world

img

சிகாகோ வீதிகளில் சிந்திய ரத்தம்... - ப.முருகன்

இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியின் இறுதி சமயத்தில் - நவீன தாராள மய உலகமய யுகத்தில் உழைப்பாளி மக்களின் பணிநிலை, வாழ்நிலை, சமூக, பொருளாதார, அரசியல் நிலை குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை எனும் போது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி கால்பகுதி காலக்கட்டத்தில் எத்தகைய மோசமான நிலையில் இருந்திருக்கும் என்பதை நினைத்தால் இளகிய மனது டையவர்களின் இதய ஓட்டமே நின்றுவிடும். பன்னாட்டு கார்ப்பரேட் பெருநிறுவனங்களின் உலக ளாவிய சுரண்டல், மூலதனக் குவியல் தொழிலாளர்க ளின் சாறைப் பிழிந்து சக்கையாக்கிடவும் பெருமுதலாளி களின் லாபத்தையும் உபரியையும் மென்மேலும் அதிக மாக்கவும், ஏற்கெனவே இருந்த தொழிலாளர் நலச் சட்டங்களை எல்லாம் சிதைத்துச் சீரழித்து சின்னா பின்னமாக்கி வைத்திருக்கும் நிலை உழைப்பாளி மக்களை உருக்குலையச் செய்திட முயல்கிறது. ஆயினும் அதயணற்கெதிரான போராட்டங்களை முன்னெடுக்கவும் முயற்சிக்கவும் வெற்றிபெறவும்  தொழிலாளி வர்க்கம் தொடர்ந்து சமர்க்களத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது தீரமுடன்.

முதலாம் உலகப்போருக்கு முந்தைய முப்பது ஆண்டுகளில் தொழிலாளி வர்க்கம் தனது பணி நிலைமை, வாழ்நிலைமை மேம்பாட்டுக்காக குரல் கொடுத்து ஒன்றுபட்டுப் போராடும் சூழல் ஏற்பட்டது. அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் நான்காம் கால்பகுதியில் தொழிலாளர்கள் மத்தியில் கொந்த ளிப்பு ஏற்பட்டது. நிலப்பிரபுத்துவக் காலத்தைப் போல சூரியன் உதிக்கும் முன்னே வேலைக்குப் புறப்படுவதும் சூரியன் அஸ்தமித்த பின்னேயும் கூட நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்புவதுமான நிலைமையே தொழிலாளர்களுக்கு கதியாக இருந்தது. தொழிற்புரட்சி ஏற்பட்டு நிதி மூல தனம் சுரண்டலை அதிகப்படுத்தி செல்வத்தைக் குவிப்ப திலேயே குறியாக இருந்தது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் குழந்தைகளும் கூட கசக்கிப் பிழியப் பட்டார்கள்.

10 மணி, 12 மணி, 14 மணி நேரம் கூட வேலை வாங் கப்பட்டனர். உண்ணவும் உறங்கவும் அவர்களுக்கு நேர மின்றியும் இடமின்றியும் தொழுவத்தில் துயரப்படும் விலங்குகள் போல் துன்பப்பட்டார்கள். பொழுது போக்கு வதற்கோ, மருத்துவம் செய்து கொள்வதற்கோ கூட அனு மதிக்கப்படாத நிலை. கர்ப்பிணிப் பெண்கள் தொழிற் சாலைகளிலேயே பிரசவம் ஆகிடும் கொடும் பாதக மான சூழ்நிலைதான் அவர்களுக்கு வாய்த்தது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் உழைப்பைச் சுரண்டிக் கொழுத்தார்கள் முதலாளிகள். இங்கிலாந்தின் புதிய காலனியான அமெரிக்காவில் அடிமை வியாபாரமும் நடந்ததால் அவர்களை விலைக்கு வாங்கியவர்கள், இன்றைய கேம்ப் கூலிகள் போல் வேலை வாங்கப்பட்டார்கள். பின்னர் அமெரிக்காவின் தென்பகுதியில் அடிமைகள் ஒழிப்புச் சட்டம் நிறைவேறி னாலும் கூட தொழிலாளர்கள் நிலைமையில் பெரிதாக  மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. ஆனாலும் ஆங்காங்கே மாற்றத்துக்கான வெளிச்சக் கீற்றுகள் தென்படவே செய்தன. இந்த காலக்கட்டத் தில்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி யில் 1848இல் மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டார்கள். வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் எழலாயின. அதையடுத்து ஆங்காங்கே உலகின் பல பகுதிகளிலும் குறிப்பாக முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குட்பட்ட ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை எட்டுமணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக சிறிதும் பெரிதுமாக போராட்டங்கள் நடக்கத் துவங்கின.

