காசாவில் மனிதாபிமான உதவி வழங்க வந்த நிவாரண வாகனத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் வாகனத்தின் பாது காப்பிற்காக இருந்த 4 நிராயுதபாணி பாலஸ் தீனர்களையும் சுட்டுப் படுகொலை செய்துள் ளது. இந்த தாக்குதல் எந்த ஒரு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையும் இன்றி நடத்தப்பட்டுள்ளது. வழக்கம் போல சர்வதேச சட்டங்களை மீறிவிட்டு நிவாரணப் பொருட்கள் இருந்த வாகனத்தில் ஆயுதங்கள் இருந்ததாக இஸ்ரேல் ராணுவம் ஆதாரம் இன்றி பிரச்சாரம் செய்து வருகிறது.