மெக்சிகோவில் மெட்ரோ ரயில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 23 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வட அமெரிக்காவின் மெக்சிகோ நாட்டில் திங்களன்று இரவு மெட்ரோ ரயில் மேம்பாலம் இடிந்து விழுந்தது. ரயில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தால் பாலத்தின் கீழ் நின்று கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இந்த விபத்தில் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 70 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து மெக்சிகோ காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.