1886ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வேலை நிறுத்தமும் போராட்டமும் நடந்தன என்றால் அதற்கு முன்னதாக 1862இல் இந்தியாவில் நடந்தது. 1856இல் ஹவுரா ரயில்நிலையத் தொழிலாளர்கள் 1200 பேர் 8 மணி நேர வேலைக்காக வேலைநிறுத்தம் செய்தனர். அதற்கும் முன்பு 1856இல் ஏப்ரல் 1 அன்று ஆஸ்திரேலி யாவில் நடந்த தொழிலாளர் போராட்டம் தான் உலகின்  முதல் போராட்டம் என்று ரோசாலக்சம்பர்க் குறிப்பிட்டுள் ளார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. முதலா ளித்துவத்துக்கு ஆதரவான அரசின் அடக்குமுறையை எதிர்த்த போராட்டம் இப்படித்தான் துவங்கியது. ஆயினும் ரத்தம் சிந்தி உயிரைத் தந்து முத்திரை பதித்தது சிகாகோ நகரத் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம் தான்.  8 மணி நேர வேலைக்காக உலகின் பல பகுதிகளி லும் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியதை, மாமேதை காரல் மார்க்ஸ் தனது மூலதனம் நூலில், “எட்டு மணி நேர வேலை நாள் என்ற இந்த இயக்கம் அட்லாண்டிக்கி லிருந்து பசிபிக்கிற்கும் புதிய இங்கிலாந்திலிருந்து கலிபோர்னியாவிற்கும் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது” என்று மகிழ்வோடு குறிப்பிட்டி ருக்கிறார்.

ஆயினும் 1883இல் மறைந்துவிட்டார் மார்க்ஸ். அதன் பிறகு தான், அமெரிக்காவில் 8 மணி நேர வேலைக்காக நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் உணர்ச்சிமிகு போராட்டங்கள் நடந்தன. 1886 ஏப்ரல் 25 முதல் மே 4 வரை 19 போராட்டங்கள் நடந்தன என்று முதலா ளித்துவ ஏடுகள் தெரிவித்தன. அதில் சிகாகோ நகரில் மே 1 அன்று நடந்த போராட்டத்தில் 35 ஆயிரம் பேர்  கலந்து கொண்டதாகவும் குறிப்பிட்டன. மே 3, 4 தேதி களில் நடந்த போராட்டங்களில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து பேரணியில் கலந்து கொண்டனர். இந்த எழுச்சியை அடக்கவும் ஒடுக்கவும் அமெரிக்கக் காவல்துறை 12 முறை வன்முறையை ஏவியது. 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. மே 3இல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்ததாக அவர்களது தகவல்  தெரிவித்தது. மே 4 அன்று ஹே - மார்க் கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிர்ப்பலி யானதாக கூறினர். ஆனால் உண்மையில் பலி எண்ணிக்கை அதிகம். அமைதியாக நடந்த பேரணி பொதுக் கூட்டத்தில் இருந்து காவல்துறை மீது வெடி குண்டு வீசியதாகக் கூறியே துப்பாக்கிச்சூட்டை நடத்தி னர் சதிகாரர்கள். 

