மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர், இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இன்று திராவிட மாணவர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பலரும் கருப்பு சட்டை அணிந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கார்டூன் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.