world

img

ரஷ்யாவின் மூத்த ராணுவத் தளபதி கொலை: உக்ரைன் தொடர்புடைய நபர்கள் கைது

மாஸ்கோ, டிச. 18-  ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஒரு குண்டு வெடிப்பில் அந்நாட்டின் அணுசக்தி மற்றும் ரசாயன, உயிரியல் பாதுகாப்பு படையின் மூத்த அதி காரியான  லெப்டினென்ட் ஜெனரல் இகோர் கிரில் லோவ் படுகொலை செய்யப்பட்டார்.  இந்த கொலையில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும் முழு விவ ரங்களை தெரிவிக்கவில்லை.    ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரெம்ளினில் இருந்து  தென்கிழக்கில் வெறும் 7 கி.மீ., தொலை வில் அமைத்துள்ள ரியாஷன்ஸ்கி பிரோஸ்பெக்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே இந்த குண்டுவெடிப்பு  நடந்துள்ளது.

குடியிருப்பின் வாயிலில் வெடிகுண்டு வைக்கப் பட்ட ஒரு ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டிருந்தது. லெப்டி னென்ட் ஜெனரல் இகோர் வெளியே வந்த சில நொடிகளில் அந்த  ஸ்கூட்டர் வெடித்துச் சிதறியதில் அவர் படுகொலையானார். இதனை ரஷ்ய புல னாய்வு அமைப்புகளும் ராணுவ வட்டாரங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.  விசாரணைக்குழுவின் தகவல்படி இந்த குண்டுவெடிப்பில் இகோர் கிரில்லோவ் மற்றும் அவரின் உதவியாளர் இருவரும் படுகொலை யாகியுள்ளது தெரிய வருகிறது.  

இந்த படுகொலை நடந்த சில மணிநேரத்தில் இந்த தாக்குதலுக்கு தங்கள் தான் காரணம் என உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் இகோர் கிரில்லோவை பல மாதங்கள் படுகொலை செய்ய திட்டமிட்டதாகவும் உக்ரைன் கொலை செய்ய வேண்டிய ரஷ்யா அதிகாரிகள் பட்டியலில் அவரும் உள்ளதாக உக்ரைன்தரப்பில் கூறப்பட்டது. இந்த படுகொலை போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் தலைநகருக்கு மிக அருகில் இத்தகைய தாக்குதல் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

உக் ரைன் ஆதரவு வீரர்கள், அமெரிக்கா அல்லது நேட்டோ வீரர்களின் நேரடி செயல்பாட்டின் மூலம் இந்த தாக்குதல் நடந்துள்ளதா என்ற கோணத்தி லும் விசாரணைகள் நடந்து வருகின்றன.  ரஷ்ய ராணுவம் தனது சக்தி வாய்ந்த ஆர்சனிக் என்ற ஹைப்பர்சானிக் ஏவுகணைகளுக்கு மாற்றாக அதைவிட அதிக சக்தி வாய்ந்த ஏவு கணைகளை உக்ரைன் மீது பயன்படுத்த திட்ட மிட்டு வருகின்றது. இதற்கிடையில் உக்ரைன் மீது தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன் படுத்தியதாக கிரில்லோவ் மீது கடந்த திங்களன்று உக்ரைன் ராணுவம் குற்றம் சாட்டியிருந்தது.

ரஷ் யாவின் ரசாயன ஆயுதங்களை போரில் பயன் படுத்துவதால்  இங்கிலாந்து உட்பட சில ஐரோப்பிய நாடுகள் கிரில்லோவுக்கு தடை விதித்துள்ளன. ஆனால் தடை செய்யப்பட்ட அமெரிக்காவின் ரசாயன ஆயுதங்களை இஸ்ரேல் ராணுவம் பாலஸ் தீனர்கள் மீது கடந்த ஒரு ஆண்டாக பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது ரஷ்ய ராணுவ தளபதியின் கொலை உக்ரைன் - ரஷ்யப் போரில் புதிய பதற்றத்தை தூண்டியுள்ளது.