2019ஆம் ஆண்டு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டிய ஆண்டாகும். காந்திஜி, இந்திய மக்களின் ஈடிணையற்ற வெகுஜனத் தலைவராக இன்றும் தொடர்கிறார். பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களிடமிருந்து, சுதந்திரத்திற்கான போராட்டத்தில் நாட்டின் பல்வேறு வேற்றுமைப் பண்புகளுடன் வாழ்ந்த மக்கள் அனைவரையும் மிகவும் வெற்றிகரமான முறையில் ஒன்றுபடுத்தினார்.