articles

img

டைரி சிறுகதைத் தொகுப்பு - கருப்பு அன்பரசன்

சென்னை ஸ்பென்சர் சிக்னல்,  அலுவலகம் முடித்து அண்ணா சாலை வழியாக  நிதானமான வேகத்தோடு வந்து கொண்டி ருக்கிறேன். ஸ்பென்சர் சிக்னலில் பச்சை விளக்கு அணைந்து, மஞ்சள் விளக்கு  எறிய  வண்டியை மெதுவாக வந்து வெள்ளைக் கோட்டிற்கு அருகில் நிறுத்துகிறேன்.. என் பின்னால் வேகமாக வந்த இருசக்கர வாகனம்..  அதில் 40 வயதை கடந்த இருவர்.. வாகனம்  என்னுடைய வலது கை புறத்தின் அருகிலேயே  நிற்கிறது. வாகனத்தை ஓட்டிய நபர் பேசு கிறார் “த்தா... பொட்டச்சி எவ்ளோ வேகமா ஓட்டுற.. நம்மள ஓவர் டேக் செய்றா.. ம்ம் விடுவோமா மாமா அவள.. சும்மா அவளுக்கு முன்னாடி வந்து நின்னோமில்ல... அவ எங்க வரா பாரு..” சொல்லி முடித்ததும் என்னுடைய இடது கை புறத்தின் அருகே ஏதோ ஒரு அலு வலகம் ஒன்றில் வேலை முடித்து விழிகளில் சக்தி இல்லாமல் ஒரு பெண் தன்னுடைய வாக னத்தில் வந்து நிற்கிறார். வந்து நின்றவருக் கும் எங்கள் மூவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டது கிடையாது.. பார்த்துக் கொண்டதும் கிடை யாது. பெண் ஒருவர் அவருடைய வாகனத்தில் அவரின் வேலையின் பொருட்டு வேகமாக ஆண் ஒருவரை ஓவர்டேக் செய்து போவ தையே பொறுத்துக் கொள்ள முடியாது ஆண்களின் திமிர் சமூகத்தில் தான் நாம்  வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தான் இந்தச் சம்பவம் எனக்குள் உணர்த்தி யது. பெண்களுக்கு எதிரான அந்தத் திமிர் ஆதிக்க சாதிகள் தொடங்கி ஒடுக்கப்பட்ட சாதிகள் வரை இருக்கக்கூடிய எல்லா மயிர் களுக்குள்ளும் வேர்வரை ஊடுருவி விஷம் பாய்ச்சி வைத்திருக்கிறது என்பதை அந்த வாகனத்தில் ஒட்டி இருந்த ஸ்டிக்கரில் இருந்து  பார்க்க முடிந்தது.   பெண் ஒருவர் தன் விருப்பத்திற்கு உடைய அணிந்து சென்றால், பள்ளிக்கு கல்லூரிக்கு சென்றால், பிடித்த நண்பர்களோடு பேசினால்,  இணையாக நடந்து சென்றால்.. சிரித்தால்.. மனது விரும்பும் வேலைக்கு அல்லது ஏதேனும் வேலை செய்ய வேண்டிய அவசியம் ஒன்றி னை குடும்பச் சூழல்கட்டாயப்படுத்தினால், அப்பெண் குறித்துஆண்களால் வெளிப்படை யாகவும் சத்தமாகவும் மௌனமாகவும் அவ ரின் உடல் சார்ந்து கட்டமைத்து சித்தரிக்கப்படு கிறார்கள் அவரவர் வக்கிர எண்ணங்களுக்கு ஏற்ற முறையில் இன்றும் கூட. ஆண்களுக்கு இணையாக பெண்களா..? உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்று  புழுங்கி புழுங்கி மூச்சிறைக்கிறார்கள் மத நிறு வனங்களின் சாமியார்கள் தொடங்கி சாலை களிலும் அலுவலகங்களிலும் பள்ளிகளிலும் பேருந்துகளிலும் படிப்பறிவு உள்ளவர் இல்லாதவர் என்கிற வேறுபாடு எதுவும் இல்லாத ஆண்களால். 

