world

img

இம்ரான் கான் மீதான கொலை வழக்கு தள்ளுபடி

இஸ்லாமாபாத், ஆக. 28 - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான கொலைக் குற்ற வழக்கை பாகிஸ்தான் நீதி மன்றம்  தள்ளுபடிசெய்தது.   2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நம்பிக்கை வாக் கெடுப்பில் இம்ரான் கான்  தோல்வியடைந்த பின்னர், அரசியலமைப்பிற்கு முரணாக பாகிஸ்தான் நாடா ளுமன்றத்தை கலைத்ததற் காக அவர் மீது தேசத்து ரோக வழக்கு  தொடரப்பட வேண்டும்  என பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்  அப்துல் ரசாக்  மனு தாக்கல் செய்திருந்தார். இதனை தொடர்ந்து, வழக்கறிஞர் அப்துல் ரசாக், காரில் பயணம் செய்து கொண்டு இருந்த போது  மர்ம நபர்கள் நடத்திய திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இக்கொலையில் இம்ரான் கானுக்கு தொடர்பு இருப்ப தாக  ரசாக்கின் மகன் புகார் தெரிவித்ததையடுத்து, இம்ரான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கே தற்போது  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான்  ராணுவத்து டனான கருத்து மோதலு க்குப்  பின்னர்  அதிகாரத்தை இழந்த இம்ரான்கான், மக்கள் ஆதரவைத் திரட்ட முயன்றபோது அவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல வழக்குகள் தொடரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கருவூல பரிசுப் பொருட் களை முறைகேடாக விற்ற விபரங்களை மறைத்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.