தமிழ் நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள நில அளவை ஆவணங்கள், நில உரிமையாள ரின் உரிமை பதிவுகள் மற்றும் வரைபடங்கள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மிக மிக துல்லியமாக பதிவு செய்யப்பட்டு இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகிறது. 1858-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நில அளவை மற்றும் நில வரித் திட்ட இயக்குநரகத்தால் நடைமுறைப்படுத்தப் பட்ட ரயத்துவாரி நில அளவை முதல் ஆவணங்கள் மேம் பாட்டுக்காக செயல்படுத்தப்பட்ட மலை கிராம அளவை, மறு நில அளவை, நிலவுடமை பதிவு மேம் பாட்டுத் திட்டம், நத்தம் நில அளவை, நகர நில அளவை திட்டம் அனைத்தும் இந்திய ஒன்றியத்தில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ள தமிழகத்தின் மிகச் சிறந்த திட்டங்களாகும். தமிழகத்தில் 4 கோடிக்கும் அதிகமாக உள்ள உட் பிரிவுகளை பராமரிக்கும் பணியினையும் அதன் பட்டா தாரர்களின் பதிவுகளை பாதுகாக்கும் பணியையும் நில அளவைத் துறை பணியாளர்கள் செய்வதோடு மட்டுமல்லாமல் பிற துறையின் அனைத்து விதமான பயனாளிகளின் ஆரம்ப கட்ட நிலம் சார்ந்த பணி களையும் செய்து வரும் அரசுத் துறைகளில் முதன்மை யான துறை என்ற பெருமைக்குரிய துறை நில அளவைத் துறை ஆகும். இத் துறையில் அடிப்படைக் கல்வித் தகுதியில் (SSLC) தேர்வு செய்யப்பட்ட பதவிகள் முதல் பதவி உயர்வு பெற்று கூடுதல் இயக்குனர் வரை யிலான பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்க ளில் கூடுதல் இயக்குனர் பொறுப்பு என்பது வருவாய் துறைக்கும் அரசுக்கும் நில அளவை சார்ந்த தொழில் நுட்ப ஆலோசனை வழங்கும் பணியாகும்.
தொழில் நுட்பப் பயிற்சி பெற்று...
2009-ஆம் ஆண்டு முதல் நில அளவர் மற்றும் வரைவாளர்கள் தமிழ் நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் பத்தாம் வகுப்பு கல்வித் தகு தியை கொண்டு இனவாரி சுழற்சி முறை அடிப்படை யில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் தான் ‘தமிழ்நிலம்’ மென் பொரு ளில் தனியார் நிறுவனம் மூலம் பதிவு செய்யப்பட்ட நிலவுடைமை பதிவுகளில் விடுபட்ட பதிவுகளையும் புலங்களையும் ஃகொலாப் லேண்ட் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செய்து முடித்தனர். தொழில் நுட்பக் கல்வி பயிலாத நில அளவைக் களப் பணியாளர்கள் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் ‘சி’ ஸ்டார் பயிற்சிப் பள்ளியில் வழங்கப்பட்ட நவீன பயிற்சியால் இன்று நடைபெறும் நவீன மறு நில அளவைத் திட்டப் பணி களை DGPS கருவி கொண்டு துல்லியமாக அளவீடு செய்து செயல்படுத்தி