நாடாளுமன்றத்தில் வண்ணபுகைக் குண்டு வீசியவர்கள் வேலையின்மை குறித்து பேசினர். அவர்கள் நோக்கம் என்ன வென்றும், அவர்களது பின்புலம் குறித்தும் ஆராய வேண்டியுள்ளது. இந்தச் சூழலில் தி இந்து ஆங்கில நாளேடு வேலைவாய்ப்பின்மை மீண்டும் தீவிர மடைந்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள (சிஎம்ஐஇ) வேலைவாய்ப்புத் தொடர்பான விவரங்களைப் பார்த்தால் கொரோனா தொற்று நோய்க்குப் பின்னர் வேலையில்லா பட்டா ளத்தின் நிலை என்ன என்பதை எடுத்துரைக்கிறது.
தொழிலாளர் பங்கேற்பு விகிதம் என்றால் என்ன?
தொழிலாளர் பங்கேற்பு விகிதம் என்பது 16-64 ஆண்டுகளில் உழைக்கும் மக்கள்தொகையின் பகுதி யாகும். ஒரு நாட்டில் உழைக்கும் வயதினரை நிர்ண யிப்பதற்கான அளவீடு ஆகும். வேலை தேடும் நபர்கள் அல்லது தனிநபர்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிக்கிறது. இந்தியாவில் வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை 2023-ஆம் ஆண்டில் 39.5 சதவீதமாக இருக்கிறது. கொரோனா தொற்றுப் பரவிய ஆண்டு களையும் சேர்த்துக் கணக்கில்கொண்டால் இது குறைவு தான். ஆண்களில், இது 66 சதவீத மாகவும் பெண்களிடையே 8.7 சதவீதமாகவும் உள்ளது. “கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவின் வேலைதேடுவோர் விகிதம் எப்படியிருந்தது என்பதை கீழ்க்கண்ட அட்டவணையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
நகர்ப்புறம் / கிராமப்புறம்
ஆண்டு மொ ஆ பெ மொ ஆ பெ
2016-2017 44.7 72.6 14.6 47 75.1. 15.1
2017-2018 42 70.5 11.1 44.6 73.4 12.2
2018-2019 41.2 69.5 10.3 43.7 72.8 11.3
2019-2020 40.6 68.5 9.4 43.8 72.5 11.6
2020-2021 37.4 64.2 7.3 41.4 68.7 10.2
2021-2022 37.6 64.4 7.0 41.4 68.3 10.4
2022-2023 37.5 64.1 6.9 40.5 66.9 9.7
மொ-மொத்தம் ஆ-ஆண்கள் பெ-பெண்கள்
வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவு தொற்றுநோய்க்கு முன்பே இருந்துள்ளது. கொரோனா தொற்று நோய் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது என 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் அமைப்பான (சிஎம்ஐஇ) தெரிவித்துள்ளது.
அனைவரும்
ஆண்டு மொ ஆ பெ
2016-2017 7.4 5.1 20.4
2017-2018 4.7 3.7 11.2
2018-2019 6.3 5.1 14.6
2019-2020 7.5 6.1 17.1
2020-2021 8.8 8 15.4
2021-2022 7.7 6.9 13.6
2022-2023 7.6 6.6 15.5
மொ-மொத்தம் ஆ-ஆண்கள் பெ-பெண்கள்
பின்வரும் அட்டவணை இந்தியாவில் வேலை யின்மை விகிதத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வேலை பார்க்கும் தகுதியுள்ளவர்களின் மொத்த ஒப்பீட்டில் வேலையில்லாதவர்கள் விகிதம் 2023ஆம் ஆண்டில் 7.6 சதவீதமாக உள்ளது. இது கொரோனா தொற்றுக் காலத்தை விட அதிகம். (தரவுகள் செப்டம்பர் மாதத்தை அடிப்படையாகக் கொண்டது.)
ஆண்டு மொத்தம் நகர் கிராமம் மொத்தம் நகர் கிராமம்
செப்.2016 47 45.3 47.9 7.2 8.9 10.88
செப்.2017 43.4 41.4 44.3 4.1 4.9 3.7
செப்.2018 42.8 40.9 43.8 6.1 6.7 5.8
செப்.2019 42.8 40.7 43.9 7.6 9.1 6.8
செப்.2020 40.7 38.0 42.0 7.3 9.1 6.5
செப்.2021 40.5 37.7 41.9 7.3 8.9 6.6
செப்.2022 39.1 36.8 40.2 7.1 8.4 6.5
செப்.2023 40.2 38.7 41 8.1 9.2 7.5
2016-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை அனைத்து காலாண்டிலும் வேலையின்மை சதவீதம் அதிகரித்தே காணப்படுகிறது. வேலை செய்ய வேண்டிய வயதில் மிகக் குறைவானவர்களே வேலை தேடுவதாக தரவுகள் கூறினாலும், ஒப்பீட்டளவில் அதிகமான மக்கள் வேலையில்லாமல் இருந்தனர்.
ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பில் கடும் வீழ்ச்சி
ஒட்டுமொத்தத் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2016-ஆம் ஆண்டு இருந்ததை விட 2023-ஆம் ஆண்டு சுமார் ஏழு சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்து 40.2 சதவீதமாக உள்ளது. 2020-ஆம் ஆண்டில் இது 40.7 சதவீதமாகவும், 2021-ஆம் ஆண்டில் 40.5 சதவீதமாகவும் 2022-ஆம் ஆண்டில் 39.1 சதவீத மாகவும் இருந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர்களை வாட்டிக் கொண்டிருக்கிறது.
நகர்/கிராமம்
ஆண்டு மொத்தம் நகர் கிராமம் மொத்தம் நகர் கிராமம்
நவ.2019 42.3 40.3 43.3 7.2 8.9 6.5
நவ.2020 40.1 37.1 41.6 6.5 7.1 6.2
நவ.2021 40.2 37.5 41.6 7 8.2 6.4
நவ.2022 39.6 37.8 40.6 8 8.9 7.6
நவ.2023 41.1 38.9 42.3 9.2 9.4 9.1
0.5 சதவீத வளர்ச்சி ஒரு வளர்ச்சியா...?
தொழிலாளர்-மக்கள் தொகை விகிதம்: மக்கள்தொகையில் பணிபுரியும் நபர்களின் சதவீதம் (15 வயதிற்கு மேற்பட்டவர்கள்), நகர்ப்புறங் களில் 2022-ஆம் ஆண்டு ஜூலை-செப்டம்பரில் 44.5 சதவீதமாக இருந்தது, இது 2023-ஆம் ஆண்டு ஜூலை-செப்டம்பரில் 46 சதவீதமாக அதிகரித்துள்ளது. (வெறும் 0.5 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது)
யாருக்கு வேலை வழங்கியுள்ளார் மோடி
உலக வங்கியின் கூற்றுப்படி, இந்தியாவில் (வேலைவாய்ப்பின் அடிப்படையில்) அமைப்புசாரா துறையில் 83 சதவீத பணியாளர்கள் உள்ளனர்.ஆனால், பொருளாதார அடிப்படையில் 92.4 சதவீத முறைசாரா தொழிலாளர்கள் (எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம், ஊதிய விடுப்பு மற்றும் பிற சலுகைகள் இல்லாமல்) உள்ளனர்.
உண்மையை மறைக்கும் ஒன்றிய பாஜக அரசு
சமீபத்திய நிதி ஆயோக் அறிக்கை, இந்தியாவில் பெண்கள் 9.8 மடங்கு அதிகமாக செலவு செய்கி றார்கள் என்று கூறுகிறது. ஆனால், உண்மையை மறைக்கிறது. படித்த பெண்களில் பெரும் பகுதியினர் சமையல், சுத்தம் செய்தல் மற்றும் குழந்தைப் பராமரிப்பு போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ள முழுநேர இல்லத்தரசிகள். அவர்கள் செய்யும் பணிகளுக்கு பணம் ஏதும் வாங்குவதில்லை. இவர்கள் வேலையில்லாத படையில் இடம் பெறமாட்டார்கள்.
பெண் தொழிலாளர் பங்கேற்பு அதிகமா?
இந்தியாவின் (2023, டிசம்பர் 18ஆம் தேதியின் அடிப்படையில்) மக்கள் தொகை 1,434,697,700 சமீபத்திய ஐக்கிய நாடுகளின் தரவுகள், வேர்ல்டோ மீட்டர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர் களில் 4.19 லட்சம் பேரை கணக்கிட்டு ஏதோ வேலை வாய்ப்பை அள்ளி வழங்கிவிட்டதாகவும், குறிப்பாக பெண்கள் அதிகளவில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் அள்ளி விடுகிறது மோடி அரசு.
ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நாட்டின் தொழிலாளர் சக்தியின் அளவு குறித்த முதற்கட்ட கணக்கெடுப்பு என்ற ஒன்றை நடத்தியுள்ளது. அரசு எடுத்துக்கொண்ட கிராமங்கள் வெறும் 6,982. நகரங்கள் 5,732 அவ்வளவு தான். கணக்கெடுக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 1,01,655 (கிராமப்புறங்களில் 55,844. நகர்ப்புறங்களில் 45,811). கணக்கெடுக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 4,19,512 (கிராமப்புறங்களில் 2,43,971, நகர்ப்புறங்களில் 1,75,541). கணக்கெடுக்கப்பட்ட நபர்களில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,20,260 (கிராமப்புறங்களில் 1,81,049 மற்றும் நகர்ப்புறங்களில் 1,39,211)
இதனடிப்படையில் கிராமப்புறங்களில் 55.5 சதவீத ஆண்களும், 30.5 சதவீத பெண்களும் தொழி லாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். நகர்ப்புறங் களில் 58.3 சதவீத ஆண்களும், 20.2 சதவீத பெண்களும் தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். 15 வயது முதல் 29 வரையிலான வயது உடைய வர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் 45.9 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 40.7 சதவீதம் பேரும் தொழிலாளர்களாக பணியாற்றுகிறார்கள் என்கிறது.
- தொகுப்பு : ச.நல்லேந்திரன்