில், தேசிய வருமானத்தில் தொழிலாளர்களின் பங்கு கூர்மையாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை முறைசாரா பொருளாதாரத்திற்கு கடுமையான அடியை ஏற்படுத்தியது. கோவிட்-19 தொற்றுநோயின் விளைவுகள் நிலைமையை மேலும் மோசமாக்கியது. அத்தகைய சூழலில், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கோ அல்லது நிலையான வருமா னத்தை உறுதி செய்வதற்கோ எந்த வாய்ப்பும் இல்லை.
திளைக்கும் மேட்டுக் குடியினர்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெயரளவி லான அதிகரிப்பு கூட, அந்த வளர்ச்சி பரவலாக பகிரப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் அளித்திட வில்லை. உழைக்கும் ஏழை மக்கள் மற்றும் வேலை யில்லாதவர்களைத் தாண்டி, நடுத்தர வர்க் கத்தினர் கூட மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக மாறியிருக்கின்றனர். மறுபகிர்வு கொள்கைகள் இல்லாத நிலையில், பொருளாதார மேட்டுக்குடியினர் (elite people) அரசு அளித்திடும் பொது சேவைகளைப் பயன் படுத்தாமல் விலகிச் சென்று, தனியார் நடத்தும் பள்ளி கள், கார்ப்பரேட் மருத்துவமனைகளைப் பயன்படுத்து பவர்களாகவும், உயர் பாதுகாப்புடன் அனைத்து விதமான உயர் வசதிகளையும் அனுபவிப்பவர்களா கவும் (gated communities) மாறிக் கொண்டி ருக்கின்றனர். இது உலகளாவிய பொது அமைப்பு களில் முதலீடு செய்வதற்கான அரசியல் விருப்பத்தை அரிக்கிறது. இந்நிலையில், அடிப்படை ஊட்டச்சத்து, வீட்டுவசதி, கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்புக் காக போராடும் 800 மில்லியன் (80 கோடி) இந்தியர்க ளுக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவரிசை பொருத்தமற்றதாகும். கார்ப்பரேட்டுகள்-மதவெறியர்கள் பிணைப்பு வளர்ந்திருப்பது தற்செயலானதல்ல. அது மக்களை அடையாள அரசியல் வழியே பிரிப்பதற்கு இட்டுச் செல்கிறது. தங்கள் ஆட்சி, தொடர்வதை உத்தரவாதப் படுத்துகிறது. இந்தப் பின்னணியில் மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலமாக மட்டுமே நாம் முன்னேறிச் செல்ல முடியும்.