- தடைகள் தொடரும் வகையில் கணினி நிறுவன மான மைக்ரோ சாஃப்ட் ரஷ்யாவில் தனது வணிக செயல்களை குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது.
- உக்ரைன் பெறும் ராணுவ உதவியில் சுமார் 75% அமெரிக்காதான் தருகிறது. எனினும் உக்ரைன் போரில் தனது ராணுவ நடவடிக்கைகளின் உண்மை யான விவரங்களை அமெரிக்காவிடம் மறைக்கிறது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.
- ரஷ்ய தடைகளின் விளைவாக உருவான விலை வாசி உயர்வால் பிரிட்டனில் 70% பேர் உணவு குறித்த தமது கவலைகளை வெளிப்படுத்தியுள்ள னர். எனவே உணவு டோக்கன் முறையை விரிவு படுத்த பிரிட்டன் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
- அமெரிக்காவில் சிக்கியுள்ள ரஷ்ய பெரும் பணக்காரர் ரோமன் அப்ராமோவிச் என்பவரின் இரண்டு விமானங்களை பறிமுதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 400 மில்லியன் டாலர்கள். ரஷ்ய எண்ணெய்யை தடை செய்த அமெரிக்கா மறுபுறம் ரஷ்ய எண்ணெய்யை இரு மடங்கு கொள்முதல் செய்துள்ளது.
- இது இரட்டை வேடம் என ரஷ்ய நாடாளுமன்ற சபாநாயகர் வொலோடின் சாடியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா மூலம் தான் தந்து உதவிய போர் ஹெலிகாப்டர்களை அமெரிக்கா உக்ரைனுக்கு தனது அனுமதியில்லாமல் தருவது சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானது என ரஷ்ய தூதர் அன்டோனவ் குற்றம்சாட்டியுள்ளார்.
- தனக்கு தேவை எனில் எந்த சட்டத்தையும் அமெரிக்கா மதிக்காது என்பதற்கு இது மேலும் ஒரு நிரூபணம். தனது ஐரோப்பிய ஆதரவு நிலை காரணமாக ருமேனியாவுக்கும் அதன் மூலம் நேட்டோவுக்கும் அடிபணிந்து போக ரஷ்யாவின் அண்டை தேசமான மால்டோவா முயல்கிறது என அதன் முன்னாள் ஜனாதிபதி இகோர் டோடன் குற்றம்சாட்டியுள்ளார்.
- உக்ரைனின் உணவு தானியங்கள் கருங்கடல் வழியாக செல்வதற்கு பாதுகாப்பு தருவோம் எனவும் எனினும் உக்ரைனிடம் உள்ள தானியங்கள் உலக தேவையுடன் ஒப்பிடும்பொழுது 1% மட்டுமே எனவும் இந்த பிரச்சனையை மேற்கத்திய நாடுகள் ஊதிப் பெரிதாக்குகின்றன எனவும் ரஷ்ய அமைச்சர் லாவ்ரவ் அம்பலப்படுத்தியுள்ளார்.
- ரஷ்ய பண்பாடின் மீது நடத்தப்படும் தாக்குதலின் ஒரு பகுதியாக டால்ஸ்டாயின் உலகப்புகழ் பெற்ற “போரும் சமாதானமும்” எனும் நூல் உக்ரைனில் தடை!