லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் கொடூர தாக்குதல் காரணமாக, லெபனானில் 60 சதவிகித சுகாதார மையங்கள் மூடப்பட்டுள்ளது.
இதில், 17 மருத்துவமனைகள்,127 முதன்மை பராமரிப்பு மையங்கள் மற்றும் மருந்தகங்கள் மூடப்பட்டுவிட்டன. இதனை உலக சுகாதார அமைப்பின் மத்திய கிழக்கு பகுதிக்கான அலுவலகம் (WHO-EMRO) தெரிவித்துள்ளது. பாலஸ்தீனம், காசா போல லெபனானிலும் இஸ்ரேல் ராணுவம் சுகாதார கட்டமைப்புகளை திட்டமிட்டு அழித்து வருகிறது.