வங்கதேசத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகளில் ஒரு பிரி வினர், அந்த தேசத்தில் எதிர்ப்பு இயக்கங்களில் செயல் பட்ட மாணவர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த சில குழுக்களின் வழிகாட்டு தலில் செயல்படும் அமைப்புகள் மூலம் தீவீரப் பயிற்சியும் சீர்குலைவு பணிகளுக்கான செயல்முறையை யும் பெற்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்தை எப்படி ஏற்படுத்து வது என்பதற்கும் அவர்கள் அமெ ரிக்க குழுக்களிடம் பயிற்சி பெற்றதாக புதிய - அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர்.
“கடந்த சிலவாரங்களில் நடந் தவை அனைத்தும், ஆட்சி மாற்றத் துக்காக நீண்ட நாட்களாக திட்டம் தீட்டி வந்த அமெரிக்காவின் உதவி யுடன் செயல்முறைப்படுத்தப்பட்ட நிக ழ்வுகளே ஆகும். நாங்கள் அதனை ‘வங்காள வசந்தம்’ எனக் கூறு கிறோம். இதன் மூலம் மாணவர்கள் தீவிர சீர்குலைவு இலக்குகளைக் கொண்ட குழுக்களுடன் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். வாசகர் வட்டங்கள் மூலம் ஆட்சிமாற்றம் பற் றிய பயிற்சி அவர்கள் பெற்றனர்” எனக் கூறுகிறார் பேராசிரியர் நசுமுல் ஆஷான் கலிமுல்லா.
இப்படி ஒரு சூழல் உருவாகிறது என்பதை இந்தியாவால் கணிக்க முடி யவில்லை. எனவே இந்தியாவும் இதனை எதிர்பார்க்க இயலவில்லை.
இந்த குழு நடவடிக்கைகளின் பின் னால் ஜமாயத்-இ-இஸ்லாமி மற்றும் பங்களாதேஷ் தேசிய கட்சியின் ஊழி யர்கள் இருந்தனர். அமெரிக்கா, வங்க தேசத்தில் ஆட்சி மாற்றத்துக்காக பல செயல்களை அரங்கேற்றியது. மனித உரிமை மீறல் பிரச்சனைகள் பற்றி தொடர்ந்து அமெரிக்கா பேசியது; வங்கதேச வாசிகளுக்கு விசா கொடுப்பதை அமெரிக்கா குறைத் தது; கடந்த இரு வருடங்களில் ஏரா ளமான உயர்மட்ட அமெரிக்க அதி காரிகள் வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.
“இஸ்லாமிய சாத்ரா ஷிபீர் மற்றும் ஜமாயத்-இ- இஸ்லாமி ஆகிய அமைப்புகளை ஷேக் ஹசீனா அரசு தடை செய்தது. ஏனெனில் அவை என்ன சீர்குலைவு சதி வேலைகளை செய்கின்றன என்பதை ஷேக் ஹசீனா அரசு உணர்ந்திருந்தது. எனி னும் இந்தத் தடைகள் எதிர்ப்பு இயக் கத்தை வலுப்படுத்த செய்தன. பல எதிர்க்கட்சிகளின் மாணவர் அமைப்பு கள், எதிர்ப்பு இயக்கத்துக்கு ஆதரவு அளித்தன. ஆயிரக்கணக்கான மாண வர்கள் பிரதமரின் இல்லத்தை முற்று கையிட்ட பொழுது ராணுவத்தின் உதவி இல்லாததால் ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது” என்றும் கூறு கிறார் பேராசிரியர் கலிமுல்லா.
மாணவர்களின் போராட்டங்க ளுக்கு ராணுவம் கிரியா ஊக்கியாக செயல்பட்டது. உலகின் பல பகுதி களில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்சிகளை சீர்குலைத்து மாற்றுவ தில் நிபுணத்துவம் பெற்ற டொனா ல்டு லூ எனும் தூதரக அதிகாரி அடிக் கடி வங்கதேசத்திற்கு வந்தார். ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் என இரு தரப்பினரையும் சந்தித்தார். தனது கடந்த பயணத்தின் பொழுது மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பு தலைவர்களையும் அவர் சந்தித்து இந்த சீர்குலைவு கலகத்திற்கு அவர் வித்திட்டார் என இன்னொரு பேராசிரி யர் கூறியுள்ளார்.
“இப்படி ஒரு அரசியல் புயல் உரு வாகி வருகிறது என்பதை இந்தியா வால் கணிக்க இயலவில்லை. ஏனெ னில் இந்திய நிர்வாகம் ஷேக் ஹசீனா வின் அவாமி லீக் மதிப்பீடை மட்டுமே சார்ந்திருந்தது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ (ISI) அமைப்பும் இந்தியா வுக்கு எதிராக பின்னணியில் செயல் பட்டு கொண்டிருந்தது. ஹிசபுர்-தாஹி ரிர் எனும் அடிப்படைவாத அமைப் பின் செல்வாக்கு ராணுவத்தினரி டையே ஆழமாக இருந்தது. ராணுவ முதன்மை அதிகாரி, ஆட்சி மாற்றம் குறித்து பேட்டி கொடுத்தபோது இந்த அமைப்பின் பெயரையே முதலில் கூறி னார்” என்பதை சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் கலிமுல்லா.
கிட்டத்தட்ட இடைக்கால அரசின் உறுப்பினர்கள் அனைவருமே அமெ ரிக்காவுடன் நேரடி தொடர்பில் உள்ள னர். இந்த அரசில் இணைய அழைப்பு விடுக்கப்பட்ட ஒரே இந்து- பிதாய் ரஞ் சன் ரே! ஆனால் இவர் பதவியேற்பின் பொழுது கலந்துகொள்ளவில்லை. அவர் அமைச்சரவையில் பங்கேற் பாரா என்பதும் உறுதியற்று உள்ளது.
சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. சில சிறைகளில் கலகம் நடந்துள்ளது. சிட்ட காங்க் சிறையில் நடந்த கலவரத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியுள்ளார். தற்சமயம் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் அவரது அரசியல் இலக்கு இன்னும் உயிரோடு உள் ளது.
பாரம்பரியமாக வங்கதேசம் மதச்சார்பின்மை அரசியலமைப்பை கொண்டுள்ளது. இந்தக் கோட்பாடு கள் கடைபிடிக்கப்பட்டன. பன்முகத் தன்மையை வங்கதேசம் ஊக்குவித் துள்ளது. ஆனால் இடைக்கால அர சின் பதவியேற்பு விழா இதனை பிரதி பலிப்பதாக இல்லை.
ஆனால், “பதவியேற்பை வைத்து, பன்முகத்தன்மை இனி இருக்காது என்ற அச்சம் தேவை யில்லை.. இது ஒரு கோட்பாடாக மாறாது; பன்முகத்தன்மை தொட ரும் என்றே நம்புகிறோம்” என ஒரு கல்வியாளர் கூறுகிறார்.
இடைக்கால அரசில் மாணவர் பிரதிநிதிகள் இணைக்கப்பட்டிருப் பது முக்கியத்துவம் வாய்ந்தது. இடைக்கால அரசு சரியான திசை வழி யில் செல்வதை மாணவ பிரதிநிதிகள் உத்தரவாதம் செய்வார்கள் என நம்பு வதாகவும், மாணவர்கள் மற்றும் மக்க ளின் கோரிக்கைகளுக்கான எல்லைக் குள் புதிய அரசு இருப்பதை மாண வர்கள் உறுதி செய்வார்கள் என நம்பு வதாகவும் அவர் கூறுகிறார். 1971-க்கு பின்னால் அமைந்த அரசிலும் ஏராள மான இளைஞர்கள் இருந்தனர் என் பதையும் அவர் குறிப்பிடுகிறார்.
டாக்கா பல்கலைக்கழகத்தின் சமீனா லுஃப்தா எனும் இணை பேரா சிரியரும் “புதிய இடைக்கால அரசை நான் வரவேற்கிறேன். ஆனால் அதில் உள்ள பலரும் அரசு நிர்வாக அனு பவம் இல்லாத துறைகளிலிருந்து வந்தவர்களாக உள்ளனர். அவர் களுக்கு பொருத்தமான தேவையான திறமைகள் தேவைப்படுகின்றன. தேசத்தை சீர்திருத்தம் செய்ய ஏரா ளமான பணிகள் செய்ய வேண்டி யுள்ளது. அதற்கான திறமைகள் இவர்களிடம் உள்ளதா என்பது என் பது கேள்விக்குறியே” என்று தெரி வித்துள்ளார்.