தேர்தல் பணிகளுக்காக மதுரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மதுரை தெற்கு சட்டமன்றம் தொகுதியில் பணியாற்ற பணிக்கப்பட்டேன். தேர்தல் நாளன்று நண்பகல் சுமார் 12 மணியளவில் வைகை ஆற்றின் வடக்கு ஓரமாக உள்ள பூத்துகளை பார்வையிட சென்றேன். இடையில் வந்த பல்வேறு தேர்தல் புகார்களை அதிகாரிகளிடம் பேச மதிச்சியம் சிபிஎம் தேர்தல் அலுவலகம் வந்தடைந்தேன்.