பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ள ஈபிள் கோபுரம் மேலும் 20 அடி உயர்ந்தது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 1889 ஆம் ஆண்டு கஸ்டவ் ஈபிள் என்பவரால் கட்டப்பட்ட ஈபிள் கோபுரமானது உலக அளவில் புகழ்பெற்ற ஒன்று. இது பிரபல சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.
கடந்த 1929ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிறைஸ்லர் கட்டிடம் கட்டி முடிக்கும் வரை ஈபிள் கோபுரம் தான் உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்து வந்தது. இந்த கோபுரம் 986 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட நிலையில், வானொலி ஒலிபரப்புக்காகக் கோபுரத்தின் உச்சியில் ஏராளமான அலைக்கம்பம் (ஆண்டெனா)பொருத்தப்பட்டதைத் தொடர்ந்து அதன் உயரம் 1,063 அடியாக உயர்ந்தது.
இந்நிலையில், 20 அடி உயரம் கொண்ட டிஜிட்டல் வானொலி ஆண்டெனா ஈபிள் கோபுரத்தில் புதிதாகப் பொருத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் ஈபிள் கோபுரத்தின் உச்சியிலிருந்து இறக்கப்பட்ட இந்த புதிய ஆண்டெனாவை பணியாளர்கள் 10 நிமிடங்களில் பொருத்தினர். இதன் மூலம் ஈபிள் கோபுரத்தின் உயரம் மேலும் 20 அடி உயர்ந்து 1,083 அடியாக உள்ளது.