articles

img

மனித குலத்தின் ஒளி விளக்கு!

மனித குலத்தின் ஒளி விளக்கு!

மனித குலத்தை துன்ப துயரங்களிலிருந்து மீட்க வழிகாட்டிய மாமேதை காரல் மார்க்ஸ், மனித குலத்தின் வரலாற்றைப் பொருள் முதல்வாத விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து விளக்கியவர். புதிய வரலாற்றை, உழைக்கும் மக்கள் எப்படி உருவாக்க வேண்டுமென்று எடுத்துக் கூறியவர். மார்க்சியம் விஞ்ஞானங்களுக்கெல்லாம் விஞ்ஞானமாகும். சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்குப் பிறகு ஏகாதிபத்தியவாதிகளும் சுரண்டல் பேர்வழிகளும் கொக்கரித்தனர். மார்க்சியம் செல்லாக் காசாகிவிட்டதாய் கதைத்தனர். ஆனால் மார்க்சியம் உலகம் முழுவதும் கம்பீரமாய் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. மாமேதை மார்க்ஸைப் பற்றி மகத்தான எழுத்தாளர் வெ.சாமிநாத சர்மாவின் கூற்று:

காரல் மார்க்ஸ், ஆராய்ச்சி விளக்கை ஏந்திக் கொண்டு அறிவுச் சுரங்கத்தின் ஆழத்தி ற்குச் சென்றான். புதிய தத்துவங்களைக் கண்டு பிடித்தான். ஆனால் அதே சமயத்தில் வறுமை யின் ஆழத்திலும் இறங்கிவிட்டான். அவனைப் பிணிகள் பற்றிக் கொண்டன. அதிகார சக்தி யின் அச்சுறுத்தல்கள் அலைக்கழித்தன. சகபாடிகள் பரிகசித்தார்கள்; சொற்போருக்கு இழுத்தார்கள்; கடன்காரர்கள் இல்லாத தொல்லைகளுக்கெல்லாம் ஆட்படுத்தினார் கள். அவன் தன் ஆயுட்காலத்தில், ஐயோ, எவ்வ ளவு கஷ்டப்பட்டான்? எத்தனை பேருடைய கோபதாபங்களுக்கு இரையானான்? அவனி டத்தில் இரக்கம் கொண்ட ஒரு கவிஞன் புலம்பு கிறான்.

“அவன் மேகங்களுக்கு மத்தியில் தன் லட்சியத்தைப் பொருத்தி வைத்துக் கொண்டு விட்டான். ஆனால் புழுதி மண்ணிலேதான் அவன் தன் வாழ்க்கையை நடத்த வேண்டியிருந்தது. அன்றாடம் என்ன தேவையோ அதுதான் அவ னுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. அவன் ஒடுக்கப்பட்டான்; அவனை வறுமை வாட்டியது. தேவை திணறச் செய்தது. அவன், பொதுவாக வாழ்க்கையிலே புடமிடப்பட்டான்.”

“கி.பி. பத்தொன்பதாவது நூற்றாண்டில், உலகத்தில் தோன்றிய பெருஞ் சிந்தனையா ளர்களுள் மார்க்ஸ் ஒருவன்” என்றும், “தான் வாழ்ந்த காலத்தின் மீது அழியாத முத்திரை யிட்டுச் சென்றவன் மார்க்ஸைப் போல் வேறொ ருவனும் கிடையாது” என்றும் அறிஞர்கள் அவனுக்கு இறந்தகால மதிப்பை மட்டும் கொடுத்துப் பாராட்டுகிறார்கள். ஆனால் அவன் எதிர்காலத்திற்குரிய புருஷன். எதிர்காலத்தில் மானிட சமுதாயமானது என்னென்ன மாறுதல் களை அடையப் போகிறது என்பதை அவன் எடுத்துக் காட்டியிருக்கிறான். தொழில் தன்மை  பெற்றிருக்கிறதென்பதை அவன் அதிகாரப் பூர்வமாக ருஜூப்படுத்திக் காட்டுகிறபோது நாம் பிரமிப்படைந்து போகிறோம்.