#டைரி ஒவ்வொரு தனி நபரின் அந்த ரங்கம். மிகுந்த ரகசியமான எவர் ஒருவ ரோடும் பகிர்ந்து கொள்ள முடியாத செய்தி களை உள்ளடக்கியதாக எல்லோராலும் எழுதப்பட்டு வருவது.ஆண்கள் எழுதக்கூடிய டைரியில் பல விஷயங்கள் சங்கதிகள் வெளிப் படை தன்மையோடும் அதீதமாகவும் இருக்கும்..எல்லாவிதமான உறவுகள் குறித்தும். எழுதி வைத்துக் கொள்வதில் அவருக்கு சுதந்திரம் இருக்கிறது.. பொய் சொல்வதற்கும் சேர்த்தே. மெய்யும் பொய்யும் சரி விகித கலவையாக கூட இருக்கலாம் அந்த டைரி. இன்னொரு நபர் ஒருவரால் எழுதிய டைரி வாசிக்கப்படும் என்றால் அதில் எழுதி இருக்கும் அனைத்தும் வாசிக்கும் நபருக்கு பொழுதுபோக்காக இருக்கலாம், விளை யாட்டாக இருக்கலாம் அதில் சில விஷயங் களில் இருக்கும் உண்மைகள் அவருக்கு வலி யை கொடுக்கலாம்.. அதை வாசித்து விட்டு வாசித்தவர் எழுதியவருக்கு அறிவுரை சொல்லலாம் தைரியப்படுத்தலாம் முன் யோசனை சொல்லலாம்.. அந்த டைரி வாசிப் பவரை எந்த விதத்திலும் சங்கோஜப் படுத்தவோ சங்கடப்படுத்தவோ செய்து விடாத மன நிலைக்குள் பல நேரங்களில் வைத்துக் கொள்ளும்.அதுதான் ஆண் எழுத்தில்  இருக்கக்கூடிய புரிதல் நம் சமூகத்தில் பெரும் பாலானோருக்கு.'

டைரியை பெண் எழுதும் பொழுது; எதிர்காலத்தை, குடும்பத்தை, பிள்ளைகளை, பெற்றோரை நினைத்து பல விஷயங்களை வெளிப்படையாக எழுதி வைப்பதில் அவரின் மனசுக்குள்ளும் எண்ணத்திற்குள்ளும் தடைகள் வந்து கொண்டே இருக்கும்..  தன் குறித்து தன் மனதில் ஓடும் நிஜங்கள் குறித்தும் அனுபவங்கள் குறித்தும் அவரு டைய வாழ்நிலை குறித்தும் தினம் தினம் எதிர்கொள்ளும் சவால் நிறைந்த பிரச்சனைகள் குறித்தும் அவருடைய நண்பர்கள் குறித்தும்  வெளிப்படையாக நேரிடையாக எழுத முடியாமல் வார்த்தைகள் பல இடங்களில் புள்ளிகளாகவும், கண்களுக்குத் தெரியாத வார்த்தைகளைக் காற்றில் எழுதி இருக்க லாம். பல நிஜங்கள் எவர் கண்ணுக்கும் தெரிந்து விடக்கூடாது என்கிற பயமும் அச்சமும் அவரின் எழுத்துக்களில் பாதரசத்தை  ஊற்றி கருகச் செய்தது எவர்.. பெண் உணர்வு களின் குரல்வளை அறுத்து உடலுக்குள்  குடும்ப  கவுரவத்தை, எழுத்துக்கள் மௌனத்தை பூட்டி வைத்து தன் உடமையாக்கி வைத்திருக்கும் ஆதிக்கத் திமிர்தானே. ஆதிக்கத் திமிரோடு சாதி ஆணவமும் சேர்ந்து கொண்டால்.. அப்படி இணைந்து கைகோத்திருக்கும் சிறுவாணி தண்ணீர் குடித்து வளர்ந்த மண்ணின் பெண் சமூகம் நாகப்பாம்பு ஒன்று தன் உடல்மேல் போர்த்தி யிருக்கும் தோலினை வலியோடு அதுவாகவே உரித்து வைத்து அமைதியாக ஊர்வதைப் போன்று எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் எழுதிய டைரி சிறுகதை தொகுப்பில்  பெண்கள் மன ஓட்டத்தை அதிர்வை பதிவு செய்திருக்கிறார்.

