ந ூறு நாள் வேலைத்திட்டத்தை தேசம் முழுவதும் வெட்டிச் சுருக்கி வருகிறது ஒன்றிய மோடி அரசு. தமிழகத்தில் கூட நூறு நாள் வேலைகள் 50 நாட்களுக்கு குறைவாகி விட்டது. இதை ஆடிட்டர் ஜெனரலே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு எதிராக நாடு முழுவதும் வலுவான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 4 மாதங்க ளாக செய்து வந்த நூறு நாள் வேலைத்திட்ட பணிகளுக்கு அதற்குரிய சம்பளத்தை தராமல் அந்த தொழிலாளிகளை பட்டினியால் வாட வைத்திருக்கிறது மோடி அரசு. இதுகுறித்து பல முறை மாநில அரசு, ஊரக வளர்ச்சித்துறையின் மூலமும், முதலமைச்சரின் மூலமும் ஒன்றிய அரசுக்கு கடிதங்கள் எழுதியுள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க தமிழ் மாநிலக்குழுவும், ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறையினருக்கு பல கடிதங்களை அனுப்பியும் உள்ளது.
தமிழகத்திற்கு மட்டும் 2696 கோடி ரூபாய் கடந்த மாதம் வரை சம்பளப் பாக்கியை ஒன்றிய அரசு அனுப்பவில்லை. கடந்த மாத சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது தமிழக முதல மைச்சரை தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகைமாலியும் சந்தித்து நேரடியாக பேசினார். அவரும், ஒன்றிய அரசிடமிருந்து இன்னும் பணம் வரவில்லை. வந்தவுடன் தந்துவிடுவோம் எனக் கூறியுள்ளார்.
மாநில விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி கள், ஊரக வளர்ச்சித்துறையின் தமிழக செய லாளரை சந்தித்து மனு கொடுத்து பேசிய போதும், ஒன்றிய அரசுக்கு நாங்களும் கடிதம் எழுதி அனுப்பியுள்ளோம். அவர்களும் விரைவில் பணத்தை அனுப்புகிறோம் என்று கூறினர் என்றார். இப்பொழுது தீபாவளி நெருங்குகிற நேரம். நான்கு மாதத்திற்கு மேல் சம்பள பாக்கி என்றால் ஒவ்வொரு தொழிலாளிக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளப் பாக்கி உள்ளது.
அன்றாட வருவாயில் வயிற்றை கழுவும் இந்த ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு நான்கு மாதத்திற்கு மேல் சம்பளத்தை தராமல் இருந்தால் அந்த தொழிலாளர்களின் குடும்பம், அவர்களின் குழந்தைகள் என்ன நிலையில் இருப்பார்கள்.
சாதாரண பாமரனுக்கு கூட அதன் கஷ்ட நிலை மைகளை புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த தேசத்தையே ஆளுகிறவர்கள் 135 கோடி மக்களையும் நாங்கள்தான் காப்பாற்றி வரு கிறோம் என்று கூறுபவர்கள்; அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் சம்பளம், அனை வருக்கும் குடும்ப பாதுகாப்பு நாங்கள்தான் வழங்குகிறோம் என்று கூரை மீது ஏறி நின்று பாஜகவினர் கூப்பாடு போடுகின்றனர். இவர்களுக்கு இந்த கூலித் தொழிலாளியின் நிலைமைகள் பற்றி தெரியாதா? திட்டமிட்டே இவர்கள் சம்பள பாக்கியை தராமல் இருக்கி றார்கள். ஏழைகளுக்கு ஏற்படும் கோபத்தை திமுக அரசின் மீது தீபாவளி நேரத்தில் திருப்பி விடலாம் என்று திட்டமிட்டு செய்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. ஏற்கெனவே 100 நாள் வேலைத்திட்டத்தை முடக்க நினைத்தார் கள். அது நாடு முழுவதும் கடும் கண்டனத்தை யும், போராட்டத்தையும் கிளப்பி விட்டது. எனவே அதை முடக்க முடியாதவர்கள், ஏழை களின் வயிற்றில் அடிப்பதன் மூலம் தங்களது ஆத்திரத்தை தணித்துக் கொள்ள முயற்சிக் கிறார்கள்.
100 நாள் வேலைத்திட்ட தொழிலாளிக்கு வாரா வாரம் சம்பளம் வழங்க வேண்டுமென்று அந்த சட்டத்தின் துவக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் மோடி அரசு வந்ததற்கு பின்பு மாதக் கணக்கில் சம்பளம் கொடுக்கப்படாம லிருந்தது. இப்போது நான்கு மாதமாகியும் கொடுக்கப்படவில்லை.
சட்டத்தை ஏழைகளுக்கு சாதகமாக உரு வாக்குவதும், அமல்படுத்துவதும் ஒன்றிய அரசின் பொறுப்பு. ஆனால் இவர்கள் சட்டத்தை யும் மதிக்காமல், சாதாரண மக்களின் உணர்வு களையும் மதிக்காமல் தங்கள் அரசியல் நோக் கத்திற்காக மாநில அரசின் மீது பழி போடுவதும், மக்களை பழி தீர்ப்பதும் அநியாயமானது.
பாண்டிச்சேரியில்...
பக்கத்தில் உள்ள பாண்டிச்சேரி மாநிலத்தில் நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளிகளுக்கு கடந்த வாரம் வரை சம்பளம் பட்டுவாடா செய்யப் பட்டுள்ளது. அங்கே கூட கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இரண்டு வாரம், மூன்று வாரம் சம்பளம் தரப்படாத நிலை இருந்தது. அதை எதிர்த்து அங்குள்ள அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், சட்டமன்றத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதற்கடுத்த வாரமே அனைத்து சம்பளமும் கொடுக்கப்பட்டது. இப்பொழுது வரை கொடுத்து வருகிறது. மாநில மக்களின் கோபம் பாஜக அரசுக்கு எதிராக வந்துவிடாமல் இருக்க உடனே சம்பளப் பாக்கி வழங்கப்படு கிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப் படாமல் இருப்பதற்கு ஒரு வேறு அரசியல் நோக்கம் ஒன்றிய அரசுக்கு இருக்கிறது என்பதே தெரிகிறது.
இந்திய நாட்டில் உள்ள பெரு முதலாளிக ளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் பல லட்சக்க ணக்கான கோடி ரூபாய்களை வரிச்சலுகை களாக, கடன் தள்ளுபடிகளாக வழங்கியுள்ளது ஒன்றிய மோடி அரசு. அதற்காக கார்ப்பரேட் நிறுவ னங்கள் மோடிக்கு வெண்சாமரம் வீசுவதோடு பல ஆயிரம் கோடிகளை தேர்தல் நிதியாக வாரி வழங்குகின்றன. ஆனால் லட்சக்கணக்கான விவசாய கூலித் தொழிலாளிகளுக்கு தர வேண்டிய சுமார் 3ஆயிரம் கோடி ரூபாய் கூலிப் பாக்கியை நான்கு மாதங்களுக்கு மேலாக தராமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை. தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில் தொழி லாளிகளின் கூலி பாக்கியை தராமல் இருப்பது சட்டப்பூர்வமாகவும், சமூக நீதி அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இதை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் கேவலமான காரி யத்தை மோடியின் பாஜக அரசு கைவிட வேண்டும். எனவே உடனடியாக மோடி அரசு இந்த பணத்தை விடுவிக்க வேண்டும்.