இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கு முன்னர் நாடாளு மன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) பணவீக்க கட்டுப்பாடு களின் தாக்கம் குறித்தும், அதன் அளவீடுகளில் இருந்து உணவுப் பொருட்களின் விலையை அகற்றுவதை ரிசர்வ் வங்கியின் பரிந்துரையாகவும் அதில் குறிப்பி டப்பட்டிருந்தது.
பிரதான பணவீக்கத்திற்கு (Headline inflation) மாறாக அதன் மையமான (Core inflation) அம்சத்தை மட்டும் இலக்காக கொள்ளும் வழக்கம் தற்போது நடைமுறையில் உள்ளது. இதனை மாற்ற முயலும் போது அதன் உட்பொருளை முழுமையாக மதிப்பிட வேண்டும் என்றால், நாம் இரண்டு அம்சங்களை அங்கீ கரிக்க வேண்டும்.
1. பணவீக்கம் தொடர்பான நம் இந்திய நாட்டின் அனுபவம்.
2. பணவீக்கத்தை கட்டுப்படுத்த நாம் தற்போது பின்பற்றும் கொள்கைகள்.
உணவுப் பொருட்களின் விலை மற்றும் பண வீக்கத்தின் பாதை
கடந்த சில மாதங்களாக உணவுப் பொருட்களின் விலை உயர்வு மிக அதிகமாக இருப்பதை தரவுகள் உறுதி செய்கின்றன. ஜூன் 2024 இல் சுமார் 10 சத வீதத்தை நெருங்கியது. கோவிட் தொற்று நோய், உக்ரைன் போர் போன்ற சாக்குப் போக்குகளுக்கு முன்னரே, 2019-ம் ஆண்டு முதல் உணவுப் பொருட்க ளின் விலை குறைந்தபாடில்லை. நுகர்வோர் விலை குறியீட்டின் பெரும் பகுதியில் உணவுப் பொருட்க ளின் தாக்கம் செலுத்துவதாலும் உணவுப் பொருட்க ளின் விலை அதிகமாக இருப்பதாலும் ஒட்டுமொத்த பணவீக்கம் வழக்கத்தை விடவும் அதிகமாகவே உள்ளது.
இதில் புரிந்து கொள்ள வேண்டிய இரண்டு அம்சங்கள்:
1. வட்டி விகிதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்தலாம் என எதிர் பார்த்து 2016இல் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்ததன் மூலம் ரிசர்வ் வங்கியின் கட்டுப் பாட்டில் அது கொண்டுவரப்பட்டது. இந்த நடை முறை பணவீக்கத்தை குறிவைப்பது (Inflation targetting) என அழைக்கப்படுகிறது.
2. பணவீக்கத்தின் அளவை தேர்ந்தெடுக்கும் திறன் மற்றும் துல்லியம், இரண்டும் ரிசர்வ் வங்கியிடம் உள்ளதாக கருதப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுக ளில் ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தை நான்கு சதவீதத்திற்கு கீழே கொண்டுவர ரிசர்வ் வங்கி தவறி விட்டதை பார்க்கும் பொழுது நடைமுறையில் இது சாத்தியம் இல்லை என்பது புரிகிறது.
வேடிக்கை பார்த்த மத்திய வங்கிகள்
இங்கிலாந்தில், பேங்க் ஆப் இங்கிலாந்தின் சாதனையும் இதுவே. 2 சதவீதம் என்ற இலக்கை நிர்ணயித்துக் கொண்டு செயல்பட்ட அமெரிக்க ரிசர்வ் வங்கியின் கதையோ பரிதாபம். 2022 இல் 8 சத வீதத்தையும் தாண்டி அது பறந்த போது பைடன் நிர்வாகம் வேடிக்கை பார்த்தது. இந்த பொருளாதா ரங்கள் அனைத்திலுமே உணவுப் பொருட்களின் உலக ளவிலான விலையின் ஏற்ற இறக்கங்கள் பணவீக்கப் பாதையை ஆட்டிப்படைத்தன என்பது தான் அனுபவம்.
நியாயமும் இல்லை! சாத்தியமும் இல்லை!
உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தை பண வீக்கத்தை கணிப்பதில் இருந்து அகற்ற வேண்டும் என்ற ஆலோசனையை ஏற்றுக் கொள்ளும் முன் இரண்டு கேள்விகள் எழுகின்றன:
முதலில், இந்த நடவடிக்கை நியாயமானதா? இரண்டாவது, ரிசர்வ் வங்கி இதில் வெற்றி அடைய முடியுமா? இரண்டுக்கும் பதில் “இல்லை” என்பதுதான்.