தீர்க்கதரிசி, புரட்சியாளன்

“இன்றைய அரசாங்கம் என்பது முதலாளி களுக்குச் சம்பந்தப்பட்ட பொதுவான விவகா ரங்களை நிர்வாகம் செய்வதற்கென்று ஏற்பட்டி ருக்கிற ஒரு கமிட்டி” என்று அவன் அரசாங்கத் திற்கு வியாக்கியானம் செய்து காட்டுகிறபோ தும், வியாபாரத்தை ஒட்டியே அரசியல் நடை பெறுகிறதென்னும் கருத்தை அவன் விளக்கிச் சொல்லிக் கொண்டு போகிற போதும் நாம் அப்படியே சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறோம். எனவே அவன் ஒரு சிந்தனையாளன் மட்டு மல்ல, சிறந்த தீர்க்கதரிசியுங்கூட.  மார்க்ஸ் ஒரு புரட்சிவாதி. முதலாளித்து வத்தின் கீழ் ஏற்பட்டிருக்கிற சமுதாய அமைப்பு. அதனால் சிருஷ்டிக்கப்பட்ட ராஜ்ய ஸ்தாபனங்கள் ஆகியவற்றை வீழ்த்துவதற்கு எந்த வகையிலாவது, யாருடனாவது ஒத்து ழைக்க வேண்டுமென்பதும், அப்படியே இன்றைய தொழிலாளர் உலகத்திற்கு விடுதலை தேடிக் கொடுக்க வேண்டுமென்பதில் எந்த வகையிலும் யாருடனும் ஒத்துழைக்க வேண்டுமென்பதும் இவனுடைய வாழ்க்கை யின் சிறந்த நோக்கமாயிருந்தது. தொழி லாளர்களுக்குச் சமுதாயத்திலேயே ஓர் அந்தஸ்து உண்டென்பதையும் அவர்கள் விடுதலை பெறுவதற்கு அவர்களுடைய நிலையை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதையும் முதன்முதலாக எடுத்துக் காட்டியவன் இவன்தான்.

சர்வதேச தொழிலாளர் சங்கம்

போராடுவது இவன் சுபாவத்திலேயே அமைந்திருந்தது. உற்சாகத்தோடும் உறுதி யோடும் போராடினான்; வெற்றியும் பெற்றான். ஒரு சிலருக்குத்தானே இந்த வெற்றி கிடைக்கி றது? இவன் பத்திரிகைகளுக்குப் பல கட்டுரை கள் எழுதினான். தர்க்கரீதியான பல வியாசங் கள் வரைந்தான். பாரீஸ், பிரஸ்ஸெல்ஸ், லண்டன் முதலிய இடங்களில் சங்கங்களை நிறுவினான். இவையனைத்திற்கும் சிகரம் போல் சர்வதேச தொழிலாளர் சங்கத்தை ஸ்தாபித் தான். இந்த ஒரு வேலையே, ஒரு வாழ்நாள் முழுமைக்கும் போதுமானதாயிருக்கும். இதைக் கொண்டு இவன் பெருமை அடை வதற்கு நியாயம் உண்டு.

கழுமரத்தில் ஏறவுமில்லை சிலுவையில் ஏற்றப்படவுமில்லை

எந்த ஒரு சிலர், ஏழை மக்களின் பரிதாப நிலையைக் கண் திறந்து பார்க்கிறார்களோ, அவர்களை அறிந்து கொள்கிறார்களோ, பிறகு தெரியாத்தனமாக அவர்களுக்குத் தங்க ளுடைய இருதயத்தைத் திறந்து காட்டுகிறார்க ளோ, அவர்கள் சார்பாகத் தங்களுடைய உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்களோ அவர்கள் (அந்த மகான்கள்) கழுமரத்திலே அல்லது சிலுவையிலே இறந்து போகி றார்கள்” என்று கெதே கூறுகிறான். மார்க்ஸ் கழுமரத்திலே ஏறவுமில்லை. சிலுவையிலே ஏற்றப்படவுமில்லை. ஆனால் வாழ்க்கை முழு வதும் போராடினான். வெற்றிக்காகப் போராடு வது வழக்கம். மார்க்ஸ் வாழ்க்கைக்காகவே போராடினான். போராட்டமே அவனுடைய வாழ்க்கை. பெற்ற தாய் முதல் படைத்த கடவுள் வரை எல்லோருடனும் போராடினான். இந்தப் போராட்டத்தில் அவனுக்கு மெய்க்காப்பாளர் போல் பிரடெரிக் ஏங்கெல்சும் ஜென்னி மார்க்சும் இருந்தார்கள். இந்த இருவரும் இல்லாதிருந்தால் மார்க்ஸ் தனது வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல் வரை சென்றிருப்பானா என்பது சந்தேகம் தான்.

