tamilnadu

img

தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை

சென்னை:
தமிழகம் முழுவதும் ஜூன் 30ஆம் தேதிக்கு பின்னர் பொது ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தற்போதைக்கு முடிவெடுக்கப்படவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கான மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை (ஜூன் 20) பார்வையிட்டார்.குருநானக் கல்லூரியில் 300 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இங்கு தேவைப் பட்டால் மேலும் 200 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்படும் என்றார்.அவர்மேலும் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக முயற் சித்து வருகிறது. வெளிநாடு மற் றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களாலேயே தமிழகத்தில் கொரோனா பரவியது. மருத்துவர் கள், செவிலியர்களின் சிறப்பான பணியினால் குணமடைவோர் விகிதம் அதிகமாக உள்ளது.

ஊரடங்கு என்பது யாரையும் கட்டாயப்படுத்துவதற்கு அல்ல. யாரையும் சோதனைக்கு உள் ளாக்குவதற்கு அல்ல. பரவலைத் தடுப்பதற்குத்தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தொற்றுப் பரவலைத் தடுக்க முடியும். வீடு, வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு இந்த ஊரடங்கு பயன்படுகிறது.ஆங்காங்கே 300 காய்ச்சல் மையங்கள் அமைக்கப்பட்டுப் பரிசோதிக்கப்படுகிறது. இது 450 ஆக அதிகரிக்கப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். அப்போதுதான் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

இதுவரைக்கும் 8 லட்சத்து 27 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இது மேலும்அதிகப்படுத்தப்படும். எந்த வொரு மருந்தும் கண்டுபிடிக்கப் படாத சூழலில் மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சையை அளித்ததாலேயே இவர்கள் குணமடைந் துள்ளனர்.தமிழகத்தில் அரசு சார்பாக 48, தனியார் சார்பாக 35 என 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. சென்னையில் 17 ஆயிரத்து 500 படுக்கை வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். மருத்துவமனைகளில் 5,000 படுக்கைகளும் மற்ற இடங் களிலும் படுக்கைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.மீண்டும் முழு ஊரடங்கு போடப்பட்டு இருப்பது யாரையும் கட்டாயப்படுத் துவதற்கு அல்ல, கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தவே.இந்த வைரஸ் எப்போது ஒழியும் என்று எனக்கும் தெரியாது.இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.

;