உக்ரைன் நெருக்கடியால் கோடிக்கணக்க்கான மக்கள் பட்டினியில் சிக்குவார்கள் என ஐ.நா. சபை எச்சரி த்துள்ளது. அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய நேரம் இது எனவும் ஐ.நா. வலியுறுத்துகிறது.
போர் காரணமாக உக்ரைனை விட்டு வெளியேறிய 60 லட்சம் அகதிகளில் 30 லட்சம் பேர் போலந்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை பராமரிக்க நிதி தேவை என ஐரோப்பிய ஒன்றியத்திடம் போலந்து வற்புறுத்தி வருகிறது.
ஆஸ்திரியாவில் உக்ரைன் அகதிகள் உள்ளூர் கார் ஓட்டுநர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இத்த கைய முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன. அகதிகள் மீது அதிருப்தி உருவாகி வருகிறது. பிரான்சு மற்றும் ஜெர்மனி ஜனாதிபதிகளிடம் புடின் தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.
ரஷ்யாவுக்கு எதி ராக உள்ள தடைகள் நீக்கப்பட்டால் உணவு தானி யங்கள் ஏற்றுமதியை அனுமதிக்க தயார் எனவும் உக்ரைனுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஆட்சேபணை இல்லை எனவும் புடின் கூறினார்.
பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் அகதிகளுக்கு இலவச பயணம்/ தினசரி அலவன்ஸ் என பல சலுகை களை அறிவித்தன. அவற்றை படிப்படியாக குறைக்க தொடங்கியுள்ளன. நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவோமா இல்லையா என்பதை தெளிவுபடுத்துங்கள் என ஜெலன்ஸ்கி விரக்தியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் ஜெர்மனிக்கு தரும் விஷம் போன்றது எனவும் அது உடனடியாக வேலை இழப்புகளை விளைவிக்கும் எனவும் ஜெர்மனியின் தொழிலாளர் அமைச்சர் ஹெபர்டஸ் ஹெல் கூறியுள்ளார். உக்ரைனுக்கு ஆயுதங்கள் உதவுவது ரஷ்யாவுடன் நேரடி போருக்கு வழிவகுக்கும் என முன்னாள் ஜெர்மனி உளவுத்துறை அதிகாரி ஹேன்ஸ் மாச்சென் எச்சரித்துள்ளார்.
ரஷ்யா முன்வைக்கும் சமாதானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என உக்ரைனுக்கு மேற்கத்திய நாடு களில் சில ஆலோசனை கூறியுள்ளன. இறப்பது உக்ரைன் வீரர்கள்தானே என இவர்கள் எண்ணு கிறார்கள் போலும்! சரணடைந்த சில உக்ரைன் வீரர்கள், சுமி பகுதியில் ஒரு ரசாயன தாக்குதலை உக்ரைன் நடத்தி அந்த பழியை ரஷ்யா மீது போட முயற்சிகள் உள்ளன என பகீர் தகவலை கூறியுள்ளனர்.