world

img

வினேஷ் போகத்திற்கு எதிராக மோடி அரசு சதி? 150 கிராம் எடைக்காக தகுதிநீக்கம்

பாரீஸ், ஆக.7 - 150 கிராம் எடை கூடுதலாக இருந்ததைக் காரணம் காட்டி பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள் ளார் இந்தியாவின் மிகச்சிறந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். இந்த விவகாரத்தில் மோடி அரசுக்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன.

33ஆவது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர்  மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் வினேஷ் போகத் நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் சுசாசியையும், காலிறுதி ஆட்டத்தில் உக்ரைனின் லிவாச்சையும், அரையிறுதியில் கியூபாவின் குயுஜ்மானையும் வீழ்த்தி வெற்றிகரமாக இறுதிக்கு முன்னேறி னார். பாரீஸ் ஒலிம்பிக்கில் இதுவரை வெண்கலப்பதக்கத்தை மட்டுமே வென்றுள்ள இந்தியாவிற்கு, இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய வினேஷ் போகத் மூலம் வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் கிடைக்கும் என்பதால் இந்திய ரசிகர்கள் உற்சாகமானார்கள். வினேஷ் போகத் இறுதிக்கு முன்னேறி யதை ஒட்டுமொத்த நாடே சமூகவலைத்தளங்களில் கொண்டாடியது. ஆனால் இந்த கொண்டாட்டம் 5 மணிநேரம் கூட நீடிக்கவில்லை. 

150 கிராம் எடைக்காக...

இறுதிப் போட்டியில் வினேஷ் போகத் அமெரிக்க வீராங் கனை சாராவை எதிர்கொள்ளவிருந்த நிலையில், இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி புதனன்று நள்ளிரவு 11:23 மணிக்கு  நடைபெறும் என பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டி அட்டவணையில் தகவல் தெரிவித்தது.

அரையிறுதிச் சுற்று முடிந்த பின்பு திடீரென வினேஷ் போகத்திற்கு இந்திய ஒலிம்பிக் கட்டுப்பாட்டு குழு எடை பரிசோதனை செய்துள்ளது. இந்த சோதனை முடிவில் வினேஷ் போகத் 2 கிலோ எடை கூடியுள்ளதாகவும், எடையை குறைக்க வேண்டும் எனவும் பயிற்சியாளர் கூறியுள்ளார். இதனால் இரவு முழுவதும் உணவு உண்ணாமல் சைக்கிளிங், ஸ்கிப்பிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை தீவிரமாக மேற்கொண்டார். இந்திய நேரப்படி புதனன்று காலை பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த பிரிவு வினேஷ் போகத்தின் உடல் எடையை சோதித்த நிலையில், வினேஷ் போகத் 50.150 கிலோ எடை இருந்தார். இன்னும் 150 கிராம் மட்டுமே உள்ளது அதனையும் குறைக்கிறேன் என  சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் கோரிக்கை  விடுத்தார். ஆனால் சர்வதேச ஒலிம்பிக் சங்க  நிர்வாகிகள் அனுமதி வழங்கவில்லை. இறுதியில் 150 கிராம் (50.150 கிலோ) கூடுதல் எடைக்காக வினேஷ் போகத் பாரீஸ்  ஒலிம்பிக் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது. 

இது ஒட்டுமொத்த இந்தியாவை யும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பஜ்ரங் புனியா பேச்சால் பாஜக சூழ்ச்சி?

மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் பாஜக எம்.பி.,யும், முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷணுக்கு எதிராக 2023 முதல் 8 மாத காலமாக தில்லி ஜந்தர் மந்தரில் 2 கட்டமாக தொடர் போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் வினேஷ் போகத் என்பது கவனிக்கத்தக்கது. சொந்த கட்சி எம்.பி., என்பதால் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்கா மல்; போராடிய வினேஷ் போகத், சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா என 50க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் மீது மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல் துறை தாக்குதல் நடத்தி, போராட்டக் களத்தை கலைத்தது. சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளாத நிலையில், வினேஷ் போகத் தீவிர பயிற்சியுடன் பாரீஸ் ஒலிம்பிக்தொட ரில் களமிறங்கினார். கடும் பயிற்சியின் விளைவாக ஒலிம்பிக் தொடரில் வினேஷ் போகத் ஒரே நாளில் உலகின் 3 முக்கிய வீராங்கனைகளை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.

பஜ்ரங் புனியாவின் பதிவு

வினேஷ் போகத் இறுதிப் போட்டி க்கு முன்னேறியதை ஒட்டுமொத்த நாடே கொண்டாடிய நிலையில், இந்தியாவின் மூத்த மல்யுத்த வீரரும், மல்யுத்த வீராங்கனைகள் போ ராட்டத்தை முன்னின்று நடத்தியவரு மான பஜ்ரங் புனியா தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற வினேஷ் போகத், இந்தியாவின் பெண் சிங்கம். 4 முறை உலகச் சாம்பியன் மற்றும் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனை அவர் வீழ்த்தியுள்ளார். அதன் பிறகு காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை தோற்கடித்தார். ஆனால் ஒரு விஷயம் சொல்கி றேன். இந்தப் பெண் தன் சொந்த  நாட்டிலேயே அடித்து நொறுக்கப் பட்டார். தன்னுடைய நாட்டின் தெருக்களில் இழுத்துச் செல்லப் பட்டார். உலகையே வெல்லப் போகும் இந்தப் பெண் இந்த நாட்டின் அமைப்பிடம் தோற்றார். பிரதமர் மோடி வினேஷ் போகத்திற்கு போன் செய்யும் தருணத்திற்காக காத்தி ருக்கிறேன். 

