world

ஐநா பள்ளியில் இஸ்ரேல் குண்டுவீச்சு 14 குழந்தைகள் உட்பட 30 பேர் படுகொலை

காசா, ஜூன் 6 - பாலஸ்தீன அகதிகளுக்கான நுசிரத் முகாம் பகுதியில் இருந்த ஐ.நா  பள்ளிக்கூடம் மீது சர்வதேச சட்டங் களை மீறி இஸ்ரேல் ராணுவம் குண்டு களை வீசி தாக்குதல் நடத்தி யுள்ளது.

பாலஸ்தீனர்களுக்கான நிவாரண முகாம்களாகவும் தங்குமிடமாகவும் ஐ.நா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சர்வதேச சட்டங் களை மீறி அந்த பள்ளி மீது  இஸ்ரேல் ராணுவம் இரவில் குண்டுவீசி  14 குழந்தைகள் உட்பட 30 பாலஸ்தீனர் களை படுகொலை செய்துள்ளது.  பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே மற்றொரு பகுதி யில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் பலியாகினர்.