வருகின்றனர். இந் நிலையில் 2012-ஆம் ஆண்டு இயக்குநர கத்தால் அரசுக்கு அனுப்பிய முன்மொழிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்த “2 ஆண்டுகள் நவீன நில அளவை சார்ந்த பயிற்சி முடிக்கப்பட்டவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கலாம்” என்ற சாராம்சத்தை முற்றிலுமாக மாற்றி டிப்ளமோ படித்த வர்களை நில அளவைப் பணிக்கு நியமிக்க அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
குரூப் டி பிரிவுகளில் உள்ள நியமனத்தில் பத்தாம் வகுப்பு தகுதிக்கு உரிய ஊதிய முறையில் மாற்றம் இல்லாமல் கல்வித் தகுதியை பட்டயப் படிப்பாக உயர்த்துவது என்பது எதிர்காலத்தில் அனைத்து துறை களிலும் கல்வித் தகுதி குழப்பத்திற்கும் ஊதிய முரண்பாட்டிற்கும் அடிகோலும். மேலும் தற்போது பணி புரியும் புல உதவியாளர்களுக்கு நில அளவர் பதவி உயர்வில் 50 சதவீத ஒதுக்கீடு செய்ய ஏற்படுத்தப் பட்ட அரசாணை 45 மற்றும் 50 ஆகியவை கேள்விக்குறி யாகும். இறந்த நில அளவை களப்பணியாளர் குடும்ப வாரிசுகளில் டிப்ளமோ சிவில் படித்தவர் இருந்தால் மட்டுமே நில அளவர் அல்லது வரைவாளராக பணி நியமனம் கிடைக்கும் என்ற நிலை உருவாகிடும். இக் கல்வித் தகுதி மாற்றத்தால் அடிப்படைக் கல்வி முடித்த கிராமப் புற தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட விளிம்பு நிலை இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளது.
கள அனுபவங்களின் முக்கியத்துவம்
நில அளவை பணிகளில் கள அனுபவங்களைப் பெற்ற தகுதி வாய்ந்தவர்களை கொண்டு பதவி உயர்வு மூலம் மட்டுமே நிரப்பப்பட்டு வந்த துணை ஆய்வாளர் பதவிகளுக்கு தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தின் மூலம் 1:6 என்ற விகிதாச்சாரத்தில் இளநிலை பொறியியல் படித்தவர்களை தேர்வு செய்ய உயர் அலுவலர்கள் முடிவு எடுத்துள்ளதாக தெரிய வருகிறது. துணை ஆய்வாளர் பணி என்பது பின் கோப்புகளை பார்த்து பயின்று பணி செய்யும் வாய்ப்புள்ள இருக்கைகள் போல் அல்லாமல் முழு வதும் நில அளவையில் ஏற்படும் பல்வேறு வகையான பிரச்சனைகளை அனுபவ ரீதியாக எதிர் கொண்டு கற்றுத் தேர்ந்த பிறகு வழங்கப்படுகிற பதவி உயர்வு வழி பதவியாகும். இப் பதவியானது வட்ட அளவிலான பராமரிப்புப் பணிகளிலும் மாவட்டத்தில் நடைபெறுகிற திட்டப் பணியிலும் வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சி யர் வரை உள்ள உயர் அலுவலர்களுக்கு நிலம் சார்ந்த அனுபவ ரீதியான தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்கும் பதவி என்பதால் துணை ஆய்வாளர் நேரடி நியமன முறை என்பது முற்றிலும் பொருந்தாததாகும்.