இந்தியாவில் ஒரு குடும்பத்தின் செலவினங்களில் உணவின் பங்கு மட்டும் தற்போது 50 சதவீதத்தை நெருங்குகிறது. சர்வதேச சராசரியின்படி இது மிகவும் அதிகமாகும். அமெரிக்காவில் இது 10 சதவீதத்திற் கும் குறைவாகவே உள்ளது.
தவறான கற்பிதம்!
பொதுவாக உணவின் பங்கு வாழ்க்கையின் அடித்த ளம் ஆகும். எனவே, வறுமையை அளப்பதற்கும் அதுவே அடிப்படையாகிறது. உணவுக்காக ஒரு குடும்பம் அதிகமாகச் செலவிடும் பொழுது அதுவும் உணவின் விலை உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்து கிறது. எனவே உணவுப் பொருட்களின் விலை ஏற்றங்க ளை புறக்கணிப்பது, அதைத் தவிர்த்து விட்டு பணவீக்க இலக்கை அடைய நினைப்பது இந்திய மக்கள் தொகை யின் பெரும்பகுதியினர் உணர்வுகளை அவமதிப்ப தாகும்.
ஏழைகளை அவமதிப்பது!
உணவு விலை ஏற்றங்கள் தற்காலிகமானது என்ற தொழில்நுட்ப நியாயமும் அறிவீனமே. விலை ஏறினால் இறங்கித்தான் ஆக வேண்டும் என்ற ஆட்சியா ளர்களின் சப்பைக் கட்டு ஏழை மக்களை அவமதிப்பதா கும்.எப்படி இருந்தாலும் இந்த தர்க்க நியாயங்கள் இந்தியப் பொருளாதாரத்திற்கு சற்றும் பொருந்தாது என்பது தான் உண்மை. தற்போது கணக்கில் கொள்ளப் படும் நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படை ஆண்டான 2011-12 முதல் கடந்த 13 ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் பண வீக்கம் குறையவே இல்லை. உண்மையில் அது பெரும் சிக்கலில் உள்ளது. இந்நிலையில் இவற்றின் விலை ஏற்றம் தற்காலிகமானது தான், எனவே அதை புறக்கணிக்க லாம் என மோடி அரசு திரும்பத் திரும்பக் கூறுவது ஏமாற்று வேலை.
பண வீக்கத்தின் மையமான அம்சம் என்ன?
பணவீக்கத்தின் அடிப்படை அம்சத்தை இலக்காக கொண்டால் ரிசர்வ் வங்கி அதை வெற்றிகரமாக அடையும் என நம்புவதற்கு இல்லை. ஏனென்றால் கடந்த 13 ஆண்டுகளில் (பணவீக்கத்தின் ஆண்டு சராச ரியாக 4 சதவீதத்தை) ஒரே ஒரு ஆண்டில் மட்டும் தான் அடைய முடிந்தது.
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனென்றால் இரண்டு காரணங்கள்: ரிசர்வ் வங்கியின் ரெப்போ (Repo) விகிதத்தின் உயர்வு பணவீக்கத்தை குறைக்காது. உண்மையில் அதிகரிக்கவே செய்யும். இதில் பொரு ளாதாரத் தர்க்கம் உள்ளது. அதிக வட்டி விகிதம் (தேவையை) கிராக்கியை (Demand) குறைக்கிறது. நிறுவனங்கள் தங்கள் இலாபத்தை உயர்த்திக் கொள்ள விலைவாசியை ஏற்றுவது போல் தான். எல்லா வற்றிற்கும் மேலாக நிறுவனங்கள் இப்போது இரட்டைத் தாக்கத்தை எதிர்கொள்கின்றன. மூலதனச் செலவு கள் அதிகரித்தால் வருவாய் வீழ்ச்சி அடையும். உற்பத்தியும் சுருங்கும். மொத்தப் பணவீக்கத்தை அளவிடுகையில் உணவுப் பண வீக்கம் முக்கியப் பங்காற்றும் அதே நேரத்தில் ஊதியத்தையும் இது நிர்ணயிக்கும். ஆனால் நிறுவனத்தின் கச்சாப் பொருளுக்கு அடுத்தபடி ஊதியச் செலவுகள் தான் முக்கியம். எனவே உணவுப் பொருட்களின் பண வீக்கம் ஊதியத்திலும் தாக்கம் ஏற்படுத்தும்.
மோடி அரசின் பயனற்ற பணவியல் கொள்கை
உணவுப் பொருட்களின் விலைகள் முக்கியமாக பணவீக்கத்தை பாதிக்கின்றன. உற்பத்தியின் அனைத்து முனைகளிலும் உழைப்பு சக்தி அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நுழைவ தால் உணவின் விலையில் ஏற்படும் மாற்றங்கள் பொருளாதாரத்தில் அனைத்து நிலைகளிலும் பணவீக்கத்தை தீர்மானிக்கின்றன. வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் செயல்படும் பண வியல் கொள்கை (Monetary Policy) பண வீக்கத்தை கட்டுப்படுத்தாது. வேறு வகையாகச் சொல்வ தென்றால், உணவுப் பொருட்களின் விலை நிர்ணயத்தில் ரிசர்வ் வங்கிக்கு எவ்விதப் பங்கும் இல்லை.