அவர் மீண்டும் இந்தியாவின் மகள் ஆகிவிடுவார். தில்லியில் நாங்கள் போராடிய பொழுது ஒரு வார்த்தை கூட பேசாத மோடிக்கு, வினேஷ் போகத்திற்கு போன் செய்து வாழ்த்து சொல்லும் துணிவு எங்கிருந்து வரப்போகிறது என்பதை காண ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன்” எனக் கூறினார்.

பஜ்ரங் புனியாவின் இந்த பேச்சு பாஜக மற்றும் மோடி அரசுக்கு எதிராக திரும்பியது. சமூகவலைத் தளங்களில் வினேஷ் போகத்திற்கு வாழ்த்து தெரிவித்ததை விட, பிரத மர் மோடி, பிரிஜ் பூஷண் சிங், பாஜக ஆகியோருக்கு எதிராக கடு மையான விமர்சனங்கள் மீம்ஸ்க ளாக மாறிய நிலையில், நையாண்டியு டன் கார்ட்டூன்களும் அனல் பறந்தன. சமூக வலைதளங்களின் தற்போ தைய விமர்சனங்கள், வினேஷ் போகத் பதக்கம் வென்றால் மேலும் தீவிரமாகும் என்பதால் பாஜக பதற்றத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.  

”வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் தொடர்பாக விடை தெரியாத பல்வேறு கேள்விகள் எழுகின்றன. மல்யுத்த வீராங்கனைகள் நடத்திய போராட்டங்களின் போது வினேஷ் போகத்தை ஒன்றிய அரசு நடத்திய விதம்,  தகுதி நீக்கத்திற்கான அச்சங்களுக்கு மேலும் நம்பகத்தன்மையை அளிக்கிறது. முடிவைப் பொருட்படுத்தாமல், வினேஷ் ஒரு சாம்பியன்; எப்போதும் சாம்பியன் நபராகவே இருப்பார். அவருக்கு நம் அனைவரின் ஆதரவும் நல்லெண்ணமும் தேவை”  

- சீத்தாராம் யெச்சூரி
பொதுச் செயலாளர், சிபிஐ(எம்)

உள்ளடி வேலையா?

செவ்வாய் பொழுது கழிந்து புதனன்று இரவு இறுதிப் போட்டியை ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டி ருந்த நிலையில், புதனன்று காலை எடை கூடியதால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சர்வ தேச ஒலிம்பிக் கமிட்டி திடீரென அறிவித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, வினேஷ் போகத் உள்ளிட்ட வீராங்கனைகள் மீது அடக்குமுறை ஏவியும், அவர் வெற்றியின் விளிம்பில் நின்றதால், மோடி அரசு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கம், பயிற்சியாளர்கள் மூலம் ஏதெனும் உள்ளடி வேலைகளை அரங்கேற்றி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

வலுக்கும் சந்தேகங்கள்

1 அரையிறுதி போட்டிக்கு முன்  சரியான எடையுடன் சென்ற வினேஷ் போகத்தை, அரையிறுதி போட்டி முடிந்த
வுடன் தன்னிச்சையாக எடை பார்க்க கூறியது யார்?
2 எப்பொழுது வேண்டுமானாலும் எடை சோதனை செய்து கொள்ளலாம் என்ற நிலையில், இறுதிப்போட்டிக்கு 12 மணிநேரம் இருக்கும் பொழுது, அரையிறுதிப் போட்டி முடிந்த 5 மணிநேரத்திற்குள் அவசர அவசரமாக எடை பரிசோதனை செய்யச் சொன்னது யார்?
3 சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் முன்கூட்டியே எதற்காக வினேஷ் போகத்திற்கு மட்டும் 15 நிமிட அவகாசம் கொண்ட இறுதிக்கட்ட எடை பரிசோதனை செய்தது? 30 நிமிடம் அவகாசம் கொண்ட முதற்கட்ட பரிசோதனை செய்யாதது ஏன்?
4 150 கிராமை குறைக்க கூடுதல் அவகாசம் கோர இந்திய ஒலிம்பிக் சங்கம், பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டியுடன் பேசவில்லை, ஏன்? பயிற்சியாளர்கள் எங்கே சென்றனர்?
5 ஒலிம்பிக்கில் நல்ல அனுபவம் கொண்ட பி.டி.உஷா (பாஜக எம்.பி., - இந்திய ஒலிம்பிக் பொறுப்பாளர்) எங்கே சென்றார்? சம்பவ இடத்தில்  வினேஷ் போகத்திற்கு ஆதரவாக பரிந்துரைக்காதது ஏன்?
6 இறுதிப்போட்டியில் பங்கேற்கும் மற்றொரு வீராங்கனையான சாரா, மிகச் சரியாக 50 கிலோ இருந்தாரா? அவரது எடையை ஒலிம்பிக் கமிட்டி சரியாக அளவிட்டதா? அவரின் எடை தொடர்பான முடிவு எங்கே? 
-என பல்வேறு  கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் மூலம் வினேஷ் போகத்திற்கு எதிராக
மோடி அரசு சதி செய்துள்ளதாக சந்தேகம் வலுத்துள்ளது.