tamilnadu

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு

சென்னை,ஏப். 21- ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.வர்த்தகர்கள் மார்ச் மாதத்துக்கான விற்பனை கணக்குகளை ஏப்ரல் 20-ஆம்வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த காலக்கெடு மேலும் மூன்றுநாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, வர்த்தகர்கள் தங்களது மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி விற்பனை கணக்குகளை ஏப்ரல் 23-ஆம்தேதி வரை தாக்கல் செய்யலாம் என ஜிஎஸ்டிவலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.

;