உலகின் அனைத்து அறிவார்ந்த பொருளாதார வல்லுனர்கள் இதை ஏற்கும் போது,இந்தியாவில் மட்டும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதை ரிசர்வ் வங்கியிடம் விட்டுவிடும் முடிவை ஏன் இன்னும் தொடர்கிறார்கள்? சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு உலக அளவில் ஏற்பட்ட கருத்தியல் மாற்றமே இதற்கு காரணம். உற்பத்தியை சந்தைக்கு விடுவ தும், பணவீக்கத்தை மத்திய வங்கி கட்டுப்படுத்த முடிவு செய்வதும் அதனால் ஏற்பட்ட தாக்கங்கள்.
நவீன தாராளமயத்தின் மீது காதல்!
1991 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளை அது எவ்வளவு பொருத்தமற்றதாகவும், மோசமானதாக வும், தீங்கு விளைவிப்பதாக இருந்தாலும் அவற்றை பின்பற்றுவதை நிரூபிக்கப் போட்டியிடுகின்றன. பணவீக்க இலக்குகளில் இருந்து உணவு விலை பணவீக்கத்தை அகற்றுவது அவற்றில் ஒன்றாகும்.
வேளாண் உற்பத்தியில் கவனம் செலுத்துங்கள்!
இந்தியாவைப் பொறுத்தவரை பணவீக்கத்தின் முக்கிய அம்சமாக, பிரதான காரணியாக உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஆதிக்கம் செலுத்து கிறது. எனவே அதை பணவீக்க அளவீடுகளில் இருந்து அகற்றும் திட்டம் தற்போது நிலவும் பண வீக்கத்திற்கு தீர்வாகாது.
ரிசர்வ் வங்கியின் தோல்வி!
கடந்த ஐந்து வருடங்களாக உணவுப் பொருட்கள் விலை உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் ரிசர்வ் வங்கியால் பண வீக்கத்தை கட்டுப்படுத்த முடிய வில்லை என்பது கண்கூடு.வேளாண் துறையில் உற்பத்தியை உயர்த்தும் நடவடிக்கைகள் மூலமாகவே பணவீக்கத்தை கையாள முடியும். 50 வருடங்களுக்கு முன்னர் நாட்டில் நிலவிய உணவுப் பற்றாக்குறையை வெற்றிகரமாய் முடிவுக்கு கொண்டு வந்த நம்மால்,சவால்கள் எழுந்தாலும் இதற்கு தீர்வு காண முடியும். ஆனால் வேளாண் உற்பத்தியில் ஒரு விரிவான அணுகுமுறை தேவைப்படுகிறது. உற்பத்தி விலையை கட்டுக்குள் கொண்டு வந்து விலை வாசியை நிலைப்படுத்த வேண்டும்.
உணவுப் பணவீக்கத்தை கட்டுப்படுத்த எவ்வித முயற்சிகளும் எடுக்காமல் அதே நேரத்தில் பண வீக்க அளவீடுகளில் இருந்து அதை அகற்றுவது இந்தி யாவை பாதுகாப்பற்றதாக மாற்றும். மக்களின் வாழ்க்கை தரத்தை மேலும் சிதைத்து விடும். குடும்பங்களின் வருமானத்தை உயர்த்துவதன் மூலம் உணவுப் பணவீக்கத்தை சமாளித்து விடலாம் என்று பொருளாதார ஆய்வில் வெளியிட்டுள்ள கருத்து தவறானது. ஏனென்றால் உணவுப் பொருட்களின் தற்போதைய விலை ஒட்டுமொத்த பணவீக்கத்தையும் விட வேகமாக அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பட்ஜெட் மூலமாக அதற்கு அளிக்கப்படும் நிதி ஆதா ரத்தையும் அது உறிஞ்சி விடும்.
பிற இன்றியமையாத பொதுச் சேவைகளுக்கான ஒதுக்கீடுகளையும் பறித்து விடும். இதை அனுமதிக்கக் கூடாது. உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப் படுத்துவதைத் தவிர இதற்கு மாற்று வழியோ, குறுக்கு வழியோ ஏதும் இல்லை!
கட்டுரையாளர்கள் : மேம்பாடு ஆய்வு மைய
பேராசிரியர்கள், திருவனந்தபுரம்.
நன்றி : தி இந்து 17/8/24
தமிழில் : கடலூர் சுகுமாரன்