சுதந்திர போராட்ட தியாகி சுப்பிர மணிய சிவா அவர்கள் திண்டுக் கல் மாவட்டம் வத்தலகுண்டில் 1884, அக் டோபர் 4 ஆம் நாள் பிறந்தார். இவர் தந்தை யார் ராஜம் ஐயர், தாயார் நாகலட்சுமி இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார். வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று சத்திரத்தில் தங்கி மேற்படிப்பு படித் தார். கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரி யில் ஒரு ஆண்டு படித்தார். 1899-ல் மீனாட் சியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தூத்துக்குடியில் காவல் நிலை யத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்தார். பின்னர், துறவி வாழ்க்கை மேற்கொண்டார். தூத்துக்குடியில் இருக்கும் நாட்களில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. இதை யடுத்து ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்யத் தொடங்கினார். சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் ‘வந்தே மாதரம்’ எனும் முழக்கங்கள் எழுந்தன. தூத்துக்குடியில் வழக்குரைஞராக இருந்த ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். இக்காலத்தில் சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் உளமார்ந்த நட்பு ஏற்பட் டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் ‘சுதேச கீதங்களால்’ இவர்களின் நண்பரான பாரதியார் தூண்டிவிட்டார். சென்னை, கொல்கத்தா, தூத்துக் குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு சென்று தொழிலாளர் போராட் டங்களை நடத்தி ஆங்கில அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு கொடுமையான சிறைத்தண்டனை விதித்து, சித்தர வதை செய்தது ஆங்கில அரசு. இதன் காரணமாக இவருக்கு தொழுநோயால் பாதிப்பு ஏற்பட்டது.
ரயிலில் பயணம் செய்ய ஆங்கிலேய அரசு தடை விதித்தது. உடல் முழுவதும் புண்ணாக இருந்த போதிலும், உடலை துணி யால் மூடிக்கொண்டு சென்னை மாகாணம் முழுவதும் நடைபயணமாக வும், கட்டை வண்டியிலும் சென்று மேடை தோறும் முழங்கி வந்தார். சென்னை மாகாணத்தில் அரசியல் ரீதியாக சிறையில் அடைக்கப்பட்ட முதல் கைதியானார். ஆந்திர மாநிலம், அலிபுரம் சிறையில் இருந்தபோது தருமபுரி அன்னசாகரத்தை சேர்ந்த தியாகி எம்டன், கந்தசாமி குப்தா, டி.என். தீர்த்தகிரியார் ஆகியோருடன் ஏற்பட்ட நட்பால் சுப்பிரமணிய சிவா பாப்பாரப்பட்டிக்கு வந்தார். தனது நண்பர்கள் உதவியுடன் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்கி, அதற்கு பாரதபுரம் என பெயர் சூட்டினார். அதில் பாரத ஆசிர மும் ஏற்படுத்தினார். சிவாவும், ஆசிரம உறுப்பினர்களும் காலையில் எழுந்து மகாகவி பாரதியாரின் பாடல்களை பாடிக்கொண்டே தெருத்தெருவாகச் சென்று அரிசியும், காசுகளும் பெற்று வாழ்க்கையை நடத்தினர். 23.7.1925-ல் தனது 41-வது வயதில் காலமானார். பாப்பாரப்பட்டியில் அவர் வாங்கிய இடத்தில் இவரை அடக்கம் செய்தனர். பின்னர் சுப்பிரமணியசிவா நினை விடத்தில் அரசு மணிமண்டபம் கட்டியது. சுப்பிரமணிய சிவாவின் எண்ண மான மத, இன பாகுபாடில்லாத வகையில் பாரத மாதா ஆலயம் ஒன்றை அமைக்க எண்ணினார். இவரின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில் தமி ழக அரசு பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சிவா நினைவிடம் அருகில் பாரதமாதா நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.