அந்த பொய்க்காரணத்தைக் கூறியே நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில்தான் தொழிலாளர் தலைவர்களில் 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த ஜுரிகள் 12 பேரும் ஒரே கருத்தைக் கூறி தங்கள் முதலாளித்துவ விசுவாசத்தையும் முக விலாசத்தையும் வெளிப்படுத்தினர். ஏனெனில் அவர்கள் மீதான குற்றம் உண்மையில் நிரூபிக்கப்படவில்லை. தூக்கிலிடப்பட்ட தீரர்கள் 4 பேரின் எங்களது குரல் வளை நெரிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் முழக்கம் ஒலிப்பதைத் தடுக்க முடியவில்லை. அது வரலாற்றில் நிலைத்தது. அந்த வழக்கு அமெரிக்க வரலாற்றி லேயே மோசமானதாக அமைந்தது. ஆனால் அந்தத் தீரமிக்க, ஆவேசத் தீ கொழுந்துவிட்டெரிந்த போராட்டத்தால் தான் 8 மணி நேர வேலை நாள் அமலா னது. தொழிலாளி வர்க்கம் வெற்றி பெற்றது.  இந்த ஹே-மார்க்கெட் தியாகிகளுக்கு 1893ஆம் ஆண்டில் வால்டுஹும் கல்லறையில் நினைவுச் சின்னம்  எழுப்பப்பட்டது. அது இன்னும் மே தினத் தியாகிகளின் தீரத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்க ஆட்சியாளர்கள் போராட்டத்தினால் உயிரி ழந்தவர் என்று கூறி ஒரு காவல் அதிகாரிக்கு ஹே-மார்க்கெட்டில் 1889திலேயே சிலை வைத்தனர். ஆனால் ஒரு மாணவ தீவிரவாதியால் 1969இல் சேதப்படுத்தப்பட்டதால் 1970இல் காவல்துறையாலேயே அது அகற்றப்பட்டது.

சிகாகோ எழுச்சியையடுத்து 1889 ஜூலை 14இல் பாரீஸ் நகரில் ஏங்கெல்ஸ் தலைமையில் கூடிய இரண்டா வது கம்யூனிஸ்ட் அகிலம் அமெரிக்கத் தொழிலாளர்களின் தீரத்தைப் பாராட்டியது. 1890 மே 1ஆம் தேதியை 8 மணி நேர வேலைநாள் கோரிக்கை தினமாகவும் சர்வதேச தொழிலாளர்களின் உரிமை தினமாகவும் சிகாகோ தியாகிகளின் நினைவஞ்சலி தினமாகவும் கடைப்பிடிக்குமாறு அறைகூவல் விடுத்தது. அதன் படியே உலகம் முழுவதும் மே முதல் நாள் உழைக்கும் மக்களின் உரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது.  ரஷ்யாவில் புரட்சி நடந்து தொழிலாளி வர்க்க ஆட்சி அமைந்ததும் பல்வேறு நாடுகளில் சோசலிச அரசுகள் உருவானதும் உலகின் பெரும்பகுதி நாடுகளில் மே 1 விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. நமது இந்தியாவில் 1957 இல் கேரளத்தில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் அமைந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி மே தினத்துக்கு முதன்முதலாக விடுமுறை வழங்கியது. 1967இல் மேற்குவங்கத்தில் ஜோதிபாசு துணை முதல்வராக இருந்த அரசு மே தின விடுமுறையை நடைமுறைப்படுத்தியது. 1970 இல்  தமிழகத்தில் இருந்த கலைஞர் கருணாநிதி தலைமை யிலான திமுக அரசு, மே தினத்துக்கு விடுமுறையை அளித்தது. ஆயினும் நாடு தழுவிய அளவில் 1990இல் தான் வி.பி.சிங் தலைமையிலான அரசு, இடதுசாரி கள் ஆதரவுடன் நடந்த ஆட்சியின் போது மே தினத்தை விடுமுறை தினமாக அறிவித்தது. சரியாக நுறாண்டு க்குப் பிறகு இந்தியாவில் மே தின விடுமுறை ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இன்றைய காவி கார்ப்பரேட் ஆதரவு மோடி  ஆட்சியில் தொழிலாளர் நலச் சட்டங்கள் எல்லாம் ஒழித்துக் கட்டப்பட்டுள்ள நிலையில், அரசுத் துறைகளி லேயே ஒப்பந்தத் தொழிலாளர் முறை அதிகரிக்கும் நிலையில் சொல்லப்போனால் அரசுத் துறைகள் எல்லாம் தனியாருக்குத் தாரை வார்க்கப்படும் நிலை யில் 8 மணி நேர வேலை நாள் என்பது மிகுந்த முக்கி யத்துவம் உடையதாகிறது. ஏனெனில் கொரோனா  தொற்றைக் காரணம் காட்டி தனியார் தொழிற்சாலை கள் பெரும்பாலும் 10 மணி நேரம், 12 மணி நேரம் என வேலைநேரத்தை அதிகரித்துள்ள சூழ்நிலையில் இந்த மே தினம் இன்னும் அதிக அர்த்தமுடையதாகிறது. வாழ்க மே தினம்!