உதாரணத்துக்கு காசா பகுதியில் போரை நிறுத்த சில தேசங்கள் இஸ்ரேல் ராணுவத்தை எதிர்க்க தமது ராணுவத்தை அனுப்பலாம்! ஆனால் எந்த தேசமும் அதற்கு முன்வரவில்லை. பெரும் போராக மாறுவதை விரும்பவில்லை.
23இஸ்ரேலை எதிர்த்து தொடக்கத்திலிருந்தே தீவிரமாக குரல் கொடுக்கும் தேசங்கள் எவை?
Yகொலம்பியா, Yபொலிவியா, Yபிரேசில், Yசிலி, Yவெனிசூலா ஆகிய தேசங்கள் தொடக்கத்திலிருந்தே இஸ்ரேலை எதிர்க்கின்றன. தமது தூதர்களை இஸ்ரேலிலிருந்து விலக்கிக்கொண்டுள்ளன.
24 இஸ்ரேலை கடுமையாக எதிர்க்கும் தனிப்பட்ட முக்கிய அரசியல்வாதிகள் உள்ளனரா?
Yஜெர்மி கோர்பின்/ சாரா சுல்தானா/ ரிசர்ட் பர்கோன்/ ஜான் மெக்டோனல்/ கெல்லோவே போன்ற பிரிட்டன் அரசியல்வாதிகள்.
Yபொடொமோஸ் எனும் ஸ்பெயின் அமைப்பு
Yகோரி புஷ்/ இலஹன் ஹோமர்/ பிரமிளா ஜெயபால்/ ஜமால் பவுமன்/ ரோகன் கன்னா/ பார்பரா லீ ஆகியோர் அடங்கிய 60 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்
Yஅமெரிக்க செனட் உறுப்பினர் பெர்னி சான்டர்ஸ் தொடக்கத்தில் ஊசலாடினாலும் இப்பொழுது உறுதியான நிலை எடுத்துவருகிறார்.
25 பாலஸ்தீனத்தை ஆதரிப்பவர்களுக்கு என்ன லாபம்?
ஒரு லாபமும் இல்லை. அந்த தேசங்கள் அனைத்தும் இடதுசாரி அரசியல் கொண்டவை. அதே போல தனிநபர்கள் அனைவரும் இடதுசாரிகள் அல்லது முற்போக்காளர்கள். உலகில் எங்கு அடக்குமுறை நடந்தாலும் முதலில் களத்துக்கு வருவது இடதுசாரிகள் என்ற அடிப்படையில்தான் அவர்கள் இஸ்ரேலை எதிர்க்கின்றனர்.
26 இந்தியாவில் பாலஸ்தீன ஆதரவு இயக்கங்கள் நடந்தனவா?
இந்தியாவிலும் இடதுசாரிகள் மட்டும்தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக களத்துக்கு வந்தனர். மற்றவர்கள் அறிக்கையுடன் நின்று கொண்டனர். கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி ஒவ்வொரு மாவட்டத்திலும் இயக்கங்களை நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கூட்டம் முடிந்த பின்னர் அனைத்து தலைவர்களும் தில்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அனைத்து மாநிலங்களிலும் இடதுசாரிகள் சார்பாக இயக்கம் நடத்தப்பட்டது.
27 சீனாவின் நிலை என்ன?
Yசோசலிச சீனம் உருவானதிலிருந்தே பாலஸ்தீன அதரவு நிலைதான் சீன அரசாங்கம் எடுத்து வருகிறது.
Yயாசர் அராபத் 14 முறை சீனாவுக்கு சென்றுள்ளார். அவர் அதிக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டது சீனாவுக்குதான்!
Yபாலஸ்தீன விடுதலை அமைப்புக்கு சீனா ஆயுத உதவிகளும் பயிற்சிகளும் அளித்தது.
Yஹமாசை பயங்கரவாத அமைப்பு என சீனா கருதவில்லை.
Y2006ம் ஆண்டு காசாவில் ஹமாஸ் வெற்றி பெற்ற பிறகு, சீனாவில் நடந்த அரேபிய உச்சி மாநாட்டில் அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி ஹமாசை பங்கேற்க சீனா அழைத்தது.
Yகாசா பகுதியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சார நிலையத்தை சீனா இலவசமாக நிறுவியது.
Yஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தொடர்ந்து பாலஸ்தீன ஆதரவு நிலை எடுத்து வருகிறது.
Yஜனாதிபதி ஜி ஜின் பிங் ஒரு விசேட தூதரை நியமித்து அரேபிய நாடுகளிடம் போரை நிறுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
Yபாலஸ்தீனர்களுக்கு சுயேச்சையான, விடுதலை பெற்ற தேசம்தான் பிரச்சனையை தீர்க்கும் என சீனா வலியுறுத்தி வருகிறது.
28 கியூபாவின் நிலை என்ன?
Y 1973ஆம் ஆண்டே இஸ்ரேலுடன் தூதரக உறவை கியூபா முறித்துக்கொண்டது. இன்றுவரை உறவு இல்லை.
Y பாலஸ்தீன மருத்துவ ஊழியர்களுக்கு கியூபாவில் பல ஆண்டுகள் இலவசமாக பயிற்சி கொடுக்கப்பட்டது.
Y கியூபாவின் வீதிகளில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இயக்கங்கள் நடைபெறுகின்றன. பல இயக்கங்களில் கியூபா ஜனாதிபதி மிகுயேல் தி கேனல் யாஸ் நேரடியாக கலந்துகொள்கிறார்.
29 ரஷ்யாவின் நிலை என்ன?
Y தொடக்கத்திலிருந்தே இஸ்ரேலின் தாக்குதல் இனப்படுகொலை என கூறிவந்தவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்தான்.
Y பாலஸ்தீன மக்களுக்கு சுதந்தர தேசம் தேவை என்பதை ரஷ்யா தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.
Y போருக்கு பின்னர் ஹமாஸ் தலைவர்களை மாஸ்கோவிற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்திய தேசம் ரஷ்யா.
Y போர் நிறுத்தம் தொடர்பாக சவூதி/ அரபு அமீரகம் போன்ற பல தேசங்களுக்கு புடின் பயணம் மேற்கொண்டார்.
Y சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, பாலஸ்தீனம் தொடர்பாக 3 முறை ரஷ்யா வந்தார்.
Y பாலஸ்தீன தூதரகம் முன்பு மாஸ்கோ மக்கள் தினமும் கூடி அஞ்சலியும் குழந்தைகள் விளையாட்டு பொம்மைகளை வைத்து தமது ஆதரவையும் தெரிவித்தனர்.
Y ரஷ்யாவின் தகேஸ்தான் எனும் சுயாட்சி பகுதி சுமார் 600 பாலஸ்தீன மக்களை வரவழைத்து குடியுரிமை தந்து வாழ்வாதார உத்தரவாதம் செய்துள்ளனர்.
Y ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனாவுடன் இணைந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக தொடர்ந்து ரஷ்யா செயல்பட்டுவருகிறது.
Y ரஷ்யாவில் கணிசமாக யூதர்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
30 தென் ஆப்பிரிக்காவின் வழக்கு எந்த திசையில் செல்கிறது?
தென் ஆப்பிரிக்காவின் ஒரு மகத்தான் செயல் ஐசிஜே (ICJ) எனப்படும் சர்வதேச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஆகும். இனப்படுகொலை என்னவென்று நேரடியாக அனுபவித்த தேசம் தென் ஆப்பிரிக்கா. இனவேற்றுமையிலிருந்து தென் ஆப்பிரிக்கா விடுதலை பெற்றபொழுது நெல்சன் மன்டேலா கூறினார்:
“பாலஸ்தீனம் விடுதலை பெறாமல் தென் ஆப்பிரிக்காவின் சுதந்திரம் முழுமை பெறாது”
அந்த பாரம்பரியத்தில் தென் ஆப்பிரிக்காவின் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகிறது என தென் ஆப்பிரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதற்காக ஏராளமான சாட்சியங்களையும் ஆதாரங்களையும் தென் ஆப்பிரிக்கா திரட்டியுள்ளது. அதன் வலிமையான ஆதாரங்கள் காரணமாகவே இனப்படுகொலையை தடுக்க வேன்டும் என சர்வதேச நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு தந்துள்ளது.
31 முழுமையான தீர்ப்பு எப்பொழுது வரும்?
அது நீண்ட நாட்கள் ஆகலாம்.
32 வேறு தேசங்களும் வழக்கு தொடர்ந்துள்ளனவா?