அறிவை உழைப்போடு ஒன்றுபடுத்தியவன்

மார்க்ஸ், வெளிப்பார்வைக்குக் கருணை யற்றவன்போல் காணப்பட்டான். ஆனால் அவன் வகுத்த சமதர்ம தத்துவம், மானிட சமு தாயத்தின் மீது அவனுக்கிருந்த அபார கரு ணையை அஸ்திவாரமாகக் கொண்டது. அவன், வெறும் அறிவினால் மட்டும் சமுதாய சேவை செய்ய முன்வரவில்லை. அவன், தன் அறிவை உணர்ச்சியோடு மிதக்கவிடாமல் உழைப்போடு ஒன்றுபடுத்தினான். அறிவின் முதிர்ச்சி அனுஷ்டானம் என்பது அவன் கோட்பாடு. மார்க்ஸ் நாவன்மை படைத்தவனல்லன். அவன் பேச்சு சொல்லடுக்கல்ல;  எண்ணத்தின் ஓசை, அதில் அழகு இராது; ஆழமிருக்கும். அது யாருக்கும் உற்சாகத்தை உண்டு பண்ணாது; ஆனால் யாருடைய சிந்தனையையும் தூண்டி விடும். இங்ஙனமே அவனுடைய எழுத்துக்க ளும் வாக்கியக் கோவையல்ல; பொருள் செறிந்த சுரங்கம். துருவிப் பார்த்தால் பொன்னும் மணியும் கிடைக்கும். மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் புல்லும் புதருமாகத் தெரியும். அவன், தன்னுடைய சிருஷ்டி, பயனு டையதாயிருக்க வேண்டுமென்பதற்காக அதிக நேரம் வேதனைப்படுவான். அவனுக்குக் கருத் துக்கள்தான் முக்கியம். வார்த்தைகளல்ல.

ஊழிக்காலம் வரை  ஒலிக்கும் அவன் பெயர்

மார்க்ஸ் சுந்தர புருஷனல்ல; ஆனால்  அவனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோ ருக்கும் அவனிடத்தில் ஒரு பயபக்தி உண்டா கும். புறத்தூய்மை என்பதை அவனிடம் லவலேசமும் பார்க்க முடியாது. ஆனால் அவனு டைய அகத்தூய்மை, அனைவரையும் அவனி டம் இழுத்தது. அவனுக்கு உருவம் பெரிதல்ல; உயிர்தான் பெரிது. அவன் பட்டம், பதவி முதலி யவைகளை மதிக்கவில்லை. சேவையைத் தான் மதித்தான். அரசாங்கத்தில் உயர் பதவி கள் பெறுவதற்கு அதிகமான புத்திசாலித்தனம் தேவையில்லையென்பது அவனுடைய அபிப்பிராயம். அவன், அரசு ஆணைக்கு அஞ்சவில்லை. ஆனால், மனச்சாட்சிக்கு அஞ்சினான். சொல்லினால் சேவை செய்கிறவர்கள், நிமிர்ந்த தலை குனியாமல் பிறருக்கு அனுதாபம் காட்டுகிறார்கள், ஏழை களைச் சுரண்டுவதற்குக் கடவுளைக் கருவி யாக உபயோகிக்கிறவர்கள், சீர்திருத்தம் என்ற பெயரால் சமுதாயத்தின் ஊழல்களை மூடி வைக்கிறவர்கள். இப்படிப்பட்டவர்களை அவன் மனமார வெறுத்தான். இப்படிப்பட்டவர்க ளையே பெரும்பாலோராகக் கொண்ட காலம். காலத்தையே அலட்சியம் செய்துவிட்டு அவன் வாழ்ந்தான். அவனை அறிந்து விரும்பினவர் சிலர்; அறியாமல் வெறுத்தவர் பலர். மார்க்ஸ், யூதனாகப் பிறந்தான்; கிறிஸ்துவ னாக வாழ்ந்தான்; மனிதனாக மரித்தான். அவன் பெயர் ஊழிகாலம் வரையில் ஒலித்துக் கொண்டிருக்கும்.