இரா.வேல்முருகன்
சமரசம் இன்றி தொழிலாளி வர்க்கத் திற்காக போராடும் ஒரே இயக்கம், பொதுவுடமை இயக்கம் மட்டுமே. மேற்கு வங்கத்தில் 1970களில் அரை பாசிச ஆட்சி நடத்திய அன்றைய காங்கிரஸ் கட்சி, முதலாளிகளின் நலனுக்காக தொழிலாளி வர்க்கத்தையும், அதற்கு தலைமை தாங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களையும் ஈவு இரக்கமின்றி கொன்று குவித்ததை எளிய மக்களிடம் வலுவாக கொண்டு சேர்த்தது வங்க நாவல் ‘சமரம்’.
அரை பாசிச கொடூரத்தை எதிர்த்து எவ்வித அச்சமும், சமரசமுமின்றி மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களை இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளார் நாவல் ஆசிரியர் தபோ விஜயகோஷ். 1960-1970 வரை மேற்கு வங்கத்தில் துரோகிகளாலும், எதிரிகளாலும், ஆளும் வர்க்க அதிகாரத்தாலும் மார்க்சிஸ்ட்டுகள் எப்படியெல்லாம் அழிக்கப் பட்டார்கள் என்பதை நாவலின் தன்மை மாறாமல் மலையா ளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து தமிழ் மொழிக்கு ரவிச்சந்திரன் அரவிந்தன் மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்பு நாவல் என்பதை உணரமுடியாத அளவிற்கு திறமையாக மொழியாக்கம் செய்துள்ளார்.
கதையின் களமும் கதையின் நாயகனும் மேற்கு வங்கம் 24 பர்கனா மாவட்டமும், தமால் ராயும் தான். ஆனால் இந்த நாவல் புலம்பெயர்ந்த மக்கள், நடுத்தர மக்களிடத்தில் உள்ள அரசு அதிகாரம், அன்றைய காங்கிரஸ் தலைவர்களின் மீதான பயம், வாழ்க்கையில் எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என்கிற வெறி போன்றவற்றை பட்டவர்த்தனமாக பதிவு செய்துள்ளது. அரசியல் சேவைக்கானது அல்ல, அடுக்குமாடி வீடு, சொகுசு கார், வெளிநாட்டு மதுபானம், இச்சை தீர்க்க பெண்கள் ஆகியவற்றிற்காக பணம், சொத்து, அதிகாரத்தை பெறுவதற்கானது என்ற முதலாளித்துவ அரசியல்வாதிகளின் முகத்தை பளிச்சென காட்டுகிறது.
அரசு மருத்துவமனையில் கம்பௌன்டராக பணிபுரியும் ஒரு ஊழியர், தான் குடியிருக்கும் கிராமப்பகுதி மக்களின் உடல் உபாதைகளுக்கு அரசு மாத்திரைகளோடு வர்க்க அரசியலையும் சேர்த்தே கொடுக்கிறார். மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு பெருகுகிறது. இதை ஏற்க முடியாமல் காங்கிரஸ் குண்டர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதலில் அவரும், அவரது மனைவியும் கொல்லப்படுகிறார்கள். அவர்களது இரண்டு பச்சிளம் குழந்தைகளான தமால் ராய், அஷோக்கை வளர்க்கும் பொறுப்பை கட்சி முடிவுப்படி தோழர் வல்லப் ஏற்கிறார்.
ணவர்களை, தொழிலாளர்களை திரட்டுகிறான். ஏராள மானவர்களை ஊழியராக வளர்த்தெடுக்கிறான். 24 பர்கானா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் தோற்கடிக்கப்படுகிறார். கட்சி அமைப்புகள் வலுப்பெறுவதை சகிக்காத ஆளுங்கட்சி குண்டர்கள் வல்லப், தமால், அஷோக் ஆகிய மூவருக்கும் குறிவைக்கிறார்கள். தமாலை சுட்டுக் கொல்கிறார்கள். இதுபோன்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழி யர்களின் உயிர்த்தியாகத்தால், அதனால் உருவான மக்கள் எழுச்சியால் இடது முன்னணி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்று கிறது. இதனை ரத்தமும் சதையுமாக நாவல் பதிவு செய்கிறது. எளிய மக்களின் உருக்குபோன்ற 36 ஆண்டுகால ஆட்சியை வீழ்த்த ஏகாதிபத்திய, முதலாளித்துவ சக்திகளும் அரசு நிர்வாகமும் தன்னார்வ குழுக்கள், மிஷினரிகள், சிபிஎம் எதிர்ப்பு இடதுசாரி குழுக்களை விலைக்கு வாங்கி இடது ஜனநா யக அரசை வீழ்த்தின. ஒரு போதும் தொழிலாளி வர்க்கம் தோற்காது. கடைசி மனிதரின் பசியும், வறுமையும், இருக்கும் வரை, சுரண்டல் தொடரும் வரை கம்யூனிசம் உயிர்த்து இருப்ப தோடு, கோடிக்கால் பூதமாய் முதலாளித்துவத்தை தகர்த் தெரிந்து பாட்டாளி வர்க்க விடுதலையை உறுதிப்படுத்தும்.