தென் ஆப்பிரிக்காவுடன் பிரேசில்/ சிலி/ ஸ்பெயின் போன்ற பல தேசங்கள் இணைந்துள்ளன.
33 வழக்கில் இஸ்ரேலை ஆதரிக்கும் தேசம் உள்ளதா?
சர்வதேச நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பை அமெரிக்கா விமர்சித்துள்ளது. ஜெர்மனி இஸ்ரேலுக்கு ஆதரவாக வழக்கில் இணைந்துள்ளது.
34 நேதன்யாகுவை கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா?
ஐசிசி (ICC) எனப்படும் சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் இந்த ஆணையை பிறப்பித்துள்ளது.
35 இதனையும் அமெரிக்கா நிராகரித்துள்ளதா?
ஆம். இதே நீதிமன்றம் டோன்பாஸ் பகுதியிலிருந்து போரினால் பாதிக்கப்படும் ரஷ்ய குழந்தைகளை பாதுகாப்புக்காக மாஸ்கோவிற்கு கொண்டுவந்த பொழுது குழந்தை கடத்தல் பிரிவில் ரஷ்ய ஜனாதிபதி புடின் மீது கைது ஆணையை பிறப்பித்தது. அதனை அமெரிக்காவும் ஏனைய முதலாளித்துவ நாடுகளும் ஒரே குரலில் வரவேற்றன. ஆனால் சுமார் 50 ஆயிரம் பேரை படுகொலை செய்துள்ள நேதன்யாகுவை கைது செய்யவேண்டும் என்ற தீர்ப்பை கைதை விமர்சிக்கின்றனர். அமெரிக்காவின் அப்பட்டமான இரட்டை நிலை இது.
36 பல நாடுகளில் மாணவர்களும் தொழிலாளர்களும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராடுகின்றனரே!
ஆம். வியட்நாம் போர் எதிர்ப்புக்கு பின்னர் உருவாகியுள்ள பரவலான இயக்கம் இது. மாணவர்கள் முன் கை எடுத்துள்ளனர். பல இடங்களில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கையாள மாட்டோம் என தொழிற்சங்கங்களும் உறுதியான நிலை எடுத்துள்ளன. இந்த அளவுக்கு பாலஸ்தீன ஆதரவு இயக்கம் எழுச்சி பெறும் என அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை.
37 இத்தனைக்குப் பிறகும் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தவில்லையே, ஏன்?
அதற்கு மிக முக்கிய காரணம் அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவு நிலைதான்! அமெரிக்கா நினைத்தால் ஒரு நாளில் இந்த தாக்குதலை நிறுத்த இயலும். ஜோ பைடனின் ஒரு தொலைபேசி நேதன்யாகுவை எச்சரித்தால் இந்த போர் நின்றுவிடும். ஆனால் அதனைச் செய்ய அமெரிக்கா தயாராக இல்லை.
38 அமெரிக்கா ஏன் இஸ்ரேலை ஆதரிக்கிறது?
அரேபியாப் பிரதேசத்தில் ஏராளமான எரிசக்தி வளங்கள் உள்ளன. அவற்றை தன் ஆளுகையின் கீழ் வைத்திருக்க அமெரிக்கா முயல்கிறது. ஆனால் அரேபிய மக்கள் முழுமையாக அமெரிக்காவை ஆதரிப்பது இல்லை. எனவே தனது அடியாளாக அந்த பகுதியில் ஒரு தேசம் வேண்டுமானால் அதற்கு தகுதி படைத்தது இஸ்ரேல்தான் என்பது அமெரிக்காவின் திட்டவட்ட முடிவு. எனவே இஸ்ரேலை ஆதரிக்கிறது.
39 இஸ்ரேலுக்கு எத்தகைய உதவிகளை அமெரிக்கா செய்கிறது?
Y இரண்டாம் உலகப்போர் முடிந்ததிலிருந்து இன்றுவரை அமெரிக்கா ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர்களை, அதாவது சுமார் ரூ 35,000 கோடியை தந்து வருகிறது.
Y இஸ்ரேல் தாக்குதல் தொடங்கிய பின்னர் 10 பில்லியன் டாலர்களை தந்துள்ளது.
Y அமெரிக்காவின் அனைத்து நவீன ஆயுதங்களும் இஸ்ரேலுக்கு கிடைக்கின்றன.
