மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாலத்தீவு தலைநகர் மாலேவில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் தரை தளத்தில் வாகனம் பழுதுபார்க்கும் கராஜ் ஒன்று உள்ளது. நேற்று நள்ளிரவு அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வீடுகள் இருக்கும் மேல் தளங்களிலும் தீ பரவியது. இந்த விபத்தில் 9 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்களை இந்திய வெளியுறவுத்துறை திரட்டி வருகிறது.