முரண்பட்ட நிலை
ஒரு புறம், நில அளவர் நியமனத்தில் கல்வித் தகுதி மாற்றம் செய்வது நில அளவைத் துறையை தொழில் நுட்பத் துறையாக மாற்றத்தான் என்று காரணம் சொல்லப்படுகிறது. மறுபுறம், பணித் தேக்கம் என காரணம் சொல்லி நில அளவை தொழில் நுட்ப அனுபவ முதிர்ச்சியுடன் களப் பணியாளர்களால் ஆண்டாண்டு காலமாக செய்யப்பட்டு வரும் உட்பிரிவு பட்டா மாறுதல் பணியை, தொழில் நுட்ப அனுபவம் இல்லாத வருவாய்த் துறையின் அடிப்படை கிராம நிர்வாக பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்குவதற்கு நில அளவை நடைமுறை நூலில் கடந்த கால ஆட்சியாளர்களால் அவசரகதியில் திருத் தங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. துறையை நவீன மயமாக்க வேண்டும் என்பதால் அடிப்படை கல்வித் தகுதியை பொறியியல் பட்டயப் படிப்பு என்ற நிலைக்கு மாற்றி புதிய நில அளவர்க ளை நியமிப்பதாக கூறும் அரசு, பணி பளுவை காரணம் காட்டி நில அளவைப் பணியினை நில அளவை தொழில் நுட்பத்துடன் தொடர்பில்லாத கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒதுக்குவது என்பது பெரும் கொள்கை முரணாக உள்ளது. 160- ஆண்டுகளுக்கு முன் நில அளவை இயக்க கத்தின் பிரத்யேகப் பணியான - அளவைப் பணியாளர்க ளின் செயல்பாட்டிற்கு உதவியாக உருவாக்கப்பட்ட வரைவாளர் பணிப் பிரிவு, அமைச்சுப் பணிப் பிரிவுகள் களப்பணியாளருடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த பரிசீலிக்கப்படுகிறது. இவ்வாறான பரிசீலனைகள் எதிர்காலத்தில் நில அளவைத் துறை ஊழியர்களி டையே பெரும் நிர்வாக இடர்பாடுகளை ஏற்படுத்தும்.
ஊழியர் பற்றாக்குறையால் தேங்கும் வேலைகள்
கடந்த காலங்களில் நிலவுடமைப் பதிவுகள் மேம் பாட்டு திட்டத்தைத் தொடர்ந்து நில அளவைத் தொழில் நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான பணிகள் இல்லாமல் இருந்ததால் நிர்வாகம் நத்தம் நில அளவை போன்ற புதிய திட்டங்க ளை அறிமுகப்படுத்தியது, ஆனால் இன்றைய நிலை வேறு விதமாக உள்ளது. இணைய வழி பட்டா மாறுதல் திட்டம், நவீன மறு நில அளவைத் திட்டம், 69768 சிறு பாசன ஏரிகள் மற்றும் 70167 குளங்கள், ஊரணிகளை அளவீடு செய்து அரசின் பொது சொத்துகளின் நிலையை உத்தரவாதப்படுத்தும் பணி, வீடற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை இணையவழி பதிவேற்றம் செய்யும் பணி, நில ஆவண கணினிமயமாக்கல் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் இருந்தும் இப்பணிகளை முடித்திட போதுமான நில அளவை ஊழியர்கள் இல்லாமல் துறையின் பணிகள் மலை போல் தேங்கி கிடக்கிறது. அனைத்து பணிகளையும் ஒரே நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற துறையின் முறைப் படுத்தப்படாத பணி நெருக்கடியால் நில அளவை களப் பணியாளர்கள் பெரும் மன உளைச்சலில் உள்ள னர். இவ்வாறான பணியாளர் பற்றாக்குறை எதிர் காலங்களில் ஏற்படும் என்றும் புதிய நியமனங்களை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்றும் 2010-ஆம் ஆண்டு முதல் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வரு கிறோம். துறையின் நலனுக்காக வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் அனைத்தையும் சங்கத்தின் கோரிக்கை யாக மட்டுமே நிர்வாகம் பார்க்கிறது.
வீண் விரயமாக ஒரு பணி
தமிழகத்தில் நத்தம் நில அளவை மூலம் அனைத்து கிராமங்களும் முழுமையாக அளவீடு செய்யப்பட்டு மனைகள் அனைத்தும் உரிய உரிமையாளர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசின் நிதித் திட்டம் என்பதால் SVAMITVA திட்டத் தின் மூலம் மீண்டும் நத்தம் மனைகள் அளவை செய்வது என்பது ஊழியர் பற்றாக்குறை உள்ள இந்நேரத்தில் உழைப்பு மற்றும் பொருளாதாரம் வீண் விரயம் என்பதை நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். அரசு நிர்வாகத்திற்கான நிலம் சார்ந்த அனைத்து பணிகளையும் செய்து முடிப்பது மட்டுமல்லாமல் மாதம் 1.25 லட்சம் இணைய வழி உட்பிரிவு மனுக்கள் மீது நட வடிக்கை எடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் களப்பணியாளர்கள் உள்ள நிலையில், பற்றாக்குறை ஊழியர்களை வைத்துக்கொண்டு முறையாக திட்ட மிடப்படாமல் மேற்கொள்ளப்படுகின்ற நவீன மறு நில அளவை திட்டப்பணிகள் பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இருப்பதை நிர்வாகம் அறியும்.