தொடர்ந்து தங்களின் உடலும் மனமும்  ஆண்களாலும் சாதித் திமிராலும் வன்முறைக்கு இரையாக்கப்பட்டு வருகிறது என்பதை நன்றாக உணர்ந்து அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கும் காரணங்களின் வேரினை அடையாளப்படுத்தி இருக்கிறார். அவைகளை தன்னுடைய கதைகளின் வழியாக பொதுவெளியில் போட்டுடைத்து “என்ன  செய்யப் போகிறீர்கள்?’ என்ற கேள்வி எழுப்பா மல் சென்று இருக்கிறார். பச்சை இலையை தின்ன கொடுத்து பட்டு பூச்சியை வளர்ப்பது ஆண்களின் பட்டுக் கோவனத் துணிக்கு தான் என்பதை ரௌத்திரம் மிகுந்த எழுத்துக்களில் பதிந்திருக்கிறார். பல பஞ்சாயத்துக்கள் தலைமை பொறுப்பை பெண்களுக்கு என்று ஒதுக்கி யிருந்தாலும்..அவர்கள் அனைவராலும் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டு, பல கிராம பஞ்சாயத்துகளில் பொறுப்பில் இருந்தாலும் “பெண்” என்பவராகவே அனைவ ராலும் பார்க்கப்பட்டு வருகிறார்கள் என்பதற்கு தமிழகத்திலும் இந்தியாவிலும் நிறைய உதாரணங்களை சொல்லிக் கொண்டே போக லாம். அவர்களை சுதந்திரமாக செயல்பட விடா மல் கூட்டம் கூட்டுவது முதல்கொண்டு நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும் ஆண்களிடம் தான் அனுமதிக்காகப்போய் நிற்க வேண்டி இருக்கிறது. அப்படியே  போய்  நின்றாலும் ஆண்கள் எப்படி பெண்களை தந்திரமாக சமையல் கட்டுக்குள்ளேயே அனுப்பி வைக்கிறார் என்பதை #அதிகாரம் என்கிற கதையில் நையாண்டியோடு அதிகா ரத்தின் அசிங்கத்தைசொல்லி இருக்கிறார் எழுத்தாளர் அருள்மொழி.

“காட்ட வித்து கள்ளு குடிச்சாலும்” கதையில் சுயமரியாதையோடும் ஆண்களின்  அதிகாரத்திற்கு எதிராகவும் வாழ முடி வெடுத்த மலர்க்கொடியின் கதை. பொள்ளாச்சி யில் இளம்பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு  உள்ளாக்கப்பட்ட கொடூரத்தை நினைவு படுத்துகிறது. *கோழைத்தனம் சிறுகதை மருத்துவத்துறை யில் பட்டம் பெற்ற பெண் ஒருவரின் வாழ்வில் ஆண்களின் சுய சாதி பெருமையும் குடும்ப கௌரவமும் இணைந்து தற்கொலை என்கிற கொலையை நிகழ்த்திய கொடூ ரத்தை பதிவாகி இருக்கிறார்  எழுத்தாளர் அருள்மொழி. *தியாகம் கதையில் வரக் கூடிய  நீலாமணி யைப் போன்றவர்கள்தான் எல்லாமும்  தெரிந்தாலும் அறிந்திருந்தாலும் உணர்ந்திருந்தாலும் மனசுக்குள் குமைந்து கொண்டே ஒவ்வொரு வீட்டிற்கும் இருக்கி றார்கள் அம்மாக்களின் அடையாள மாக இங்கு என எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் நிறுத்தி இருக்கிறார்.மெய்யான உண்மையும் கூட அது.இன்று ஒவ்வொரு வரின் வீடுகளிலும் பல நீலவேணிகள்.