Y போர் தொடங்கியதிலிருந்து சுமார் 230 பெரிய சரக்கு விமானங்களில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வாரி வழங்கியுள்ளது.
Y இரு பெரிய போர்க்கப்பல்களை இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா அனுப்பியுள்ளது.
Y ஐ.நா.சபை உட்பட அனைத்து சர்வதேச அமைப்புகளிலும் அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்கிறது.
Y இந்த உதவிகள் இல்லை எனில் இஸ்ரேல் ஒரு வாரம் கூட போரில் நிலைத்து நிற்க முடியாது.
40 எத்தகைய உதவிகளை இஸ்ரேல் அமெரிக்காவுக்கு செய்கிறது?
வளைகுடா பகுதியில் அமெரிக்க நலனுக்கு எதிராக செயல்படும் இயக்கங்களை ஒடுக்குவது; அத்தகைய தலைவர்களை தனது மொசாத் உளவு அமைப்பு மூலம் படுகொலை செய்வது என பல வழிகளில் இஸ்ரேல் செயல்படுகிறது.
41 அமெரிக்காவுக்குள் இஸ்ரேல் செல்வாக்கு வலுவாக உள்ளது என சொல்லப்படுகிறதே!
ஆம். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பாலானவர்களுக்கு தேர்தல் நிதி உதவியை இஸ்ரேல் ஆதரவு சியோனிஸ்ட் (யூத இனவெறி பிடித்த)யூதர்கள்தான் செய்கின்றனர்.
“நான் அமெரிக்கா ஜனாதிபதி என்ற முறையில் பிரான்ஸ் அல்லது பிரிட்டன் அல்லது ஜெர்மனியை விமர்சிக்க இயலும். ஆனால் இஸ்ரேலை விமர்சித்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக உள்ளன”என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது புத்தகத்தில் கூறியுள்ளார் எனில் நாம் இதனை உணரமுடியும்.
அமெரிக்க நாடாளுமன்றமே சியோனிஸ்டுகளின் - அதாவது, யூதஇனவெறியர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என சிலர் விமர்சிக்கும் அளவுக்கு நிலைமை உள்ளது.
42 போரின் தற்போதைய நிலை என்ன?
இஸ்ரேல் காசா பகுதிக்குள் நுழைந்து பல கிலோ மீட்டர்கள் சென்றுள்ளது. அதே சமயம் ஹமாஸ் தாக்குதலில் பல இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் தரப்பில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற விவரங்களை ஹமாஸ் வெளியிடவில்லை. இஸ்ரேலும் வெளியிடவில்லை. இதுவரை எந்த ஒரு ஹமாஸ் வீரரும் இஸ்ரேலிடம் சரணடைந்ததாக தகவல் இல்லை.
43 பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நேரடி களத்தில் உள்ளவர்கள் யார்?
லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கமும் ஏமனின் ஹவூதி அமைப்பினரும் நேரடியாக இஸ்ரேல் மீது ஒரு வரையறைக்குள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
44 ஹிஸ்புல்லாவும், ஹவூதியும் ஈரானால் இயக்கப்படுகின்றனவா?
முழுமையாக இயக்குவதாக தகவல்கள் இல்லை. ஆனால் ஈரானின் வலுவான ஆதரவு ஹமாஸ்/ஹவூதி/ஹிஸ்புல்லாவுக்கு உள்ளது என்பது உண்மை.
45 காசா மக்கள் பட்டினியில் துன்பப்படுகிறார்களே!
ஆம். எந்த உணவுப்பொருளையும் மருத்துவப் பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிப்பது இல்லை. எனவே பசியும் பட்டினியும் தலைவிரித்தாடுகிறது. மருந்துகள் இல்லாததால் ஒரு நாளைக்கு சராசரியாக 8 குழந்தைகள் கை அல்லது கால்களை இழக்கின்றனர்.
46 இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் மத்திய கிழக்கு பகுதி மோதலாக மாறுமா?
அவ்வாறு ஏற்படாது என நிச்சயமாக சொல்ல முடியாது. ஹிஸ்புல்லா அமைப்பிடம் 1,50,000 ஏவுகணைகள் உள்ளன. இஸ்ரேலுக்கு தோல்வியை அளித்த ஒரே அமைப்பு ஹிஸ்புல்லாதான்! இஸ்ரேல் அமெரிக்காவின் அறிவுறுத்தலை மீறி ஹிஸ்புல்லாவை தாக்கினால் இது பிரதேச போராக மாறும் ஆபத்து உள்ளது.
47 ஈரான்- இஸ்ரேல் போர் உருவாகுமா?
ஈரானை தாக்கி, அதன் பதிலடி மூலம் ஈரானை போரில் ஈடுபட வைத்தால் அமெரிக்காவை போரில் இழுத்துவிடலாம். அது தனக்கு சாதகம் என இஸ்ரேல் நினைக்கிறது. ஆனால் அத்தகைய நேரடி போருக்கு அமெரிக்கா தயாராக இல்லை.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இஸ்ரேல், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தை திட்டமிட்டு தாக்கியது. அதற்கு மிகப்பெரிய அளவில் பதிலடி தர ஈரான் முற்பட்டது. சில திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக ஈரான் மிகவலுவான ஏவுகணை ஆயுதங்களை சில குறிப்பிட்ட இஸ்ரேல் பகுதிகளில் மட்டும் செலுத்தி சில அழிவுகளை உருவாக்கியது. ஆனால் அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக இஸ்ரேல் பெரிய அளவுக்கு பதில் தாக்குதல் தரவில்லை. எனினும் ஈரானின் ஏவுகணை திறனை அமெரிக்காவும் இஸ்ரேலும் தெரிந்து கொள்ள ஈரானின் தாக்குதல் உதவியது.
இத்தகைய எந்த ஒரு தாக்குதலும் ஈரான்- இஸ்ரேல் இடையே உருவாகும் ஆபத்து உள்ளது. அப்படி உருவானால் வேகமாக அது வளைகுடா பிரதேச போராக மாறிவிடும்.
48 இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் அணுயுத்தத்துக்கு இட்டுச் செல்லும் ஆபத்து உள்ளதா?
இல்லை என சொல்ல முடியாது. ஈரானிடம் அணு ஆயுதங்களுக்கான திறன் உண்டு என்பது அனைவரும் அறிந்த உண்மை. இஸ்ரேலிடமும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அணு ஆயுதங்கள் உண்டு. எனவே சிறு தவறு கூட அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதில் முடியலாம்.
49 இப்பொழுது காசாவின் நிலை எப்படி உள்ளது?
ஒரு ஐ.நா.அதிகாரி கூறினார்: “பூமியில் நரகத்தை நீங்கள் காண வேண்டுமா? அப்படியானால் காசாவுக்கு வாருங்கள்”.
ஆம்! இன்றைய காசா பூமியில் உள்ள நரகம்.
50இஸ்ரேல் இன அழிப்பு போரில் இந்திய மக்களுக்கு படிப்பினை என்ன?
Y இந்திய வலதுசாரிகளும் இஸ்ரேலிய வலதுசாரிகளும் ஒன்றிணைவது மிக ஆபத்தானது. மோடி ஆட்சியில் அந்த ஆபத்து உள்ளது.
Y மூன்று தலைமுறைகளாக மத அடிப்படையில் மூளைச்சலவை செய்யப்பட்ட இஸ்ரேலிய மக்கள் 85சதவீதம் பேர் பாலஸ்தீன இனப்படுகொலையை ஆதரிக்கின்றனர். இந்தியாவிலும் அப்படி மூளைச்சலவை நடைபெற்றால் என்ன ஆகும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
Y Ethnic Democracy எனப்படும் ஒரு இனத்துக்கு மட்டுமேயான ஜனநாயகம் இஸ்ரேலில் அமலில் உள்ளது. இஸ்ரேலில் 88சதவீதம் பேர் யூதர்கள். 12சதவீதம் பேர் அரேபியர்கள். அரேபியர்களுக்கு குடியுரிமை உண்டு. ஆனால் வேறு எந்த உரிமையும் இல்லை. சொத்துக்களை வாங்க முடியாது. ஒரே நிறுவனத்தில் யூதர்களுக்கு தரப்படும் ஊதியம் அரேபியர்களுக்கு தரப்படாது. இத்தகைய சூழலைத்தான் இந்தியாவிலும் மோடி அரசு அமலாக்க முயல்கிறது.