நிலுவையில் உள்ள 7 லட்சம் மனுக்கள்
நிலவுடமைப் பதிவு மேம்பாட்டுத் திட்டம் முடிக் கப்பட்டு 35 ஆண்டுகள் கடந்து விட்டன. தமிழகத்தில் உள்ள நிலங்கள் பல்வேறு வகையான நில பரி மாற்றத்தால் அதனுடைய பழைய தன்மை மாறி யுள்ளது. புதிய பட்டா கேட்டு தாலுகா அலுவலகங்க ளில் நிலுவையிலுள்ள 7 லட்சம் மனுக்கள் நமக்கு உணர்த்தும் செய்தி இதுவாகும். இவ்வாறான அனைத்து நிகழ்கால நிலம் சார்ந்த மாற்றங்களையும் மக்கள் அலைக்கழிக்கப்படாமல் முறையாக அவரவர் பெயரில் பட்டா பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றால் துணை இயக்குனர் நிலையில் உள்ள அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து முறையாக திட்டமிட்டு புதிய நவீன நில அளவை திட்டப்பணிகளை செயல்படுத்தினால் பொது மக்கள் பட்டாவுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படாது. நில உடமை பதிவு மேம்பாட்டு திட்டத்தின் போது பரா மரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டு அனைத்து நிலவுடமை தாரர்களுக்கும் நேரடியாக அளவைப் பணி மேற்கொண்டு பட்டா வழங்கியதைப் போல் தற்போது நவீன மறு நில அளவை திட்டத்தையும் அமல்படுத்தி னால் மக்கள் மத்தியில் அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும். நிலத்தின் மதிப்பீடுகள் பன்மடங்கு கூடி விட்ட இக்காலத்தில் அனைத்து நிலவுடமைதாரர்க ளின் நிலம் சார்ந்த பதிவுகள் குளறுபடிகளுக்கு இட மில்லாமல் முறையாக பராமரிப்பதற்கு ஏதுவாக இருக்கும். அரசால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நில அளவை திட்டப் பணிகளுக்கான செலவுகள் அனைத் தும் பட்டாதாரர்களிடமிருந்தே வசூலிக்கப்பட்டது. அது போல் தற்பொழுதும் திட்டப் பணிகளை தொடங்குவ தால் அரசுக்கு எவ்விதமான செலவும் ஏற்படாது.
மார்ச் -9 பெருந்திரள் முறையீடு
துறையின் நிலையான கட்டமைப்பை மாற்றுகின்ற வகையில் மேற்கொள்ளப்படும் தற்போதைய நடை முறைகளை கைவிட்டு துறையில் உள்ள களப் பணியாளர்களை கொண்டு முறையாக திட்டமிட்டு நில அளவை பணிகளை செயல்படுத்தினால் துறையின் பணித் தேக்கமும் நீங்கும், இதனால் நிலவுடைமையா ளர்கள் பயன்பெறுவர். களப் பணியாளர்களின் பணிச் சுமையை போக்கி ஊழியர்களின் உரிமைகளை காத்திட தமிழக முதல்வர் அவர்களின் கவனம் ஈர்த்திட மார்ச் 9-ஆம் தேதி பெருந்திரள் முறையீடு வழங்க இருக்கிறோம்.
கட்டுரையாளர் : மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு.