ஏகாதிபத்தியத்தின் கொடூரங்களும் ஏவலாளி பாஜகவின் வெற்றுத் தம்பட்டங்களும்
கிளர்ச்சி பிரச்சாரம் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிகழ்ச்சி நிரலில் முக்கிய அம்சம் ஆகும். “ஆளும் வர்க்கம் தனது கருத்துகள் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்த கோடானு கோடி ரூபாய் செலவு செய்து ஊடகங் களைக் கொண்டும், கருத்துப் பிரச்சார நபர் களைக் கொண்டும் செய்திட முடியும். சுரண்டப் படுகிற வர்க்கமாக உள்ள தொழிலாளி வர்க்கத்தின் மீதும் ஆளும் வர்க்க கருத்து களைத் திணித்திட முடியும். ஆனால் அதற்கு எதிரான மாற்றுக் கருத்துகளை, கொள்கை களைச் சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கத்திடம் எடுத்துச் செல்ல, கிளர்ச்சியும் பிரச்சாரமும்தான் மிக முக்கிய ஆயுதமாக கம்யூனிஸ்ட் இயக்கத் திற்கு பங்களிப்பு செய்கிறது,” என புரட்சியாளர் லெனின் கூறுகிறார். அதை கம்யூனிஸ்ட் கட்சி அன்றாட பணிகளில் ஒன்றாக கொண்டிருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறார். அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்துள்ள மக்கள் சந்திப்பு இயக்கம், மிக முக்கியமான கால கட்டத்தில் செய்யப்படும் கிளர்ச்சிப் பிரச்சாரம் ஆகும்.
ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் - தொழிலாளி வர்க்கமே இலக்கு
ஆளும் வர்க்கம் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில், போர், வகுப்புவாத வெறி, மொழி பண்பாட்டு தாக்குதல் ஆகிய வடிவங்களைப் பயன்படுத்துகின்றது. மார்க்சிஸ்ட் கட்சி மக்களைச் சந்தித்து வரும் இதே காலத்தில், இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்தி வரும் தாக்குதல் மிகப்பெரிய இன அழிப்பு ஆகும். அதைத் தொழிலாளி வர்க்கம் எதிர்ப்பதும், உணவுக்கு அல்லாடும் மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவதும் காலத்தின் கட்டாயம். அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேல் நடத்தும் போரை மத்திய கிழக்கு ஆசியா முழுவதும் விரிவு படுத்தும் நோக்கத்துடன் ஈரான் மீது துவக்கி யுள்ள தாக்குதல், வளரும் நாடுகளுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மூலமாக விடுக்கும் மிரட்டல் ஆகும். பொருளாதார வல்லுநர்கள், ஈரான் மீதான தாக்குதல் இந்தியாவிற்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய அடிப்படைத் தேவைகளில் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்கின்றனர். பற்றாக்குறை தட்டுப்பாடுகளை யும் விலை உயர்வையும் உருவாக்கும் போது உழைக்கும் வர்க்கமே பாதிக்கப்படும் என்கின்ற னர். எனவே ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் மற்றும் இன அழிப்பு கொடூரங்களுக்கு எதிரான வலு வான மக்கள் போராட்டம் தேவை. அதற்கான வலுவைத் தொழிலாளி வர்க்கம் அளித்திட முடி யும். கிளர்ச்சி மற்றும் பிரச்சாரங்கள் இதற்குத் தேவையான அரசியல் புரிதலை உருவாக்கும். வெறுப்பு அரசியல் போர் அல்லது தாக்குதல் நடத்துவதில்
வெறுப்பு அரசியல்
முக்கியப் பங்கு வகிக் கிறது. அந்த வெறுப்பை ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் மீது உருவாக்க, வகுப்புவாத மற்றும் ஏகாதிபத்திய அரசியல் திட்டமிட்ட பிரச்சாரங்களை கட்டமைக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இவற்றைச் செய்து வருவதை நம் சமகாலத்தில் காண முடிகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் ஜூன் 12 அன்று முன்மொழியப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்காமல் இருந்தது, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத் திணிப்பு அரசின் அயல் உறவுக் கொள்கையிலும் பிரதி பலிப்பதை வெளிப்படுத்துகிறது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல், தொடர்ந்து ஒன்றிய அரசு எடுத்த ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை பெரும் பேசு பொருளாக இருந்தது. பாகிஸ்தான் அரசுக்கு எதிரான இந்தியாவின் போரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிறுத்தியதாக தொடர்ந்து பேசி வருகிறார். கடந்த ஒன்றரை மாத காலத்தில் ஒரு இடத்தில் கூட மோடி அரசு எதிர்வார்த்தை கூறவில்லை. அந்த அளவிற்கு ஒன்றிய பாஜக அரசு ஏகாதி பத்தியத்திடம் அடங்கி நிற்கிறது.
