world

img

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு அமெரிக்கா, சீனாவுக்கு தலா 40 தங்கம்

பாரிஸ், ஆக. 11-  33-வது ஒலிம்பிக் திருவிழா பாரிஸில் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் ஞாயிறன்று (ஆக.11) நிறைவடைந்தது. அமெரிக்கா 40 தங்கம் 44 வெள்ளி, 42 வெண்கலம் என 126 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 

ஆசிய நாடுகள்

ஆசியாவை சேர்ந்த சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என 91 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது. ஜப்பான் 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என 45 பதக்கங்களுடன் 3வது இடத்தை பிடித்தது. முதல் பத்து இடங்களில் சீனா, ஐப்பான் தென்கொரியா ஆகிய 3 ஆசிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் இருந்து 16 வகையான விளையாட்டுகளில் 112 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்த னர் (மொத்தம் 117 பேர் கொண்ட அணியில் 5 பேர் மாற்று வீரர்கள்). இதில் இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கம் வென்று பதக்கப்பட்டியலில் 71வது இடத்தை பிடித்தது.

இந்தியாவை  முந்திய பாகிஸ்தான்

பாகிஸ்தான் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தனது பதக்கக் கணக்கைத் தொடங்கியது.  ஈட்டி எறிதல் போட்டியில் அந்நாட்டின்  அர்ஷத் நதீம், 92.87 மீ தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இதனால் பாகிஸ்தான் பதக்கப்பட்டியலில் 53வது இடத்தில் இடம்பெற்றது.

இந்தியா வென்ற பதக்கங்கள்

துப்பாக்கி சுடுதலில் மகளி ருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி கள் பிரிவில் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மனுபாகர் வெண்கலப் பதக்கம் வென்றார். அதேவேளையில் ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசி ஷனில் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றார். ஆடவர் ஹாக்கியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. ஆடவருக்கானஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஆடவருக்கான மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றார். 

பாரிஸ் ஒலிம்பிக் திருவிழாவில் 42 வகையான விளையாட்டுகளில், 329 பிரிவுகளில் போட்டிகள் நடை பெற்றன. இம்முறை ஸ்கேட் போர்டிங், பிரேக்கிங், சர்ஃபிங், ஸ்போர்ட் க்ளைம்பிங் ஆகிய 4 விளை யாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டி ருந்தன. கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கிய  இந்த விளையாட்டு திரு விழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.  இந்நிலையில் கடந்த 16 நாட்களாக நடைபெற்ற வந்த ஒலிம்பிக் திருவிழா ஞாயிறன்று முடிவடைந்தது. வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் பிரியா விடைபெற்றனர். 

இரவு 12.30 மணி அளவில் பிரம்மாண்டான நிறைவு விழா 80 ஆயிரம் பேர் அமரக்கூடிய தி ஸ்டேட் டி பிரான்ஸ் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நடை பெறும் அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை துப்பாக்கிசுடுதல் வீராங்கனையான மனு பாகரும், ஹாக்கி வீரரான பி.ஆர்.ஜேஷும் ஏந்தி வந்தனர். கோலாகலமாக நடை பெற்ற நிறைவு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து நடனமாடினர். இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்  அடுத்த ஒலிம்பிக்

 நிறைவு விழாவின் இறுதியில் ஒலிம்பிக் கொடிஇறக்கப்பட்டு அடுத்த ஒலிம்பிக் (2028) நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேயரிடம் ஒப்படைக்கப்பட்டது.