இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், பாலஸ்தீனத்தில் கடுமையான உணவு பஞ்சம் நிலவுகிறது.
இந்நிலையில், காசாவிற்குள் இஸ்ரேல் ராணுவம் கொண்டு செல்லும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் கெட்டுப்போன பிறகு பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள பகுதியில் தூக்கி எறிந்து விட்டு சென்றுவிடுவதாகவும்
கொடுமையான பசியில் உள்ள பாலஸ்தீனர்கள் அந்த கெட்டுப்போன உணவுப்பொருட்களை சாப்பிட்டு மிக மோசமான வயிற்றுப் பிரச்சனைகளுக்கு உள்ளாவதாகவும், சமீபத்தில் குழந்தைகள் பெண்கள் என 15 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக காசா பகுதியில் உள்ள மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.