பியாங்யாங், ஜூன் 20- ரஷ்ய ஜனாதிபதி புடின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வடகொரியாவுக்கு சென்ற போது இருநாட்டு தேசிய பாதுகாப் பை உறுதிசெய்யும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இது மிக முக்கிய மான பாதுகாப்பு ஒப்பந்தமாக கருதப்படுகிறது. உக்ரைன் - ரஷ்யா போரில் ரஷ்யா விற்கான ஆதரவை தொடர்வதோடு ரஷ்யா வின் மீது நேட்டோ நாடுகள் அல்லது அதன் எல்லைக்குள் அமெரிக்க ஆதரவு படைகள் தாக்குதல் நடத்தும் போது வடகொரியாவும், வட கொரியா மீது அமெரிக்கா அல்லது தென் கொரியா தாக்குதல் நடத்தினால் ரஷ்யாவும் பரஸ்பர ராணுவ பாதுகாப்பு உதவிகள் செய்வது இந்த ஒப்பந்தத்தின் அடைப்படையில் உறுதியாகியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வரும் வடகொரியா மற்றும் ரஷ்ய அரசுகள் ஏற் படுத்தியுள்ள இந்த ஒப்பந்தம் உலகளவில் போர் சூழலை அதிகரித்து வரும் அமெ ரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுக ளுக்கு எச்சரிக்கை விடுவதாக அமைத்துள் ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித் துள்ளனர். மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளின் அழுத்தத்தால் வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள ஐ.நா. பொருளாதாரத் தடைகளை மறுபரிசீலனை செய்வதற்கான முன்மொழிவுகளை வரும் காலத்தில் ரஷ்யா முன்வைக்கலாம் எனவும் இந்த ஒப்பந்தங்கள் குறித்து இந்தோ-பசிபிக் பிராந்திய சர்வதேச உறவுகள் நிபு ணரான அரசியல் விஞ்ஞானி, டாக்டர் தியோ தெரிவித்துள்ளார். எனினும் அந்த தடை களை நீக்க ஐ.நா.வில் மற்ற நாடுகளின் ஒத்து ழைப்பும் வேண்டும். எனவே இது உடனடி சாத்தி யமான விஷயம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.