வேலை, கல்வி, வாழ்வாதாரத்தின் அடிப்படை
தேசத்தின் மாண்புகளை அமெரிக்க ஏகாதி பத்தியத்திடம் அடகு வைத்துவிட்ட மோடி அரசை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கட்சி, பிரச்சாரக் களத்தில் வீதிகளில் முழங்குகிறது. அத்துடன், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளையும் பேசுகிறது. தனிமனித வாழ்விலும் சமூக முன்னேற்றம் குறித்த வரையறைகளிலும் கல்வி, வேலை மற்றும் சுகாதாரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது வும் தேசத்தின் பெருமைகளை வெளிப்படுத்தும் குறியீடுகளாகும். தற்போது மோடி அரசு உலக பொருளாதாரத்தில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா நான்காம் இடத்திற்கு முன்னேறி யுள்ளதாகத் தம்பட்டம் அடித்து வருகிறது. ஆனால் உண்மை வேறாக உள்ளது. ஜப்பான் மக்கள் தொகை 12.45 கோடி, இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடி. ஜப்பானை விடவும் 13 மடங்கு அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 30.51 டிரில்லியன் டாலர், சீனா 19.23 டிரில்லியன் டாலர், ஜெர்மனி 4.74 டிரில்லியன் டாலர், இந்தியா 4.19 டிரில்லியன் டாலர், ஜப்பானும் 4.19 டிரில்லியன் டாலர்தான். எனவே பாஜக மற்றும் சங் பரிவாரங் கள் பேசுவது பொருளற்ற வாதம் என்பதே உண்மை. உண்மையில் பொருளாதார வளர்ச்சியில் வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜப்பான் நாட்டின் தனிநபர் வரு மானம் 53,080 டாலர் (45,64,880 ரூபாய்) என இருக்கும் நிலையில், இந்தியாவின் தனிநபர் வருமானம் 10,020 டாலராக (8,61,720 ரூபாய்) உள்ளது. அதிலும் இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களின் வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமல்விட்டால் அதலபாதாளத்தில் இருக்கும். இதன் காரணமாகத்தான் இந்தியா வறுமை யில் உள்ள 125 நாடுகளின் பட்டியலில் 111ஆம் இடத்தில் உள்ளது. ஆனால் ஜப்பான் 2ஆம் இடத்தில் உள்ளது. இந்த விவரங்களை அறிந்த வர்கள் பாஜக மற்றும் அதன் ஆட்சியாளர்களின் கருத்துகளை ஏற்கமாட்டார்கள்.
வேலையின்மை 13.8%
தற்போது இந்தியா மிக மோசமான வேலை நிலைமையைக் கொண்டிருக்கிற நாடுகளின் பட்டியலிலும் முன்னணியில் உள்ளது. நிரந்தர மற்ற வருவாய்க் கொண்ட வேலைவாய்ப்பு மிக அதிகம். எப்போது வேலை பறிபோகும் என்ற நிலை உள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அர சின் நேரடி வேலைவாய்ப்புகளிலும் காண்ட்ராக்ட் அடிப்படையில், தினக்கூலி முறையில் வேலை செய்வோர் அதிகரித்து வருகின்றனர். மின்சாரம், சுரங்கம் போன்ற மிக அத்தியாவசியப் பணிகளி லும் கூட காண்ட்ராக்ட் தொழிலாளர் நியமனம் அதிகரித்துள்ளது. 18 முதல் 29 வயதுக்குள்ளான இளைஞர்கள் 13.8 சதவீதம் அளவில் வேலை இல்லாமல் இருக்கும் அவலம் இந்தியாவில் உள்ளது. இது போன்ற விவரங்கள் இந்தியாவின் மனித வளக் குறியீட்டை அடிமட்டத்தில்தான் வைத்திருக்கும். அதேபோல் கல்வி - தொடர்ச்சியாக நீட் உள்ளிட்ட தேர்வு முறைகளை ஒன்றிய பாஜக ஆட்சி அமலாக்கி வருவதன் மூலம் எளியோ ருக்குக் கிடைக்கும் கல்வி வாய்ப்பு பறிக்கப்படு கிறது. கோச்சிங் மையங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் எண்ணிக்கை பெருகி மிக அதிக மான செலவு பிடிப்பதாக மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி மாறி வருகிறது. தேசியக் கல்விக் கொள்கை மூலம் மாநி லங்களின் உரிமைகளைப் பறிக்கிறது. அதைக் கேள்விக்குள்ளாக்கும் மாநிலங்களுக்கு ஒதுக்கும் நிதியை வழங்க மறுக்கிறது. சமக்ர சிக்சா அபியான் திட்டம் மூலம் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2152 கோடி மறுக்கப் பட்டுள்ளது. இவை அனைத்துமே, மூலதனத்தின் கொடிய சுரண்டலின் வெவ்வேறு வடிவங்களே; அத்தகைய சுரண்டலைத் தீவிரப்படுத்தும் ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மக்கள் சந்திப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வருகிறது.