world

img

உக்ரைனுக்கு நேட்டோ ஆயுதங்கள் வழங்கினால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும்- புடின் எச்சரிக்கை

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நேட்டோ கூட்டமைப்பின் முடிவு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்ய்யாவிற்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், நேட்டோ கூட்டமைப்பு அவசர ஆலோசனை நடத்தியது. அதில், ரஷ்ய தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கவும், மனிதாபிமான அடிப்படையில் நிதியுதவு வழங்கப்படும் என  நேட்டோ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேட்டோ கூட்டமைப்பின் இந்த முடிவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கவுள்ளதாக நேட்டோ கூட்டமைப்பு அறிவித்திருப்பது மிகவும் தவறான செயல்.அவ்வாறு உக்ரைனுக்கு நேட்டோ ஆயுதங்களை வழங்கினால், அது  மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.