* தண்ணி_பைப் என்கிற கதையை வாசிக்கும் பொழுது வேங்கைவயல் கிராமமும் பஞ்சா யத்தும் நினைவிற்கு வந்து நம்மை குற்ற உணர்ச்சிக்கு தள்ளிவிடும்.. இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இந்த  குற்ற உணர்ச்சியோடவே நாம் பயணப்பட போகிறோம். இருக்கக்கூடிய அதிகாரம் முழு வதிலும் ஆதிக்க சாதி வெறி வெவ்வேறு வடிவங்களில் எல்லோர் மனதிலும் ஆழப் பதிந்து கிடக்கிறது. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நேரம் பார்த்து எட்டிப் பார்க்கிறது. நாமும் சாதாரண மாக கடந்து போய்விட நம்முடைய மனதை  பக்குவப்படுத்தி வைத்துக் கொண்டிருக் கிறோம். எதிர் கருத்து பேசாமலும் எதிர் செயல்களில் இறங்காமலும் கள்ள மவுனம் காப்பது ஆதிக்க சாதித்திமிருக்கு வசதியாய் போய் விடுகிறது.

டைரியில் 14 கதைகள் இருக்கிறது. அனைத்து கதைகளும் சுயசாதிப் பெருமை யும், குடும்ப கௌரவமும் பெண்களின் வாழ்நிலையை வாழ்வியலை அவர்களின் வலி மிகுந்த சம்மதத்தோடு சீரழித்து வைத்திருக் கிறது என்கிற நிஜங்களை பதிவுகளாக தன்னுடைய கொங்கு மண் சார்ந்த எழுத்துக் களோடு.. சொல்லாடல்களோடு கொடுத்திருக் கிறார். எழுத்தாளர் அருள்மொழி அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு இது.முதல் தொகுப்பிலேயே மலர்கொடியின் வழியாக  கலகத்தை துவக்கி இருக்கிறார் ஆதிக்க  சாதி வெறியும் ஆணாதிக்கமும் மிகுந்த இம்  மண்ணில். இயற்கையின் படைப்புகள்  அத்தனையும் எல்லோருக்கும் பொதுவானது.உன்னைப் போலவே தான் நானும் உயிர் திசுக்களின் விடாத போராட்டத்தாலும் கலவை யாலும் உயிர்க்கொண்டு உயிர்வளர்க்கிறேன்..

மனித மேம்பாட்டின் வளர்ச்சிகள் அனைத்திலும் உன்னைப் போலவே நானும் சரி பாதியாகவே நிற்கிறேன்..ஆனாலும் உன்னி லிருந்து கீழாகத்தான் இது நாள் வரையிலும்.. வலியை மட்டும் நான் சுமப்பது இனியும் நடக்காது. மகிழ்வையும் துன்பத்தையும் இனி  ஒரு சேரத் துய்ப்போம்.. காலத்தை தீர்மானிப் பது இருவரும் இணைந்தே இனி.. வா இணைந்திருப்போம்.! மீறி நீ ஏறிதான் மிதிப்பாய் என்றால் உனது குதிக்கால் நரம்புகளை அறுத்தெறி யவும் தயங்க மாட்டோம் எனஉடல், அறிவு தளத்திலும் இணைந்து மலர்க்கொடியாய் மாறும் பொழுதே எதிர் சமூகம் தன்னை மாற்றிக்கொள்ள யோசிக்கும். அதுவரை யிலும் நிறைய நீலவேணிகளை உருவாக்கிக் கொண்டே தான் இருப்பார்கள் ஆண்கள். நல்லதொரு அட்டை வடிவமப்பை கருத்துச்செறிவோடு அளித்து பெண்களின் மனசாட்சியினை வாழும் தமிழ்ச் சமூகத்திற்கு அளித்திருக்கிறார்கள் எப்பொழுதும் போல் சிறப்பாகவே பாரதி புத்தகாலயம்..எழுத்தாளர் அருள்மொழி மற்றும் பாரதி புத்தகால யம் இருவருக்கும் அன்பும் வாழ்த்துக்களும்.

டைரி
சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் : அருள்மொழி
வெளியீடு : பாரதி_புத்தகாலயம்
பக்கங்கள் : 208.
விலை : ரூ.200/-

;